என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"

    • உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்து காட்டுவது அவரது சிறப்பு.
    • வீடியோ காட்சியை 71 கோடியே 20 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    உடற்பயிற்சியாளர் ஒருவர், வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து தண்ணீரில் முகம் கழுவும் வீடியோ சமூக வலைத்தளத்தில் 71 கோடி முறை ரசிக்கப்பட்டு உள்ளது. ஆஷ்டன் ஹால், உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அமெரிக்க ஆணழகன் ஆவார். அவர் தனது உடற்பயிற்சி மற்றும் பழக்கங்களை வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடுகிறார். அவரை 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

    உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்து காட்டுவது அவரது சிறப்பு. அவர் சமீபத்தில் தனது காலை பழக்க வழக்கம் என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

    அதில் ஒரு கண்ணாடி கோப்பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பிய நீரில் முகத்தை அமிழ்த்தி எடுப்பதுடன், பின்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து கழுவுகிறார். இதனால் முகம் பொலிவு பெறுவதாக அவர் விளக்குகிறார். இந்த வீடியோ காட்சியை 71 கோடியே 20 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    • பதிவு இணையத்தில் வைரலாகி திருமண செலவுகள் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திருமணம் முடிவானதும் மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமண அழைப்பிதழை தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துமாறு அழைப்பது வழக்கம். அதுபோல் ஒரு மணப்பெண் தனது நீண்ட கால தோழிக்கு தனது திருமணத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்ததோடு, நீதான் மணப்பெண் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதன் பின் ஒருவாரம் ஆன நிலையில் மணப்பெண்ணின் தோழி மணப்பெண்ணுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில், நான் மணப்பெண் தோழியாக வருவதற்கு உடை, சிகை அலங்காரம், மணப்பெண்ணுக்கான பரிசு, விருந்துக்கான வைப்புத்தொகை மற்றும் இதர செலவுகளுக்கான கூடுதல் கட்டணம் என சில கட்டண விபரங்களை குறிப்பிட்டு மொத்தமாக ரூ.70 ஆயிரம் அனுப்பினால் திருமணத்தில் பங்கேற்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண் தனது நிதி நிலைமையை விளக்கினார். ஆனாலும் மணப்பெண்ணின் தோழி அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக மணப்பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி திருமண செலவுகள் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • வலைதள பயனர்கள் பலரும் கேப் டிரைவரின் வெளிப்படையான அறிவிப்பை பாராட்டி வருகின்றனர்.
    • சில பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டனர்.

    போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூரு நகரில் வாகன ஒட்டிகள் சிலர் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரங்கள், வசதிகள் செய்திருந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்து வைத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு வைரலாகி வருகிறது.

    அதில், எச்சரிக்கை! வாகனத்தில் ஜோடிகள் ரொமான்ஸ் செய்யக்கூடாது. இது ஒரு கேப் வாகனம். இது உங்கள் தனிப்பட்ட இடமோ அல்லது ஓயோவோ அல்ல. எனவே தயவு செய்து தூரத்தை கடைபிடித்து அமைதியாக இருங்கள். மரியாதை கொடுங்கள், மரியாதை பெறுங்கள் என எழுதப்பட்டிருந்தது.

    வைரலான இந்த எச்சரிக்கையை பார்த்த வலைதள பயனர்கள் பலரும் கேப் டிரைவரின் வெளிப்படையான அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். சில பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டனர்.

    • ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார்.
    • ஒட்டகத்தை துன்புறுத்திய செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகத்தை துன்புறுத்தி அதன் மீது ஏறி ஒரு இளம்பெண் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனுமன் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

    அதில், வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தெருவில் ஒரு கயிற்று கட்டில் உள்ளது. அதன் மீது ஒட்டகத்தை படுக்க வைத்து, அதன் இரு கால்களையும் கட்டி உள்ளனர். பின்னர் அந்த ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார். பொழுதுபோக்கிற்காக இவ்வாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ஒட்டகத்தை துன்புறுத்திய இந்த செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    • 6 வயது சிறுமி ரோகித் சர்மாவை போல் புல்ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • பயனர்கள் பலரும் சிறுமி சோனியா கானின் திறமையை பாராட்டி பதிவிட்டனர்.

