search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக்"

    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
    • ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

    பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'பாரா ஒலிம்பிக்' என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பாரா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் அருகில் அல்லது அடுத்தது என்று பொருள் ஆகும். ஒலிம்பி போட்டிகளுக்கு அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் இதனை பாரா ஒலிம்பிக் என்று அழைக்கின்றனர்.

    ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில தினங்களாக டேனிலா லாரியல் வேலைக்கு வரவில்லை.
    • இதனால் வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    காரகாஸ்:

    வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர் டேனிலா லாரியல். தடகள வீராங்கனையான இவர் சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 5 முறை பங்கேற்றுள்ளார். டேனிலா லாரியல் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.

    கடந்த சில தினங்களாக டேனிலா வேலைக்கு வரவில்லை. இதையடுத்து வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், லாஸ் வேகாஸ் குடியிருப்புக்கு சென்று அதிகாரிகள் பார்த்துள்ளனர். அங்கு டேனிலா லாரியல் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டேனிலா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆகஸ்ட் 11 அன்று உணவு சாப்பிட்டபோது ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் டேனிலா லாரியல் இறந்தது தெரிய வந்தது.

    அவரது மூச்சுக்குழாயில் காணப்பட்ட திட உணவு எச்சங்களால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என அறிக்கை கூறுகிறது.

    டேனிலா லாரியல் மரண செய்தியை வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியது.

    • இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது.
    • அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மின்டன் ஆட்டத்தில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமே.

    இதில் லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி வரை வந்து தோற்றார். சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் வெளியேறியது. இதே போல பி.வி.சிந்துவும் கால் இறுதியில் தோற்றார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 3 ஆட்டத்திலும் தோற்று தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது. பிரணாய்க்கு ரூ.1.8 கோடி வழங்கப்பட்டதாகவும், அஸ்வினி பொன்பப்பா-தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    இதை அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உண்மையை சரியாக பெறாமல் எப்படி அந்த தகவலை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு கூறலாம். தலா ரூ.1.5 கோடியா? யாரிடமிருந்து? எதற்காக? எனக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை.

    நிதியுதவிக்காக எந்த அமைப்பிலோ அல்லது ஒலிம்பிக் பதக்க இலக்க திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நான் இருக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் வரை நான் கலந்து கொண்ட போட்டிகளுக்கு எனக்கு நானே நிதியுதவி செய்தேன். அணியில் இணைவதற்கான தகுதியை அடைந்த பிறகுதான் இந்திய அணியுடன் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டேன்.

    பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பிறகுதான் நான் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன், அவ்வளவுதான். எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது".

    இவ்வாறு அஸ்வினி பொன்னப்பா கூறியுள்ளார்.

    • 17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.
    • ஜஸ்டின் பெஸ்ட் தனது காதலியான லைனி டங்கனுக்கு 2,700 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் பிரபோஸ் செய்தார்.

    காதல் நகரத்தில் ஒரு சாதனை

    வீரர்களால் அதிக காதல் பிரபோசல்கள் செய்யப்பட்ட ஒலிம்பிக் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடர்.

    17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.

     

    * பிரான்ஸ் தடகள வீராங்கனை ஆலிஸ் ஃபினோட் 3000மீ ஸ்டீபிள்சேஸ் சாதனையை முறியடித்து, போட்டிக்கு பிறகு தனது காதலனிடம் பிரபோஸ் செய்து கொண்டாடினார்.

     

    * சீன பேட்மிண்டன் வீரர் லியு யு சென் தங்கம் வென்ற பிறகு ஹுவாங் யா கியோங்கிற்கு பிரபோஸ் செய்தார்.

     

    * பிரெஞ்சு பெண்கள் ஸ்கிஃப் மாலுமிகளான சாரா ஸ்டெயார்ட் மற்றும் சார்லின் பிகோன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று கரை திரும்பியபோது அவர்களது பாட்னர்கள் திருமணத்திற்கு முன்மொழிந்தனர்.

     

    * அமெரிக்க ஒலிம்பியன் ஜஸ்டின் பெஸ்ட், தனது நாட்டிற்காக ரோயிங்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். அவர் தனது காதலியான லைனி டங்கனுக்கு 2,700 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் பிரபோஸ் செய்தார்.

