என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் காயம்"

    • அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே 2 பஸ்கள் மோதி 30 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு விரைவு பஸ்சும், கடலூரில் இருந்து முத்தாண்டிக் குப்பத்திற்கு தனியார் பஸ்சும் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தது.


    கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியார்பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக முத்தாண்டிக்குப்பத்திற்கு செல்வதற்காக பஸ்சை திருப்பினார்.

    அப்போது நேராக சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராமல் தனியார் பஸ் மீது பலத்த சத்தத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் நிலைகுலைந்த அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது. விபத்து நடந்த பஸ்களில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்க தொடங்கினர்.


    மேலும் காயம் அடைந்து மீட்ட பயணிகளை உடனடியாக சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த குள்ளஞ்சாவடி பச்சையம்மாள், குறிஞ்சிப்பாடி கதிர்வேல், புவனகிரி ராம் குமார், சாத்தப்பாடி உதய குமார், பூண்டியாங்குப்பம் அமிர்தவள்ளி, தமிழரசி, வீரகுமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்குகடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்த விபத்தில் லாரி சாலை அருகே உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் சென்றது. இந்த பஸ் இன்று காலை செஞ்சி ஆலம்பூண்டி அருகே தாங்கள் கரை பகுதியில் வந்தது. அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், லாரியும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலை அருகே உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது. லாரி டிரை வர் முருகன் லாரியில் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தார்.

    மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். மேலும் 7 பயணிகள் படு காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு லாரி இடுபாடுகளுக்குள் சிக்கிய லாரி டிரைவர் முருகனை அரை மணி நேரம் போராடி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த பயணிகளை போலீசார் மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நட்ததி வருகின்றனர்.

    • . இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது.
    • பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் இருந்து இன்று காலை தாம்பரம் நோக்கி 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் சென்றது. திண்டிவனம் சாரம் மேல்பேட்டை அருகே பஸ் வந்தபோது பஸ்சின் முன்னால் வேன் சென்றது. இந்நிலையில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வேன் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மேல் சேவூர் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் பூச்சிகுளத்தூர் சுந்தரி ,மாமண்டூர் சாந்தி ,ஈச்சூர் விசாலாட்சி, சத்தியவாடி குமாரி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
    • தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது.

    மேட்டூர்:

    கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    நள்ளிரவு ஒரு மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

    இதை பார்த்த டிரைவர் சாலையிலேயே பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். அதற்குள் பஸ் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    அப்போது சில பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த தாமோதரன் (வயசு 38), அவரது மனைவி வினோதினி (30), சந்தோஷ் (28) உட்பட 10 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் தீக்காயம் இன்றி தப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் மற்றும் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பூங்காவில் பூத்து குலுங்கிய மலர் செடிகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து ரசித்தபடி பூங்காவை சுற்றி வந்தனர்.
    • மரத்தில் இருந்த தேன்கூட்டம் கலைந்து பூங்கா முழுவதும் தேனீக்கள் சுற்றின.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பல்வேறு வகையிலான மலர்கள் மலர்மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரிய வகை மரங்களும் இங்கு உள்ளன.

    இந்த பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றிலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவையை சேர்ந்த லிங்கேஷ், சொக்கலிங்கம், காவ்யாராணி ஆகியோர் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு வந்தனர்.

    அவர்கள் பூங்கா முழுவதும் சுற்றி பார்த்து விட்டு அங்கு இருந்த புல் தரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசினர்.

    பின்னர் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர் செடிகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து ரசித்தபடி பூங்காவை சுற்றி வந்தனர்.

    அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த தேன்கூட்டம் கலைந்து பூங்கா முழுவதும் தேனீக்கள் சுற்றின. இதில் எதிர்பாராத விதமாக இவர்கள் 3 பேரையும் தேனீக்கள் கொட்டி விட்டது.

    இதில் அவர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு வலியால் துடித்தனர். இதை பார்த்த பூங்கா ஊழியர்கள், அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று பின்னர் ஊர் திரும்பினர்.

    சிம்ஸ் பூங்காவை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேன்கூடு தானாக கலைந்ததா? அல்லது யாராவது கல்லை எறிந்து தேன் கூட்டை கலைத்து விட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பல்லடம் வழியாக மதுரை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் 46 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சை மதுரையைச் சேர்ந்த முருகானந்தம்(36) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் பல்லடத்தில் அண்ணா நகர் என்ற பகுதியில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஓட்டுநர் கவனிக்காததால் அதில் மோதி பஸ் தாறுமாறாக சென்று தலைகீழாக கவிழ்ந்தது.

    விபத்தில் சிக்கிய பயணிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை உடனடியாக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லேசான காயங்கள் ஏற்பட்ட 36 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

    தொடர்ந்து திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சை அப்புறப்படுத்தும் பணியில் பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது.
    • பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

    விழுப்புரம்: 

    திண்டிவனம் பைபாஸ் சாலை, நத்தைமேடு என்ற இடத்தில் விழுப்புரதில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது. அப்போது அதன் பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார், காயமடைந்த பொள்ளாச்சியை சேர்ந்த கேமாவதி (வயது 30), சென்னையை சேர்ந்த ரேவதி (23) ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வேப்பூர் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதலில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.
    • பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தது.

    கடலூர்:

    சின்னசேலத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று காலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது. அப்போதுபஸ்சின் பின்னா ல் வந்த சரக்கு லாரி டிரைவ ரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். லாரி பஸ் மீது வேகமாக மோதியது பஸ்சின் பின்புறம் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பஸ் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புகளுக்கு உள்ளானது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×