search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 பேர் கைது"

    • 941 லாட்டரிகள் - ரூ.48,070 பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோவை

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி கோவை புறநகர் பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தந்த பகுதயில் சோதனை நடத்தினர். வடக்கிப்பாளையம் போலீசார் தேவம்பட்டி வலசு பகுதியில் சோதனை செய்த போது அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 58) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 45 லாட்டரி மற்றும் ரூ.420-யை பறிமுதல் செய்தனர். டி.காளிப்பாளையம் பகுதியில் லாட்டரி விற்ற ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த தங்கராஜ் (68) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 லாட்டரி மற்றும் ரூ.300-யை பறிமுதல் செய்தனர்.

    மதுக்கரை போலீசார் போடிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு லாட்டரி விற்ற ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த மோகன் ராஜ் (39) என்பவரை கைது செய்து 10 லாட்டரி மற்றும் ரூ.1650-யை பறிமுதல் செய்னர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜரர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி தாலுகா போலீசார் கோபாலபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையின் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திண்டுகல்லை சேர்ந்த நேசமணி (62) என்பரை 418 லாட்டரியுடம் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.200-யை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோன்று சோதனை சாவடியில் 360 கேரளா லாட்டரியுடன் வந்த திண்டுகல்லை சேர்ந்த கிருஸ்டோபர் (52) மற்றும் 60 லாட்டரியுடன் வந்த உடுமலையை சேர்ந்த கணேஷ் (52) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஸ்டோபரிடம் இருந்து ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் முதியவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு ரூ.48,070 மற்றும் 941 லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    • 118 மதுபாட்டில்கள்-ரூ.2340 பறிமுதல் செய்தனர்.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோத்தகிரி,

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஊட்டியை சேர்ந்த நாகராஜ்(வயது 27), ராம்சந்த் பகுதியில் அனையட்டியை சேர்ந்த சந்திரன் (52), கப்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (49), ராப்ராய் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் (45), குமரவேல் (70)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 113 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஊட்டி போலீசார் தேவர் சோலை பஜார் பகுதியில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (53) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டிகள் மற்றும் ரூ.1990-யை பறிமுதல் செய்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒேர நாளில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2340-யை பறிமுதல் செய்தனர்.

    • சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

    இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களில் 6 பேரை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்களை சோதனை யிட்டபோது வாள், பெரிய கத்தி, உருட்டுகட்டை, கயிறு மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பெத்தா னியாபுரம், மேட்டு தெரு முருகன் மகன் சூர்யா (வயது 24), மேலவாசல் சிவகுமார் மகன் பிரகாஷ் (23), பெத்தானியாபுரம், திலீபன் தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் (22), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி சுந்தர்ராஜன் மகன் அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி, அன்னை இந்திரா நகர், மெய்யப்பன் தெரு ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்கள் பாலத்தில் கீழ் பதுங்கி இருந்து உள்ளனர். இைதயடுத்து 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



    மதுரை

    மதுரை கரிமேடு போலீசார் பெத்தானியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சந்தானம் மனைவி லட்சுமி என்ற சித்ரா (வயது 32), சுந்தரபாண்டியன் மனைவி லதா (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு நின்றி ருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து 245 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • அனுமந்தபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 6 பேரை கைது செய்து ரூ 4,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்,

    காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர சோதனை மேற்கொள்ள தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டதை அடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாடலாம்பட்டி, அனுமந்தபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மல்லிகுட்டை அருகே காமலாபுரம் கிராமத்தில் மயானத்தின் அருகே உள்ள மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் (வயது 35), கோபி (40), அருண்குமார் (35), கந்தசாமி (32), சிவசங்கர் (27), ராமியம்பட்டியை சேர்ந்த மேகவண்ணன் (41) ஆகிய 6 பேரை கைது செய்து ரூ 4,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஈங்கூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே உள்ள எல்லமேட்டில் சிமெண்ட் கற்கல் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்ப தாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மேலாளராக பணி புரியும் பெருந்துறை அருகே உள்ள கொம்பக்கோவிலை சேர்ந்த பிரகாஷ் (40), எல்லை மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34), கோவை வ. உ .சி, நகரைச் சேர்ந்த ராஜா (36), கோவை அஞ்சும் நகரைச் சேர்ந்த செல்வம் (54), கொம்ம கோவில் பகுதிைய சேர்ந்த முருகன் (48), கொம்ம கோவில் பகுதியை சேர்ந்த ரவி (38) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 சேவல் கள் மற்றும் ரூ.8,700-ஜ போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ்சில் நூதன முறையில் மூதாட்டியிடம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாகபஸ்ஸில் ஏறிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    விழுப்புரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் எம் டி. சி நகர், வாரி தெருவை சேர்ந்த சர்தார் என்பவரின் மனைவி ஆயிஷா.