     

    * அர்ஜென்டினா ஆண்கள் ஹேண்ட்பால் அணியை சேர்ந்த பாப்லோ சிமோனெட், தனது நீண்டகால காதலியும் ஹாக்கி வீரருமான மரியா பிலார் காம்பாய்க்கு பிரபோஸ் செய்தார்.

     

    * அமெரிக்காவின் ஷாட் புட்டர் பேட்டன் ஓட்டர்டால் தனது காதலி மேடி நில்லஸுடன் ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

     

    * பிரேசிலின் டிரிபிள் ஜம்பர், அல்மிர் டோஸ் சாண்டோஸ் தனது காதலி தலிதா ராமோஸ்-க்கு பிரபோஸ் செய்தார்.

     

    * அமெரிக்காவின் அலெவ் கெல்டர் சக ரக்பி வீரருமான கேத்ரின் ட்ரெடரை பிரபோஸ் செய்தார்.

     

    * இத்தாலிய ரிதம் ஜிம்னாஸ்ட் அலெசியா மவுரெல்லிக்கு மாசிமோ பெர்டெல்லோனி பிரபோஸ் செய்தார்.

    நிறைவு விழாவின்போது பேசிய பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுத் தலைவர் டோனி எஸ்டன்குட், அன்பின் இந்த உணர்வுகள் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார். 

    • நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது.
    • 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 27-ந் தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது.

    இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டில் 48 வகைகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    வெற்றிகரமாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் முடிகிறது. 15-வது நாளான இன்று 39 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது. ரோடு சைக்கிளிங், மல்யுத்தம் (தலா 3 தங்கம்), தடகளம், வாட்டர் போலோ, கூடைப்பந்து, ஹேண்ட்பால், மாடர்ன் பெண்டத்லான், கைப்பந்து, பளு தூக்குதல் (தலா 1 தங்கம்) ஆகிய விளையாட்டுக்கள் கடைசி நாளில் நடைபெறுகிறது.

    ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 2 பதக்கம் வென்று சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் , ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

    • தீக்‌ஷா தாகர், அதிதி அசோக் (பெண்கள் பிரிவு 2-வது சுற்று), பகல் 12.30 மணி.
    • இந்தியா- ஸ்பெயின் (ஆண்கள் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி), மாலை 5.30 மணி.

    ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

    கோல்ப்:-

    தீக்ஷா தாகர், அதிதி அசோக் (பெண்கள் பிரிவு 2-வது சுற்று), பகல் 12.30 மணி.

    தடகளம்:-

    ஜோதி யர்ராஜி (பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் ரிபிசாஜ் சுற்று), பிற்பகல் 2.05 மணி. நீரஜ் சோப்ரா (ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி), இரவு 11.55 மணி.

    மல்யுத்தம்:-

    அமன் ஷெராவத் (இந்தியா)- விளாடிமிர் எகோரோவ் (மாசிடோனியா) (ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்று), பிற்பகல் 2.30 மணி. அன்ஷூ மாலிக் (இந்தியா)- ஹெலன் மரூலிஸ் (அமெரிக்கா) (பெண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்று), பிற்பகல் 2.30 மணி.

    ஹாக்கி:-

    இந்தியா- ஸ்பெயின் (ஆண்கள் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி), மாலை 5.30 மணி.

    • அவினாஷ் சாப்லே (ஆண்கள் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதி சுற்று), நள்ளிரவு 1.13 மணி.
    • இந்தியா- ஜெர்மனி (பெண்கள் அணிகள் பிரிவு காலிறுதி ஆட்டம்), பிற்பகல் 1.30 மணி.

    ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

    தடகளம்:-

    சுரஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி (மாரத்தான் நடைபந்தயம் கலப்பு அணிகள் பிரிவு), காலை 11 மணி. சர்வேஷ் குஷாலே (ஆண்கள் உயரம் தாண்டுதல் தகுதி சுற்று), பிற்பகல் 1.35 மணி. ஜோதி யர்ராஜி (பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் தகுதி சுற்று), பிற்பகல் 1.45 மணி. அப்துல்லா, பிரவீன் சித்ரவேல் (ஆண்கள் டிரிபிள்ஜம்ப் தகுதி சுற்று), இரவு 10.45 மணி. அவினாஷ் சாப்லே (ஆண்கள் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதி சுற்று), நள்ளிரவு 1.13 மணி.

