search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் குற்றங்கள்"

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்கள்.
    • புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளையும் நவீன மயமாக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய காவல் துறையை நவீனப்படுத்த அனைத்து மாநிலங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    அதன்படி கேரள மாநிலத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களும் `ஸ்மார்ட்' போலீஸ் நிலையங்களாக மாற்றப்பட உள்ளன. நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்களை முன்னிலைப்படுத்தி இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு நவீனமாக்கும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதற்காக அந்த போலீஸ் நிலையங்கள் அனைத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் அங்கு நவீன தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற போலீசார் நியமிக்கப்படுகிறார்கள்.

    இங்கு பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்களை சமாளித்தல், செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில்நுட்பம்) உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு நெறிமுறைகள், முகத்தை அடையாளம் காணுதல் மற்றும் வீடியோ காட்சிகளை பகுப்பாய்வு செய்தல் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    • அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார்.
    • ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். நினைவு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் ஒருங்கிணைந்து விளக்கவுரையாற்றினார். இதில் உதவிப் பேராசிரியர்கள் மலர்விழி, நித்தியபிரியா, மங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் பங்கேற்ற, வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளான சந்தோஷிகா, செல்வராணி, நந்தினி, கனிமொழி, கார்மேல் நிர்மல் ரோஷி, லாவன்யாஸ்ரீ, மரியா பாஷ்டினா ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நல்ல முறையில் கையாளுதல் குறித்து மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்படும்.

    திருப்பூர்:

    சமீபகாலமாக மாணவர்கள் பலர், சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்கி பாதிக்கின்றனர். இதனைத்தடுக்கும் வகையில் போலீசார், அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.அவ்வகையில் தற்போது, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்தும் பள்ளிகளிலும் இணைய வழி குற்றங்களை தடுக்கும் வகையில், 'சைபர் ஜாக்ருதா திவாஸ்' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: - இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை சைபர் குற்றங்களில் இருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து போட்டிகள் நடத்தப்படுகிறது.மேலும், இணைய வழி குற்றங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் வாயிலாக இணைய குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது. குற்றங்கள் தவறான வழிக்கு எடுத்துச்செல்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.குறிப்பாக நவீன சாதனங்களை நல்ல முறையில் கையாளுதல் குறித்து மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×