    கிரிக்கெட் விளையாட்டு சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த சோனியா கான் என்ற 6 வயது சிறுமி ரோகித் சர்மாவை போல் புல்ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், சிறுமிக்கு ஒருவர் பந்து வீசுகிறார்.

    அப்போது சோனியா கான் ரோகித் சர்மாவை போலவே புல்ஷாட் அடிக்கிறார். இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

    பயனர்கள் பலரும் சிறுமி சோனியா கானின் திறமையை பாராட்டி பதிவிட்டனர். ஒரு பயனர், சோனியா கான் ஒரு தொழில்முறை நிபுணரை போல விளையாடுகிறார் என பதிவிட்டார்.



    • நகரின் பல்வேறு இடங்களிலும் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தார்.
    • பாசப்பிணைப்பை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகியது.

    டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வந்தார். சார்லி என்று பெயரிடப்பட்ட அந்த நாய் திடீரென காணாமல் போனது. பாசமாக வளர்த்து வந்த சார்லி காணாமல் போனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை கண்டுபிடிப்பதற்காக நகரின் பல்வேறு இடங்களிலும் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தார்.

    விடாமுயற்சி தோற்று போகாது என்பது போல அந்த விளம்பரம் மூலம் சார்லி உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக புறப்பட்ட அந்த வாலிபர் சார்லி இருக்கும் இடத்தை அடைந்தார். அங்கு அவரை பார்த்த சார்லி ஓடோடி வந்து வாலிபரை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியது. இந்த பாசப்பிணைப்பை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகியது.

    • விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பணியாற்றுவதற்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
    • பூஜ்ய புவியீர்ப்பில் பறந்த இளவயது நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றான்.

    பூமி தன்னை நோக்கி பிற பொருட்களை ஈர்க்கும் விசையை புவிஈர்ப்பு விசை என்கிறோம். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றால் அங்கு புவியீர்ப்பு விசை என்பது கிடையாது. இதனால்தான் விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பணியாற்றுவதற்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கிறார்கள். இதற்காக பூஜ்ய புவியீர்ப்பு அறையில் அவர்கள் அடைக்கப்பட்டு சிறப்பு பயிற்சிகள் பெறுவார்கள்.

    இந்தநிலையில் சிறுவன் ஒருவனுக்கும் அதுபோல பறக்கும் ஆசை ஏற்பட்டது. இதனால் 8 வயதில் புவியீர்ப்பு விசை இல்லாத அறையில் பறந்து சாதனை படைத்து உள்ளான். அமெரிக்காவை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் ஜாக் மார்ட்டீன். அவன் பூஜ்ய புவியீர்ப்பு அறையில் விண்வெளி வீரர்களுடன் இணைந்து பறந்தான். இதன் மூலம் பூஜ்ய புவியீர்ப்பில் பறந்த இளவயது நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றான். அவனுடைய இந்த சாதனை வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அவன், இப்படி பறந்ததாக பலரும் விமர்சன கருத்து வெளியிட்டனர்.



    • அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் பயணிகள் வாகனங்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். வாகனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்.

    அதாவது, இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மூன்று சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது குறைந்தது 4 பேர் வரை பயணிக்கலாம். அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் டிரைவரை தவிர்த்து 3 பேர் பயணிக்கவும் முன் இருக்கையில் அமர்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு உள்ளது.

    இதேபோல் மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தனக்கு இல்லை என்பது போல ஒரு ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி BKD சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் பள்ளி சீருடையில் பல குழந்தைகள் இருப்பதை கண்ட போலீசார் உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டிரைவரின் முன்பக்க இருக்கையில் குறைந்தது 3 பள்ளி குழந்தைகள், பின் இருக்கையில் 11 பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

    கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் விக்கி மற்றும் பியா. காதலர்களான இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக சொந்த ஊரான பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.