    கோல்ப்:-

    அதிதி அசோக், தீக்ஷா தாகர் (பெண்கள் பிரிவு முதல் சுற்று), பகல் 12.30 மணி.

    டேபிள் டென்னிஸ்:-

    இந்தியா- ஜெர்மனி (பெண்கள் அணிகள் பிரிவு காலிறுதி ஆட்டம்), பிற்பகல் 1.30 மணி.

    மல்யுத்தம்:-

    அன்திம் பன்ஹால் (இந்தியா)- ஜெய்னெப் யெட்கில் (துருக்கி), (பெண்களுக்கான 53 கிலோ பிரீஸ்டைல் காலிறுதிக்கு முந்தைய சுற்று), பிற்பகல் 2 30 மணி. வினேஷ் போகத் (இந்தியா)-சாரா ஹில்டுபிரான்டு(அமெரிக்கா) (பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் இறுதிப்போட்டி), நள்ளிரவு 12 மணி.

    பளுதூக்குதல்:-

    மீராபாய் சானு (பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவு) இரவு 11 மணி.

    • நூலிழையில் 7 வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர்.
    • மனு பாக்கர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    10 நாள் போட்டி முடிவில் இந்தியா 3 வெண்கல பதக்கமே பெற்றுள்ளது. கடந்த 28-ந் தேதி பெண்கள் 10 மீட்டர் ஏர்பிஸ்டலில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் பெற்று பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்தார். 30-ந் தேதி அவர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் 2-வது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

    கடந்த 1-ந் தேதி ஸ்வப்னில் குசாலே பதக்கத்தை பெற்றார். ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் இந்த பதக்கம் கிடைத்தது. அதன் பிறகு பல போட்டிகளில் நெருங்கி வந்து இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை நழுவவிட்டது. மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நூலிழையில் 7 வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர்.

    வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ்-அங்கீதா ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்தது. அதை தொடர்ந்து 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் அர்ஜூன் பபுதா வெண்கலத்தை நழுவ விட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

    3-வது பதக்கத்தை பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட மனு பாக்கர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

    குத்துச்சண்டை போட்டியில் நிஷாந்த் தேவ் (75 கிலோ பிரிவு), லவ்லினா (75 கிலோ பிரிவு) கால் இறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்டார்.

    பேட்மின்டனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் அரை இறுதியில் தோற்றார். நேற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. அதிலும் தோற்று வெண்கலத்தை பெறும் வாய்ப்பை இழந்தார்.

    ஸ்கீட் கலப்பு அணிகள பிரிவில் மகேஸ்வரி சவுகான்-ஆனந்த் ஜித் சிங் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்று 4-வது இடத்தை பிடித்தார்.

    நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் மட்டுமே தற்போது எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

    இதற்கு முந்தைய போட்டிகளில் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் (400 மீட்டர் ஓட்டம்), 1984 சியோல் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி (பளு தூக்குதல்), லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ( டென்னிஸ் இரட்டையர்) ஜோடி ஆகியோர் 4-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தனர்.

    அணிகள் பிரிவில் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    • இந்தியா-சீனா (ஆண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.
    • இந்தியா-ஜெர்மனி (ஆண்கள் அரைஇறுதி ஆட்டம்), இரவு 10 30 மணி.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    டேபிள் டென்னிஸ்:-

    இந்தியா-சீனா (ஆண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.

    தடகளம்:

    ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் கிஷோர் குமார் ஜெனா (பகல் 1.50 மணி), நீரஜ் சோப்ரா (மாலை 3.20 மணி), கிரண் பாஹல் (பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் ரிபிசாஜ் சுற்று), பிற்பகல் 2.50 மணி.

    மல்யுத்தம்:-

    வினேஷ் போகத்( இந்தியா)-சுசாகி யூ (ஜப்பான்), (பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் கால்இறுதிக்கு முந்தைய சுற்று), பிற்பகல் 2 30 மணி.

