search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேயிலை தோட்டம்"

    • வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்தன.
    • யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை, கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சிமுனை, பிர்லா நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலாதலங்களை காண ஏராளமான சுற்றுலாபயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் அமைந்துள்ள வால்பாறை மலைப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வனப்பகுதியில் பசுமை நிறைந்து காணப்படுவதால் மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் யானைகள் பல்வேறு எஸ்டேட்களில் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன.

    குறிப்பாக குரங்கு முடி, வில்லோனி, பன்னிமேடு, அய்யர்பாடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் அச்சத்துடனேயே ஈடுபட்டுள்ளனர்.

    தென்மேற்கு பருவமழைக்கு பின் வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால் தேயிலை எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் திருப்திரகமாக இருப்பதால் யானைகள் இங்கு வருகின்றன.

    மனித விலங்கு மோதலை தடுக்க யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வால்பாறையில் எஸ்டேட் தொழிலார் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் விரும்பி உட்கொள்ளும் வாழை, பலா, கொய்யா மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. யானைகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி உணவு கிடைப்பதால் குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.

    யானைகளுக்கு பிடித்தமான தோட்டப்பயிர்களை குடியிருப்பு பகுதிகளில் பயிரிட வேண்டாம் என்று வனத்துறையினர் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அதை எஸ்டேட் நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
    • இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    ▪️ தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக பெற்று வழங்க அரசு நடவடிக்கை.

    ▪️ மணிமுத்தாறு அருகே அரசு சார்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 240 வீடுகளை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு தயராக உள்ளது. இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    ▪️ ₹11.54 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீட்டுக்கு அரசு ₹8.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதம் ₹3.04 லட்சத்தை மட்டும் பயனாளிகள் செலுத்த வேண்டும். கூடுதல் மானியம் அளித்து வீடுகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

    ▪️ 55 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஏற்பாடு செய்ய அரசு தயார்.

    ▪️ இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    ▪️ சிறு கால்நடைப் பண்ணை அமைக்க அல்லது கறவை மாடுகள், ஆடுகள் வாங்கிட வட்டியில்லாத கடன் வழங்க நடவடிக்கை.

    ▪️ குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர்க்கவும், விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றி வழங்க ஒற்றைச் சாரள முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் 'பர்மா பாம்பே டிரேடிங் கம்பெனி' நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வருவாய்துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    • பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

    இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • அசாம் மாநிலம் சென்ற பிரதமர் மோடி ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    கவுகாத்தி:

    பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார்.

    இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    • இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள்.


    இந்தநிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது. 

    இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. சாலை பழுதடைந்து உள்ளதால், யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலை இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காட்டுயானை கூட்டம் விலகி சென்றது.
    • பிறந்து 1 வாரமே ஆன குட்டியானை

    பந்தலூர்

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே சேலக்குன்னு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு குட்டியானை இறந்து கிடப்பதாக பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் கிருபாகரன், வனவர்கள் பெலிக்ஸ், ஜார்ஜ், பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

    ஆனால் அங்கு தாய் யானை அடங்கிய காட்டுயானை கூட்டம் முகாமிட்டு இருந்தது. இதனால் வனத்துறையினர் அருகில் செல்ல முடியவில்ைல. சிறிது நேரம் கழித்து காட்டுயானை கூட்டம் அங்கிருந்து விலகி சென்றது. இதையடுத்து வனத்துறையினர் அருகில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது இறந்து கிடப்பது பிறந்து 1 வாரமே ஆன குட்டியானை என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிதிர்காடுவனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டியானையின் உடலை கூடலூர் வன அலுவலர் ஓம்கார், உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார், நெலாக்கோட்டை கால்நடை டாக்டர் சாருண்யா மற்றும் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் இறந்தது பெண் குட்டியானை என்பதும், உடல் நலக்குறைவால் இறந்துள்ளதும் தெரியவந்தது.

    • கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது
    • யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம், கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது.

    நேற்று காலை, 5:45 மணிக்கு யானை சத்தமிட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, தேயிலை தோட்டத்தில் யானை குட்டி ஈன்றது தெரியவந்தது.

    உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் காலன் தலைமையில், வன ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்

    . ஒரு மணி நேரத்துக்கு பின், யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது. 2 கி.மீ., துாரம் சென்ற யானை தேயிலை தோட்டம் ஒட்டிய வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டது.

    வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைக் குட்டி நல்ல நிலையில் உள்ளது. தாய் பால் குடித்து வருகிறது. அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடையூறு ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களை அப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை என்றனர்.

    ×