search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி கட்சி"

    • இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.
    • வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

    இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.

    அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்க உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை மகாராஷ்டிர தேர்தலுடன் வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுத்த பாஜக கட்சியை சேர்ந்த ஹரிஷ் குரானா, "ஏன் 48 மணி நேரம் கழித்து ராஜினாமா செய்ய வேண்டும்? அவர் இன்றே ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த காலங்களில் கூட, அவர் இப்படி செய்துள்ளார். அவரால் தலைமை செயலகத்திற்கு செல்ல முடியாது, அவரால் கோப்புகளில் கையெழுத்திட முடியாது, பிறகு இதில் என்ன அர்த்தம் உள்ளது என டெல்லி மக்கள் கேட்கின்றனர்?," என தெரிவித்தார்.

    • நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்.
    • அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லியின் ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆம் ஆத்மி கட்சி அமானதுல்லாகான் உள்ளார். இவர் டெல்லி வக்பு வாரியத்தின் தலைவ ராக இருந்த போது சட்ட விரோதமாக ஆள் சேர்ப்பு செய்ததாகவும், ரூ.100 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தாகவும் புகார் எழுந்தது.

    இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக ஓக்லாவில் உள்ள அமானதுல்லாகான் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு டெல்லி போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவரது வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய தாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அமானதுல்லாகான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க. அரசு தன்னையும், மற்ற ஆம் ஆத்மி தலைவர்களையும் குறி வைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று காலை சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில், அவரது கைப்பாவை யான அமலாகத்துறையினர் என் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக போலி வழக்குகளை பதிவு செய்து அமலாகத்துறை துன்புறுத்துகிறது. அமலாக்கத்துறை எனக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கும் சில பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இப்போது தேடல் வாரண்ட் என்ற பெயரில் என்னை கைது செய்ய அமலாகத்துறை எனது வீட்டிற்கு வந்துள்ளது.

    மக்களுக்கு நேர்மையான சேவை செய்வது குற்றமா? இந்த சர்வாதிகாரம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

    என் மாமியார் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் என்னை கைது செய்து எங்கள் வேலையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் இந்த முறையும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறினார்.

    இதற்கிடையே அமானதுல்லாகானின் வீட்டு முன்பு ஆம் ஆத்மி தலைவர்கள் திரண்டனர். அவர்கள் கூறுகையில், அமானதுல்லாகானை கைது செய்ய முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.கட்சியின் அரசியல் பழிவாங்கல் காரணமாக அமான துல்லாகான் குறி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அமானதுல்லாகான் வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினர். சுமார் 6 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    • பாஜக-வில் இணைந்தது மிகப்பெரிய தவறு.
    • என்னுடைய குடும்பத்திற்கு திரும்ப விரும்பினேன். எனது தவறை சரிசெய்து கொள்ள விரும்பினேன்- கவுன்சிலர்.

    டெல்லி மாநிலத்தின் 28-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராமச்சந்திரா. இவர் பவானா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர் சில தினங்களுக்கு முன் பாஜக-வில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சஞ்சய் சிங் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரை சந்தித்து மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    பாஜக-வில் இணைந்தது மிகப்பெரிய தவறு. தற்போது என்னுடைய குடும்பத்திற்கு திரும்ப விரும்பினேன். எனது தவறை சரிசெய்து கொள்ள விரும்பினேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மணிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் "நான் ஆம் ஆத்மியின் சக கூட்டாளியும், முன்னாள் பவானா தொகுதி எம்.எல்.ஏ-வும் ஆன ராமச்சந்திராவை சந்தித்தேன். இன்று (நேற்று) ஆம் ஆத்மி குடும்பத்திற்கு திரும்பியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    தன்னை சிலர் தவறாக வழிநடத்தினர் ராமச்சந்திரா குற்றம்சாட்டியிருந்தார். "என்னை சிலர் தவறாக வழி நடத்தினர். வருங்காலத்தில் இதுபோன்ற செயலுக்கு அடிபணியமாட்டேன் என உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன்" என கட்சி தலைவர்கள் முன் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

    • மணீஷ் சிசோடியா கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
    • அவரை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணீஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.

    விசாரணையை தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கினர். மேலும், மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து இன்று மாலை மணீஷ் சிசோடியா வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
    • மனிஷ் சிசோடியா கடந்த 17 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    இதைத் தொடர்ந்து மனிஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

    விசாரணையை தொடர்ந்து மனிஷ் சிசோடியாவிற்கு நிபந்தணைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி மணிஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அமலாக்கத்துறை சார்பில் மணிஷ் சிசோடியா கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று முன்வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

    • டெல்லி அரசின் மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரசுக்கும் துணைநிலை கவர்னருக்கும் இடையே அதிகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இதற்கிடையே டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா, டெல்லி முனிசிபல் மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வந்தார்.

    மேலும் டெல்லி அரசின் மந்திரி சபையின் எந்தவித அனுமதியையும் கேட்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

    இதையடுத்து கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதேப்போன்று மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு மே மாதம் ஒத்திவைத்தார்.

    இந்தநிலையில் மேற் கண்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:-

    இந்த வழக்கை பொருத்த மட்டில் அமைச்சர் குழுவின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்படுகிறாரா என்ற கேள்வியின் கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 1993-ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றங்களை உள்ளடக்கிய திருத்தத்தின் மூலம் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் துணை நிலை கவர்னருக்கு வழங்கப்படுகிறது.

    இதனை அடிப்படையாக கொண்டு பார்த்தால் டெல்லி அரசு அல்லது அமைச்சரவை குழு ஆகியவற்றின் ஆலோசனைகளையோ அல்லது கருத்துக்களையோ துணை நிலை கவர்னர் கட்டாயம் கேட்க வேண்டும் என்பது கிடையாது. அவர் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க அதிகாரம் உண்டு.

