என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமப்புறம்"

    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் கனரா வங்கியின் இலவச தொழிற்பயிற்சிக்கு கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் நபா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் ஆண்கள், பெண்களுக்கு இலவச சிசிடிவி கேமரா, தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியின் முடிவில் திறன் இந்தியா சான்றிதழும், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும். ஆகவே, பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். 

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
    • நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.

    இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.

    மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.

    • விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • கடந்த 10 ஆண்டுகளில் விவசாய கடன் தொகை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025-யை தொடங்கி வைத்தார்.

    கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் இத்திரு விழா நடத்தப்படுகிறது. 'வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன் மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்' என்ற கருப்பொருளுடன் திருவிழா 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தொழில்முனைவோர் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பங்கேற்ற கை வினை கலைஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் கண்காட்சியை பார்வையிட்டார்.

    2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த மாபெரும் நிகழ்வு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் பிரசாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

    கிராமங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் துடிப்பான மையங்களாக மாற்றுவதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதே எங்களது நோக்கம்.

    லட்சக்கணக்கான கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடி நீர் வந்து கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டின் சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை கிராமங்களுடன் இணைத்து, டெலிமெடிசின் பலனைப் பெறுகிறார்கள்.

    கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த, கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மனதில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம்.

    கடந்த 10 ஆண்டுகளில், எங்கள் அரசு கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்பான கொள்கைகளை உருவாக்கி முடிவுகளை எடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் விவசாய கடன் தொகை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயத்தை மேம்படுத்த பல கொள்கைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.

    சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2011-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கிராம மக்களின் வாங்கும் திறன் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. கிராம மக்கள் முன்பை விட அதிகமாக செலவு செய்கிறார்கள். தேவைகளை வாங்குவதற்கான செலவின திறன் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • 2026-ல் இந்த இலக்கு முழுமையாக முடிவடையும்.
    • கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கிராமிய கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் வரைபடங்கள் தயாரித்தல் (ஸ்வமித்வா) திட்டத்தின்கீழ் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் செயல் படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமியப் பகுதிகளில் உள்ள நிலங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு சட்டபூா்வமாக சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.

    கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதி நிறுவன கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப் புறங்களில் சொத்துகள் மற்றும் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது

    இந்த நிலையில் பிரதமா் மோடி இன்று ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 65 லட்சம் சொத்து அட்டைகளை காணொலி வாயிலாக வழங்கினார். அவா் திட்டப் பயனாளிகள் சிலரிடமும் கலந்துரையாடினார்.

    குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களில் 50,000 கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டது.

    3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத இலக்கு எட்டப்பட்டது. இதுவரை 1.53 லட்சம் கிராமங்களுக்கு 2.24 கோடி சொத்து அட்டைகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. 2026-ல் இந்த இலக்கு முழுமையாக முடிவடையும்.

    புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர், திரிபுரா, கோவா, உத்தரகாண்ட், அரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டி உள்ளது. இத்திட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் திட்டத்தின் சோதனை கட்டத்தில் மட்டும் பங்கேற்றன. மேற்கு வங்கம், பீகாா், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் இணையவில்லை.


    • தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரியில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கிராமப்புற சாலைகளில் இருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு சொல்கிறார்.
    • தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் விபத்துகள் மூலம் தினமும் 410 உயிரிழப்புகளும், தமிழகத்தில் 41 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

    இதைக் கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருசக்கர வாகன பயன்பாடு 42 சதவீதமும், 4 சக்கர வாகன பயன்பாடு 17 சதவீதமும், கனரக வாகன பயன்பாடும் 14 சதவீதமும் உள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களே அதிகம் நடக்கின்றன.

    'நம்மை காக்கும் 48 மணி நேரம்' திட்டத்தில் விபத்து சிகிச்சை அளிக்க 659 தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 83512 விபத்துகளில் தமிழக அரசு ரூ.75.81 கோடி செலவழித்து 83512 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

    விபத்தை அதிகளவில் குறைத்து முதலிடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.25 லட்சமும், 2-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.13 லட்சமும், 3-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை 4 வழிச்சாலைக்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு

    முதல்கட்டமாக சென்னை முதல் பாண்டிச்சேரி வரை பணி நடந்து வருகிறது. 2-ம் கட்டமாக நாகப்பட்டினம் வரை, 3-ம் கட்டமாக ராமநாதபுரம் வரை, 4-ம் கட்டமாக தூத்துக்குடி வரை, 5-ம் கட்டமாக கன்னியாகுமரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கார் நிறுத்தம் மற்றும் கழிப்பறை அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்துள்ளேன்.

    சாகர் மாலா திட்டத்தின் பாம்பன் பாலத்தின் கீழ் பாம்பன் கால்வாய் 10 மீட்டர் ஆழத்தில் தூர்வார மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.

    தனுஷ்கோடி-தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். இதற்காக முதல்வருடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். தமிழகத்தில் அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம், பி, , எம்.எல்.ஏ, க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×