    பெங்களூருவில் உள்ள திறந்தவெளி தோட்டத்தில் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோ ஷூட்' நடத்தினர். அப்போது வண்ணப்புகை குண்டுகள் வெடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பில் புதுபெண்ணை மணமகன் அலேக்காக தூக்கி கொண்டாடியபோது வண்ணப்புகை குண்டுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதற தொடங்கின.

    அப்போது எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது. இதனால் அவர் வலியில் துடித்து கதறினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடலின் முகுது மற்றும் இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் அவருடைய தலைமுடியும் எரிந்து கருகி இருந்தது.

    இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.



    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது.
    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒருவர் பதிவிட்டார்.

    வடக்கு சிக்கிமில் உள்ள ஒரு கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த குப்பைகளை டென்மார்க் சுற்றுலா பயணிகள் சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள யும்தாங்க் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா வந்த அவர்கள் அங்கு சாலையோரம் குப்பைகள் கிடப்பதை கண்டனர். உடனே அந்த குப்பைகளை எடுத்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. உள்ளூர் மக்கள் அலட்சியமாக இருந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒருவர் பதிவிட்டார்.



    • நாய்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுக்க ஏராளமானோர் திரளுகின்றனர்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    உலகம் முழுவதும் எண்ணற்ற நாய் இனங்கள் உள்ளன. ஆனால் சில அரிதான நாய் இனங்களை செல்லப்பிராணி ஆர்வலர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த நாய் வளர்ப்பாளரான சதீஷ் என்பவர் ரூ.50 கோடி கொடுத்து ஒரு நாயை வாங்கியிருப்பது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. கடபோம் ஒகாமி என்று அழைக்கப்படும் நாய் இனத்தை சேர்ந்த இந்த நாய் அமெரிக்காவில் பிறந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் தரகர் ஒருவர் மூலமாக சதீசுக்கு இந்த நாய் விற்கப்பட்டது. இந்த நாய், ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் நாய்களின் கலவை ஆகும். இந்த நாய் பிறந்து 8 மாதங்களே ஆன நிலையில் 75 கிலோ கிராம் எடையும், 30 அங்குல உயரமும் கொண்டது. தினமும் 3 கிலோ பச்சை கோழியை சாப்பிடும் இந்த நாய் கம்பீரமாக திகழ்கிறது. சதீஷ் 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களை கொண்ட நாய்களை வளர்த்து வருகிறார்.

    இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதீஷ், கடபோம் ஒகாமி உண்மையிலேயே விதிவிலக்கான நாய் என குறிப்பிடுகிறார். இந்த நாய்கள் அரிதானவை என்பதால் அவற்றை வாங்க அதிக பணம் செலவிட்டேன். மேலும் மக்கள் எப்போதும் இவற்றை பார்க்க ஆர்வமாக இருப்பதால் எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது என்றார். அதாவது இந்த வகை நாய்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுக்க ஏராளமானோர் திரளுகின்றனர். மேலும் இந்த அரிய நாயை சினிமாக்களில் நடிக்க வைப்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளார். இந்த நாய் ஒரு நிகழ்ச்சியில் சிகப்பு கம்பளத்தில் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
    • இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.

    பட்டதாரிகள் பலருக்கும் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நேர்காணலின் போது இளைஞர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில், அவர் வேலைவாய்ப்பு தேடி ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்றுள்ளார்.

    அங்கு நிறுவன மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் பதிலளித்து கொண்டிருந்த போது வெளியில் விமானம் பறக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தன்னை மறந்த அவர் மேலாளரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை நிறுத்திவிட்டு அருகே இருந்த கண்ணாடி சுவற்றின் வழியாக விமானம் பறப்பதை பார்த்தார். அதன் பின்னர் அந்த வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.

    அந்த வாலிபரின் உடல் மொழியும், தன்னம்பிக்கையும், எதிர்கால திட்டங்கள் பற்றி தெளிவின்மையும் தான் அவருக்கு வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்று நிறுவன மேலாளர் கூறினார் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.

    ×