என் மலர்
நீங்கள் தேடியது "இரும்பு"
- கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை திருடிய பிரபல கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதி சேர்ந்தவர் பழனிவேல் (வயது 57). இவர் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடந்த வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பழைய பித்தளை பொருட்கள், காப்பர் பொருட்கள், மற்றும் ஒயர்கள் செல்ப் மோட்டார்கள், போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பழனிவேல் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதனிடையே பொருட்களை திருடியது சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சங்கர் (32) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் நேற்று சங்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது.
- இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
நாமக்கல்:
நாமக்கல் நகரில் சமீப காலமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
உடனே அங்கு விரைந்து சென்ற எஸ். ஐ. சங்கீதா மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் திருச்சி மாவட்டம் முசிறி ஜம்புகாடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 33), சுரேஷ் (40), சங்கர் (27), நாமக்கல் நல்லிபாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த நல்லி என்ற குலசேகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிப்பட்ட மர்ம கும்பல் மேலும் சில இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது
- பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்ச்சியில் பங்கேற்று 'இரும்பின் தொன்மை' எனும் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பு தொழில்நுட்பம் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரும்பு தாதுவை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தான் தொடங்கி உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் அவர்கள்.
இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
- அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அடுத்தசட்டநா தபுரம் கைகாட்டி ரவு ண்டானா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் திசை, வழி காட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பிலானது. இந்த தகவல் தெரிவிக்கும் பல கையானது கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வரும் பிரதான சாலையாகும்.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்தும், அது எங்களுக்கு கட்டுப்பாட்டில் இல்லாத சாலை எனவும், நகாய் எனும் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள சாலை எனவே அந்த துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவியுங்கள். அவர்கள்தான் இதனை சரிசெய்ய இயலும் எனவும் கூறி இதுவரை அதனை சரி செய்யவும் இல்லை அப்புறப்படுத்தவும் இல்லை.
இதனால் அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இதனை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.