    ஆக்கி:-

    இந்தியா-ஜெர்மனி (ஆண்கள் அரைஇறுதி ஆட்டம்), இரவு 10 30 மணி.

    • 1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.
    • 1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    உலகின் அதிகவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயம் செய்யும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.50 மணிக்கு நடைபெற்றது. தகுதி சுற்று மற்றும் அரைஇறுதி மூலம் 'டாப் 8' வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

    முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷெல்வி ஆன்பிரேசர் பிரைஸ் (ஓமைக்கா) அரை இறுதியில் திடீரென விலகினார்.

    இதில் யாருமே எதிர்பார்க்காதவாறு அமெரிக்கா, ஜமைக்காவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 10.72 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். தீவு நாடான செயின்ட் லூசியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் முறையாக பதக்கம் கிடைத்துள்ளது. அந்த பெருமை ஜூலியன் ஆல்பிரட்டை சாரும்.

    1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த ஷகாரி ரிச்சர்ட்சன் 10.87 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், மெலிசா ஜெபர்சன் 10.92 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

    1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது. அந்நாட்டை சேர்ந்த டியா கிளைடனால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    4x400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் நெதர்லாந்து தங்கம் வென்றது. அந்த அணி வீரர், வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 7.43 வினாடியில் கடந்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தகுதி சுற்றில் புதிய உலக சாதனை படைத்த அெமரிக்காவில் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அந்த அணி 3 நிமிடம் 07.74 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது. இங்கிலாந்து அணி 3 நிமிடம் 08.01 வினாடியில் கடந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    பெண்களுக்காகன டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் டொமினிக்சன் வீராங்கனை தியா லபோனட் 15.02 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.

    ஜமைக்காவை சேர்ந்த நிக்கெட்ஸ் 14.87 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீராங்கனை ஜாஸ்மின் மூர் 14.67 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான குண்டு எறிதலில் அமெரிக்க வீரர் ரியான் கிரவுசர் 22.90 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாஸ் 22.15 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஜமைக்காவை சேர்ந்த கேம்பெல் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான டெகத் லான் போட்டியில் நார்வே வீரர் மார்க்ஸ் ரூத் 8796 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மனியை சேர்ந்த லியோ நியூ கெபூர் வெள்ளிப் பதக்கமும் (8748 புள்ளிகள்), கிரினிடா வீரர் லின்டன் விக்டர் வெண்கல பதக்கத்தையும் (8711 புள்ளிகள்) கைப்பற்றினார்.

    டெகத்லான் என்பது 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிந்து, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய 10 விளையாட்டுகளை உள்ளடக்கியதாகும்.

    • 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.
    • தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3-வது பதக்கத்தை நூலிழையில் தவற விட்டார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தார். வெண்கல பதக்கம் பெற்றார்.

    இந்த ஒலிம்பிக்கில் மனுபாக்கருக்கு முன்பு அர்ஜூன் பபுதா நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தார். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார்.

    மேலும் நேற்று முன்தினம் லப்பு அணிகள் வில்வித்தை பிரிவில் தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    கடந்த காலங்களில் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் (400 மீட்டர் ஓட்டம்), 1984 சியோல் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி (பளு தூக்குதல்), லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ( டென்னிஸ் இரட்டையர்) ஜோடி ஆகியோர் 4-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தனர்.

    அணிகள் பிரிவில் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    • லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார்.
    • ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் நள்ளிரவில் நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடெக்கி 8 நிமிடம் 11.04 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் அவர் பெற்ற 2-வது தங்கமாகும். ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக்கில் அவர் 9 தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார்.

    இதன் மூலம் லாரிசா (சோவியத் யூனியன், ஜிம்னாஸ்டிக்), பாவோ நூர்மி (பின்லாந்து, தடகளம்), மார்க் பிஸ் (அமெரிக்கா, நீச்சல்), கார்ல் லீவிஸ் (அமெரிக்கா, தடகளம்), டிரெசல் (அமெரிக்கா, நீச்சல்) ஆகியோருடன் லெடெக்கி இணைந்தார். இவர்கள் 9 தங்கம் வென்று இருந்தனர்.

    லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார். அவர் ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.

    ×