search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் வெற்றி.
    • இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது- ஜெய்ராம் ரமேஷ்.

    மக்களவை தேர்தலில் 400 தொகுதிகள் இலக்கு என்ற முழக்கத்துடன் பா.ஜனதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் குதித்துள்ளது. பா.ஜனதா கட்சி தலைவர்களும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    பா.ஜனதா கூட்டணியாக 400 தொகுதிகளை கைப்பற்றுவோம், தனியாக 370 தொகுதிகளை பிடிப்போம் எனத் தெரிவித்து வரும் நிலையில், 200 தொகுதிகளை தாண்டுவீர்களா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் 400 முழக்கம் எதார்த்தத்தின் நேர் எதிர் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எடுத்துக்காட்டுடன் கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பா.ஜனதா 543 தொகுதிகளில் கூட்டணியாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் ராஜிவ் காந்தி தலைமையில் 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது. 2017 குஜராத் தேர்தலின்போது பா.ஜனதா 150 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 99 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2018-ல் சத்தீஸ்கர் தேர்தலின்போது 50 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 15 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2019 ஜார்கண்ட் தேர்தலின்போது 65 இடங்களை கைப்பற்றுவோம் என முழக்கமிட்டது. ஆனால் 25 இடங்களில்தான் வெற்றி பெற்றது.

    2020 டெல்லி மாநில தேர்தலில் 45 இடங்களை வெல்வோம் என முழக்கப்பட்டது. ஆனால் 8 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2021 தமிழ்நாடு தேர்தலில் 118 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 4 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இலக்கு, வெல்வோம் என முழக்கமிடுவது எளிது. ஆனால் எதார்த்தம் நேர் எதிராக உள்ளது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், தனியாக பா.ஜனதா 370 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூறி வருகிறது.

    2019 தேர்தலின்பேது 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தது. தற்போது அதை 400 ஆக உயர்த்தியுள்ளது.

    2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது, கூட்டணி கட்சிகளுடன் சேர்த்த 353 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது.
    • நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வீட்டுக்கு வீடு உத்தரவாத திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். 8 கோடி உத்தரவாத அட்டைகளை வீடுகளுக்கு விநியோகித்து வருகிறோம். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா என 3 சூப்பர் ஸ்டார் பிரச்சாரகர்கள் வெவ்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்கள்.

    ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது. இது ஒரு அரசியல் நபருக்காக செய்யப்பட்டது.

    நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள். மதத்தை அரசியலாக்குவது மதத்தையும் அரசியலையும் வீழ்த்துகிறது என தெரிவித்தார்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • நாளை நடைபெறும் பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பணமோசடி வழக்கில் (மதுபான கொள்கை) அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.

    மேலும் மார்ச் 31-ந்தேதி டெல்லி ராம்லீலாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி நாளை டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணி பிரதமர் மோடி வீடு இருக்கும் லோக் கல்யாண் மார்க் வரை செல்ல இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான அரசு முடிவுக்கான நேரம் என மெசேஜ் உடன் இந்த பேரணியை நடத்துகின்றனர்.

    இந்த பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பேரணி தனிநபர் சார்ந்தது அல்ல. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கானது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தனிநபர் சார்ந்த பேரணி அல்ல. இது ஒரு கட்சியின் பேரணி அல்ல. 28 கட்சிகள் ஈடுபடுவது தொடர்பானது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து அங்கத்தினரும் கலந்து கொள்வார்கள். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதற்கான செய்தியை இது வெளிப்படுத்தும். இந்த பேரணி ஒரு நபரை பாதுகாப்பதற்கானது அல்ல, அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக" என்றார்.

    இந்த பேரணியில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரண், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிக் ஓ'பிரனை் உள்ளிட்ட தலைவரக்ள் இந்த பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் தற்போது விலையை குறைத்துள்ளது. தேர்தலுக்குப் பின் மீண்டும் உயர்த்தமாட்டோம் என சொல்வார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில்தான் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் (நடைபயணம்) தாக்கம் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும் "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பு நல்ல விசயம். பாரத் ஜோடோ நியாய யாத்ரா சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என ராகுல் காந்தி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்" என்றார்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சிஏஏ-வுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் அரசமைப்புக்கு எதிராக மதம் சார்ந்து குடியுரிமை வழங்குகிறது.
    • அவர்கள் 4 வருடம், 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்?.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மக்களை தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் நேற்றுமுன்தினம் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு, உடனடியாக அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தது. நேற்று இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பம் செய்யலாம் என அதற்கான இணையதள பக்கத்தையும் உருவாக்கியது.

    மத்திய அரசின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிதுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்கள் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.

    இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகள் சிஏஏ-வை செயல்படுத்தப்பட்டாம் என அறிவித்துள்ளன. சிஏஏ-வுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் அரசமைப்புக்கு எதிராக மதம் சார்ந்து குடியுரிமை வழங்குகிறது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் 4 வருடம், 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்?.

    நாங்கள் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம். பா.ஜனதாவின் பிரச்சனை என்ன?. பிரதமர் மோடியுடைய பிரச்சனை என்ன? 10 வருட அநீதி பற்றி பிரதமர் மோடி பேசவில்லை. இந்த தேர்தலுக்காக பா.ஜனதா ஒரே ஆயுதம் கொண்டுள்ளது. அது பிரித்தாளும் கொள்கை. சிஏஏ-யின் விதிமுறை 4 வருடம், 3 மாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே இருக்கும் நிலையில், பிரித்தாளும் கொள்கைக்கு ஒரு டோஸ் கொடுக்கிறார்கள்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன.
    • வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கான வேட்பளர்களை வெளியிட்டார்.

