search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 243841"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றம் கல்வி மேம்பாட்டிற் காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவ தற்கான விண்ணப்பப் படி வங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபனை் மையினர் நல அலுவல கங்கள், மாவட்ட சிறு பான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச் சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்ட ஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய் யப்பட்ட திருச்சபைகளிட மிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்காணும் திருச்சபை களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பி னர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங் கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

    கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சமும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 5 ஆயிரமும், திருமண உதவித் ெதாகை ஆண்களுக்கு ரூ. 3 ஆயிரம் (ம) பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும்.

    மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், மெழுகு தீபமேந்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு,சேலம் மறை மாவட்ட ஆயர். அருட்செல்வம் ராயப்பன் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார், அன்னை மரியாள், புனித பத்தாம் பத்திநாதர் ஆகியோர் திருவுருவத்துடன், 3 திருத்தேர்பவனி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர்பவனி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை பங்குத்தந்தை ஜெயசீலன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • 108 சங்காபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.
    • ஆலயத்தின் மண்டல அபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் எண்ணும் ஞானவேல்வி விழா சிறப்பாக நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில், மூலவர் வல்லப விநாயகர், கன்னிமூல கணபதி, பானலிங்க விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், மகா காலபைரவர் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன.

    இந்த ஆலயத்தின் மண்டல அபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் எண்ணும் ஞானவேல்வி விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணி முதல் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக திருவாசகம் முழுவதும் உள்ள அனைத்து பாடல்களையும் பாடினர். அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.

    மேலும் கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி ஆகிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் கலசம் வைக்கப்பட்டு யாக வேள்விகளுடன் 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க உற்சவர் வல்லப விநாய கரின் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஶ்ரீ வல்லப விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    ×