என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரிவிதிப்பு"

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.
    • அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும்

    அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார். இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

    அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும். இந்நாடுகளுக்கு பொதுவான நாணயம் இல்லை.

    இதற்கிடையே உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக ரஷியா பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது. இதனைத்தொடர்ந்து டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.

    பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்தியேக நாணயம் உருவாக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ள டிரம்ப்,

    பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இதை நாம் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது.

    இந்த விரோத நாடுகளிடமிருந்து ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ, வலிமைமிக்க அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ மாட்டோம் என உத்தரவாதம் வந்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.

    மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும். அவர்களின் உத்தரவாதத்தை நாங்கள் கோரப் போகிறோம்.

    அவர்கள் மற்றொரு முட்டாள் நாட்டைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்கும் பிரிக்ஸ் அமெரிக்க டாலரை மாற்றும் வாய்ப்பு இல்லை. அவ்வாறு முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளை எதிர்நோக்க சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நட்பை இழக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   

    • அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது.
    • அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

    அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. மெக்சிகோவும் விரைவில் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

    அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும். அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் உலக வர்த்தக கூட்டமைப்பில் [WTO] இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் சீனா எச்சரித்துள்ளது.

    • சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார்.
    • கனடா, சீனா, மெக்சிகோ மீதான அமெரிக்கவின் வரிவிதிப்பு வருத்தமளிக்கிறது.

    அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. மெக்சிகோவும் சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே வரிவிதிப்பு எப்போது என்ற சொல்ல மாட்டேன். ஆனால், விரைவில் நடக்கும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் டிரம்ப் தங்கள் மீது வரிவிதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர், கனடா, சீனா, மெக்சிகோ மீதான அமெரிக்கவின் வரிவிதிப்பு வருத்தமளிக்கிறது.

    தேவையற்ற வரிகள் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். இது அனைத்து தரப்பையும் பாதிக்கும். ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரித்துள்ளார்.

    உலகமயமாக்கல் காரணமாக அனைவரும் பயனடையும் சூழலில் டிரம்ப் வரிவிதிப்பு மூலம் உலகை துண்டாட முயற்சிக்கிறார் என்று ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு ஜப்பானும் அச்சம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இந்தியா சீனா, ரஷியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு டாலருக்கு பதிலாக புதிய கரன்சியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இதனால் சர்வதேச அளவில் டிரம்பின் நடவடிக்கைகளால் வர்த்தக போர் மூண்டுள்ளது.

    • கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார்.
    • டொனால்டு டிரம்ப் அறிவிப்பார் வர்த்த போர் தொடங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அச்சம்.

    "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் ("MAKE AMERICA GREAT AGAIN)" என்ற முழக்கத்துடன் டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலை மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா, சீனா நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்தார். இதனால் வர்த்தக போர் உருவாகும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்க உத்தரவிட்டள்ளார்.

    ஆனால் கூடுதல் வரி விதிப்பில் இருந்து பின்வாங்கபோவதில்லை என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் புதிய பரஸ்பர வரி விதிப்பை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் Truth சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மூன்று சிறந்த வாரங்கள். ஒருவேளை இதுவரை இல்லாத வகையில் சிறந்த இருக்கலாம். ஆனால் இன்று மிகப்பெரியது: பரஸ்பர வரிவிதிப்பு (RECIPROCAL TARIFFS). அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பிரதமர் மோடியை சந்திக்கும் முன்னதாக இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவும் உள்ளார்.

    • அமெரிக்காவிடம் எந்த நாடுகள் எவ்வளவு வசூலிக்கிறதோ அவற்றை நாம் வசூலிப்போம்.
    • மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரி விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பரஸ்பர வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    வர்த்தகத்தில், நியாயமான நோக்கத்திற்காக நான் பரஸ்பர கட்டணங்களை வசூலிப்பேன் என்று முடிவு செய்தேன்.

    அமெரிக்காவிடம் எந்த நாடுகள் எவ்வளவு வசூலிக்கிறதோ, அவற்றை நாங்கள் வசூலிப்போம். அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை.

    அவர்கள் எங்களிடம் வரி மற்றும் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இது மிகவும் எளிமையானது, நாங்கள் அவர்களிடம் சரியான வரி மற்றும் கட்டணங்களை வசூலிப்போம். மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரி விதித்துள்ளது.

    இது பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய விஷயம். இதுவரை யாரும் கண்டிராத அளவில் சீனா அதைச் செய்தது என தெரிவித்துள்ளார்.

    • இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
    • 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும்.

    அமெரிக்கா வரிவிதிப்பு

    டொனால்டு டிரம்ப் உடைய ஆளுகையின் கீழ் உள்ள அமெரிக்கா பிற நாடுகள் மீது கடுமையான வரிக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 03) கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்தது.

    முன்னதாக கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்டு டிரம்ப் தனது அறிவிப்பில் பல்வேறு சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.

    பென்டன்டைல் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக சீனா வளர்ந்துள்ளது. இந்த மூலப்பொருட்கள் மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பென்டனைல் போதைப்பொருளாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது.

    இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இந்த புதிய வரிவிதிப்பு இன்று (மார்ச் 04) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் நிலவுகிறது.

    சீனா பதிலடி

    இந்நிலையில் இன்று (மார்ச் 04) அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீனா புதிதாக 10% முதல் 15% வரி விதிப்பை அறிவித்துள்ளது.

    சோயாபீன், சோர்கம் (sorghum), பன்றிக்கறி, மாட்டுக்கறி, கடல்சார் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு சீனா 10 சதவீத வரியை அறிவித்துள்ளது.

     

     

    மேலும் கோழிகள், கோதுமை, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றின் இறக்குமதிக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கனடா - மெக்சிகோ எதிர்வினை 

    இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடா, மெக்சிகோவும் இறங்கியுள்ளது. நேற்று இதுதொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா தனது போக்கை தொடர்ந்தால் 20 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு (செவ்வாய்க்கிழமை முதல்) 25 சதவீத வரி விதிக்கப்படும்.

    மேலும் 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

     

    அமெரிக்காவின் மிதமிஞ்சிய வரிவிதிப்பு தொடர்பாக நேற்று பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எங்களிடம் பிளான் B, C, D உள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச வர்த்தக கழகத்தில்(WTO) சீனா புகார் கொடுத்துள்ளது. 

    • விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது.
    • பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

    சீன இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதிக்கும் சீனா வரி விதித்துள்ளது.

    இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, டிராகன் (சீனா) மற்றும் யானையை (இந்தியா) சேர்ந்து நடனமாட வைப்பது மட்டுமே சரியான தேர்வு. புது டெல்லியும் பெய்ஜிங்கும் விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது. பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும்.

    ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் கைகோர்த்தால், சர்வதேச உறவுகளின் ஜனநாயகமயமாக்கல், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கான பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக ஒருவருக்கொருவர் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் 140 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
    • ரூ. 300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மத்திய அரசு அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதற்கு அரிசி வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து இன்று தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு போராட்டாம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வேலைஅரிசி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தன.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் அன்பரசன் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகள் உள்ளன. 300 வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். தமிழக அரிசி ஆலைகளுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது.

    இந்த வகையில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும்.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழும் அரிசி மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகளை சார்ந்து தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதித்தால், ஏழை எளியோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

    ×