    மம்தாவின் இந்த அதிரடியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டார்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியுடன் இன்னும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்புவார் என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார். எனவே பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். நான் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் நிற்கவில்லை என்பதுதான் அந்த செய்தியாகும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விமர்சனம் செய்துள்ளார்.

    • இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.
    • இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் இருக்கின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. கடந்த மாதம் இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளும் தயாராக இருக்கின்றன என தகவல் வெளியானது.

    ஆனால், தனது முடிவில் மம்தா உறுதியாக உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில்தான் நேற்று 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கூட்டணி இல்லை என முடிவானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் "மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள விருப்பமாக உள்ளோம் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    ஜெய்ராம் ரமேஷ்

    பேச்சுவார்த்தை மூலம் இறுதி கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும முறையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. தனிப்பட்ட முறையில் ஒருதலைபட்சமாக அறிவிப்பு ஏதும் வெளியிடுவதில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றாக போட்டியிடுவதைத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதும் விரும்புகிறது" என்றார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில் "இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார். இந்தியா கூட்டணியில் இருந்து அவர் பிரிந்து தனியாக போட்டியிடுவதன் மூலம், என்னுடைய மனவருத்தத்துடன் இருக்க வேண்டாம், நான் பா.ஜனதாவுக்கு எதராக போட்டியிடும் அணியில் இல்லை என்ன செய்தியை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்" என்றார்.

    • சாலை, ஏழை மக்கள், குடிநீர் குறித்து நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார்.
    • பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டதாக கட்கரி குற்றச்சாட்டு.

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு பேட்டியில் "கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. கிராமங்களில் சிறந்த சாலைகள் இல்லை. குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை. நல்ல பள்ளிக்கூடம் இல்லை" எனக் குறிப்பிடுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இது நிதின் கட்கரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வீடியோ தனது பேட்டியின் ஒரு பகுதி. அப்படி இருந்த நிலை மாற்றப்பட்டு தங்களது ஆட்சி காலத்தில் சிறந்த சேவையை செய்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தேன்.

    அந்த பேட்டியை திரித்து, சிதைத்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் இந்த வீடியோவை நீக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரம், மூன்று நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது- மத்திய அரசு.
    • மன்மோசன் சிங் ஆட்சி கால பொருளாதர சூழ்நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்.

    பொருளாதார வளர்ச்சி என்பது விவசாயத்திலிருந்து தொழில் நிறுவனங்கள், சேவைகள் வரை வேலைவாய்ப்பைப் பன்முகப்படுத்துவதாகும். இதைத்தான் உலக நாடுகள் செய்து வருகிறது. இதுவரை நாமும் பின்பற்றி வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அடைந்த முன்னேற்றம், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பின்னோக்கி செல்கிறது. தற்போதைய ஆட்சியின் "தவறான நிர்வாகம்" பொருளாதார மாற்றத்தை 20 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

    விவசாயப் பணிகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 2004-05-ம் ஆண்டை காட்டிலும், 2017-2018-ம் ஆண்டில் 6.7 கோடியாக சரிந்துள்ளது. விவசாயத்துறையில் உள்ள சம்பளத்தை விட உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் கவர்ச்சிகரமான சம்பளம் கிடைப்பதால் அந்தத் துறைகளை பணியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

    நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இந்தியாவின் மாற்றத்தில் இதுதான் மோடி அரசின் மிகப்பெரிய வரலாற்று சாதனை என ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி உலக பொருளாதாரத்தில் இந்தியா சவால் விடும் நாடாக மாறி வருகிறது. தற்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3-வது இடத்திற்கு கொண்டு வருவதுதான் எங்களது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

    மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கை குறித்து மோடி அரசு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது.
    • இன்று அனைத்து பொதுத்துறை உருக்கு ஆலைகளையும் மோடி அரசு விற்கிறது என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

    ராஞ்சி:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். யாத்திரை தற்போது

    ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் இன்று 22-வது நாள். நாம் தன்பாத்தில் இருக்கிறோம். விரைவில் பொகாரோவுக்குப் போகிறோம்.

    கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் பொகாரோவுக்கு வர வேண்டும்.

    இன்று அனைத்து பொதுத்துறை உருக்கு ஆலைகளையும் மோடி அரசு விற்கிறது.

    81 இடங்கள் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. ஹேமந்த் சோரனுக்கு கூட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது அமலாக்கத் துறையின் சதி. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை இந்திய கூட்டணி உறுப்பினர்களுக்கு எதிராக மோடி அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. அவை சுதந்திரமான நிறுவனங்கள் அல்ல என தெரிவித்தார்.

    • தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
    • 18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு பிரச்சனையால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரும் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இதனால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பாக்டோக்ராவில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.


    18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார். 2-வது கூட்டம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ந் தேதிகளிலும், 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி மும்பையிலும் நடந்தது.

    இந்த 3 கூட்டங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததால் பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தை கடைசி வரை எதிர்த்து போராட நிதிஷ்குமாரை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார்.
    • இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார். அவருடன் மல்லிகார்ஜூன கார்கே பலமுறை பேச முயன்றார். ஆனால் இருவரும் பிஸியாக இருப்பதால், பேசுவதற்கு சூழ்நிலை அமையவில்லை. மல்லிகார்ஜூன கார்கே நிதிஷ் குமாரை பேச அழைக்கும் போது அவர் பிஸியாக இருக்கிறார். நிதிஷ் குமார் பேச அழைக்கும் போது கார்கே பிஸியாக இருக்கிறார்" எனக் கூறினார்.

    மேலும், இந்தியா கூட்டணியின் முதல் இரண்டு கூட்டத்தையும் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்ததாக தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும், அதை நோக்கி உழைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, "அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

    ×