    இவர் நேற்று மாலை தனது உறவினர் வீட்டிற்கு அரசு பேருந்தில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பஸ் விக்கிரவாண்டி அடுத்த சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த பொழுது பஸ்சில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆயிஷாவின் அருகில் வந்து சில்லறை காசுகளை கீழே போட்டுவிட்டு ஆயிஷாவிடம் எங்க சில்லறை காசு கீழே விழுந்து கிடக்கிறது என்று சொல்லஆயிஷா குனிந்து அந்த சில்லறை காசுகளை எடுக்கும் பொழுது பொழுது அவருடைய பேக்கில் இருந்து மணிபர்சை எடுத்துக் கொண்டனர் .

    இதுதெரிந்து ஆயிஷா சத்தம் போட்டவுடன் பஸ் சுங்கச்சாவடி கடந்து செல்ல உடனடியாக மர்ம நபர்கள் 6 பேர் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி ஓடினர் ஓடி மறுபுறத்தில் சென்னை மார்க்கமாக செல்லுகின்ற அரசு பஸ்ஸில் ஏறிக்கொண்டனர்.

    பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாகபஸ்ஸில் ஏறிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களை விக்கிரவாண்டி போலீசில் தகவல் கொடுத்த பிறகு போலீஸ்இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் ஆகியோர் அந்த ஆறு பேர்களை கைது செய்தனர். விசாரணையில் பாலு 44. சிங்க புனேரி ,சிவகங்கை மாவட்டம் .யோகராஜ் 22 கவுண்டன்பட்டி ,திருச்சி. பாண்டியன் 34 பாலக்குறிச்சி, திருச்சி,கண்ணதாசன் 24 கல்லுப்பட்டி, திருச்சி .பிரதாப் 28 என தெரியவந்தது.

    • சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (37), அப்புசாமி (30), வெங்கடேஷ் (31), ஆனந்த ஜோதி (37), கமலக்கண்ணன்(42), முரளிசங்கர் (32) என்பது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கள்ளியங்காடு வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் சூதாடி கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55), வாணிப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (47), சந்திரன் (38), டி.என்.பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (53), ராஜன் (39), ஆறுமுகம் (56) என தெரிய வந்தது.

    அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.

    அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியின் போது சிக்கினர்
    • மாட்டு வண்டிகள் பறிமுதல்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் அருகே செய்யாறு- கடுகுனுர் செய்யாற்று படுகையில் மணல் கடத்துவதாக செய்யாறு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் தனிப்படை போலீசார் செய்யாறு- கடுகனூர் செய்யாற்றப்படுகையில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளரிபேட்டை புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (42), அசோகன் (33), இளஞ்செழியன் (23), பழனி (53), சதீஷ்குமார் (30), ராஜேந்திரன் (53), ஆகிய 6 பேர்மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.அவர்களை மடக்கி பிடித்து. தனிப்படை போலீசார் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் மீது பெரணமல்லூர், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
    • பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு இன்ஸ்பெ க்டர் பன்னீர்செல்வம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கருங்கல்பாளையம், கிருஷ்ணம் பாளையம், பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் வாகன சோதனை–யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளை யத்தை சேர்ந்த பன்னீர் (60) சுரேஷ் (36) ஈரோடு நொச்சிகாட்டு வலசை சேர்ந்த தினகரன் (29) நாமக்கல் குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி ( 23) ஈரோடு கருங்கல்பாளையம் சுரேஷ் (35) அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×