    இதனை ஏற்கனவே செய்யப்பட்ட சட்ட திருத்தம் என்பது தெளிவாக கூறுகிறது.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு டெல்லி அரசின் மனுவை நிராகரித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவின் மூலம் டெல்லி மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உண்டு என்பது உறுதியாகி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். அவர்களுக்கான அதிகாரமும் பறிபோய் விட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    • ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர்.
    • ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன், ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம்.

    முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர். இனிமேல் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை சிறையில் அடிப்போம் என கூறுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாங்கள் என்ன தவறு செய்தோம். டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு தரமான கல்வி கொடுத்தது தான் நாங்கள் செய்த தவறு. ஏனெனில் பாஜகவால் அதை செய்ய முடியாது. மொஹல்லா க்ளினிக்குகளை உருவாக்கி மக்களுக்கு மருத்துவ சேவை செய்தது எங்கள் தவறு. பாஜகவால் இதை செய்ய முடியாததால் மொஹல்லா க்ளினிக் திட்டத்தை நிறுத்த வேண்டுமென பாஜக விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    சுவாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைதான நிலையில் வீடியோ வெளியிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
    • இரு கட்சி தொண்டர்களும் இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் வருகிற 25-ந்தேதி 6- வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களுக்கு இருப்பதால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    டெல்லியில் பாரதீயஜனதாவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் ஒன்றாக கைகோர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 4 இடங்களில் ஆம்ஆத்மியும், மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரசும் களம் இறங்கி உள்ளது.

    டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மது பான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். இதையடுத்து அவர் உடனடியாக பிரசாரத்திலும் குதித்தார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.

    ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நேற்று அவர் லால் பாக் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுடன் ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோவில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டனர். இரு கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

    ஜகாங்கீர்பூரி என்ற பகுதியில் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் உதித் ராஜ் (வட மேற்கு டெல்லி) கன்னையாகுமார் (வட கிழக்கு) ஆகியோர் கெஜ்ரிவாலுடன் இணைந்து கொண்டனர். காங்கிரசை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    எங்கள் கட்சி சிறியது தான். நானும் சிறியவன் தான். ஆனால் எங்கள் கட்சி (ஆம் ஆத்மி) டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ளது.என்னை எதற்காக ஜெயிலில் அடைத்தார்கள் என தெரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்.

    டெல்லியில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, பள்ளிகளுக்கு சிறந்த கட்டிடம் கட்டியது, பொது

    மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்தது தான் நான் செய்த குற்றமா? நான் மீண்டும் ஜெயிலுக்கு செல்வதா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் தாமரைக்கு (பா.ஜ.க.) ஓட்டு போட்டால் மறுபடியும் நான் ஜெயிலுக்கு சென்று விடுவேன். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அனுமன் ஆசீர்வாதம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வந்த பிறகு ஆம் ஆத்மிக்கு ஆதரவாக 4 இடங்களில் ரோடு ஷோ நடத்தினார். இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தற்போது 3 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்தி உள்ள

    தால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த பிரசாரத்தின் போது அவர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார். இதை ஏற்று இரு கட்சி தொண்டர்களும் பம்பரமாக சுழன்று இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

    இதை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

    • அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.
    • அமித்ஷாவுக்கு தடையாக இருந்த பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அங்கு சமாஜ் வாடி கட்சி அலுவலகத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு உத்தரபிரதேச வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்க இங்கு வந்துள்ளேன். நான்கு விஷயங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். முதலில் இந்த தேர்தலில், அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.

    பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது. அன்று அவர் அமித் ஷாவை தனது வாரிசாக்கி, பிரதமராக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மோடி கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அமித்ஷாவுக்கு தடையாக இருந்த அனைத்து பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    தற்போது அமித் ஷாவுக்கு பதிலாக ஒரே ஒரு தலைவராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதில்லை என்று பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை. இந்த விதி

    முறையை (75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்) பா.ஜனதா கட்சியில் மோடி ஏற்படுத்தினார். இந்த விதியை அவர் பின் பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    2-வதாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், 2 அல்லது 3 மாதங் களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

    3-வதாக, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். போகிறார்கள். எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை நீக்குவார்கள்.

    பா.ஜனதாவினர் எப்போதுமே இட ஒதுக்கீட் டிற்கு எதிரானவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை (மாற்றி) இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். நான்காவதாக, ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 220 இடங்களுக்கு குறைவாகவே பெறும் என்று தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன. அரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவர்களது இடங்கள் குறைய போகிறது. பா.ஜனதா ஆட்சியை அமைக்கப் போவதில்லை.

    இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றார். அகிலேஷ் யாதவ் கூறும் போது, 543 தொகுதிகளில் 143 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று பா.ஜனதாவே நம்புகிறது என்றார்.

    • 6 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • தற்போது 7-வது முறையாகவும் ஆஜராகுவதை தவிர்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

    இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி, அமலாக்கத்துறை அலுவலகம் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.

    5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஆஜராகும்படி தெரிவித்தது. இதையடுத்து 7-வது முறையாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்று நேரில் ஆஜராகும்படி கேட்டுக்கொண்டிருந்தது.

    இதனால் இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இந்த முறையும் நேரில் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு செல்லவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

    தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
    • வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 ஆகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷில் குமார் குப்தா, சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோரின் பதவிக் காலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ளதால் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் வந்து மனு தாக்கல் செ ய்தார்.

    வருகிற 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×