search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில அளவை"

    • நில அளவையர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
    • பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையர் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் அளிக்கும் நில உட்பிரிவு மனுக்கள் கிடப்பில் வைக்கப்படுகிறது. தற்போது பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்கப்படாமல் குவிந்துள்ளது.

    அரசின் விதிமுறைப்படி நில உட்பிரிவு மனு அளித்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவை துறையினரின் கடமை. ஆனால் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் 2 மாதத்திற்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவு மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ளன.

    மனு அளித்தவர்கள் நில அளவை பிரிவு அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அலைகின்றனர். நில அளவிற்கு முறைப்படி பணம் செலுத்தி பதிவு செய்து ஏராளமான விவசாயிகள் தங்கள் மனு மீது எப்போது அளவை உட்பிரிவு செய்யப்படும் என தெரியாமல் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, நில அளவையர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் மனுக்கள் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நில அளவை உட்பிரிவு செய்து தர முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    • கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.
    • டிஜிட்டல் நிலஅளவை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநிலஅளவை பணியினை நவம்பர் 1-ம் தேதி முதல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்பொருள் குறித்து ஏற்கெனவே கடந்த 09-11-2022 அன்று வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள். இருப்பினும், மீண்டும் இது குறித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

    கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தினை சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

    அதில், மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.

    மேற்குறிப்பிட்ட விவரப்படி தொடர்புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு தேதியினை முடிவு செய்து தகவலினை கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு கடித வரைவு மூலம் தெரிவிக்கவும், அந்த கூட்டு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.

    மேலும், இது தொடர்பாக தமிழக - கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    எனினும், தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறினார்.
    • நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    மெலட்டூர், அக்.13-

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சியில் பெருங்கரை கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி மயான பாதையை அரசு மூலம் புதுப்பிக்க தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து பெருங்கரை கிராமமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பாபநாசம் தாசில்தாரிடம் மயானபாதையை சர்வே செய்து தரும்படி மனு கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, ஒன்றிய உதவிபொறியாளர் கார்த்திகேயன், வடக்கு–மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச் செல்விகனகராஜ் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் பாபநாசம் குறு வட்ட நில அளவையர் செல்வக்குமார், அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், கிராமநிர்வாக அதிகாரி லதா உள்பட வருவாய் துறையினர் மயான பாதைக்குரிய பகுதியை நில அளவை செய்து கல் நட்டனர்.

    நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    • குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
    • குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கொடுமுடி:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் ரூ.38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23-ந் தேதி தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த கொள த்துப்பாளையம் கிராமம் கொம்பனைபுதூரில் உள்ள குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உடனடியாக மேற்படி இடத்தை சர்வே செய்து நடவடிக்கை எடுக்கும் படி கடந்த 28.6.22 அன்று தீர்ப்பு வழங்கியது.

    அதன் பேரில் கொடு முடி தாசில்தார் மாசிலா மணி தலைமையில் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் முன்னி லையில் குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    நிலஅளவையின் போது கிளாம்பாடி பிர்க்கா நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கொளத்துப்பாளையம் சுசீலா, கொளாநல்லி பிரகாஷ், ஊஞ்சலூர் ரமேஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×