என் மலர்
நீங்கள் தேடியது "ஜி.எஸ்.டி. வரி"
- மத்திய ஜி.எஸ்.டி., துறைக்கு 21 ஆயிரம் வர்த்தகர்கள், வணிக வரித்துறை வசம் 37 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.
- 14.86 சதவீதம் கூடுதலாக மத்திய ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 814 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 10.59 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்பு, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மத்திய ஜி.எஸ்.டி., துறைக்கு 21 ஆயிரம் வர்த்தகர்கள், வணிக வரித்துறை வசம் 37 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் திருப்பூரில், மத்திய ஜி.எஸ்.டி., துறை மூலம் 425 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது. முந்தைய 2021 - 22ம் நிதியாண்டில், 370 கோடி ரூபாய் வசூலானது. தற்போது 14.86 சதவீதம் கூடுதலாக மத்திய ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.
- வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- மருந்து விலை குறையும்- மின்சார வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கிறது.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. விகிதங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மந்திரிகள் குழு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் பயன்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் உணவு பொருட்களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றிற்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வரி குறைக்கப்படும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட சில பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி சில டிராக்டர்களின் விலை 5 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மருந்துகளுக்கான வரி 5 சதவீதம் வரை குறைய உள்ளது. அதே நேரம் மின் வாகனங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த வாகனங்களின் விலை உயரும்.
தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறையும் என தெரிகிறது. சிமென்ட் மீதான வரியில் மாற்றம் இருக்காது. அதே நேரம் அழகுசாதன பொருட்கள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி உயர உள்ளது.
இதுதொடர்பாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து வரி விகிதங்களில் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வணிக கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமல்.
- வணிகர்களுக்கு மேலும் பெரிய சுமை ஏற்படும்.
சேலம்:
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வணிகர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வில்லை.
மேலும் மாநில அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் கடும் அவதிப்படுவதாகவும், அதனை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் அறிவித்து இருந்தனர்.

அதன் படி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாத்திர கடைகள், இரும்பு கடைகள், பெயிண்ட் கடைகள், மளிகை கடைகள், மரக்கடைகள், அரிசி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன.
சேலம் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள ஜவ்வரிசி ஆலைகள், அரிசி ஆலைகள், பருப்பு மில்கள் மூடப்பட்டிருந்தன. சேலம் லீ பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் சேலம் கடை வீதி, லீ பஜார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளிலும் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகள், இரும்பு கடைகள், சிமெண்ட் கடைகள், பெயிண்ட் கடைகள், மரக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள், அரிசி, பருப்பு, ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டன. வணிகர்களின் இந்த போராட்டத்தால் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு மேலும் பெரிய சுமை ஏற்படும். இதனால் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு உடனே திரும்பி பெற வேண்டும், மேலும் மாநகராட்சி பல மடங்கு உயர்த்தியுள்ள சொத்து வரி, குப்பை வரி மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

போடி
போடி வர்த்தக சங்கம் சார்பாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வணிக வளாக பயன்பாட்டு கட்டிடத்திற்கான வாடகையில் 18 சதவீதம் உயர்த்தி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும், வணிகர்களை நேரடியாகவும் பொதுமக்களை மறைமுகமாகவும் பாதிக்கும் இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வு உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போடி வர்த்தக சங்கத்தில் சார்புடைய தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள், உணவு விடுதிகள், ஜவுளிக் கடைகள், பலசரக்கு கடைகள், தேநீர் விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.

விருதுநகர்
தமிழகத்தின் வணிக நகரமான விருதுநகரில் இன்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து வணிக பயன்பாட்டிற்குள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் வாடகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.
விருதுநகரில் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை, மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம், விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம் உள்ளிட்ட 32 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.
நகரின் மெயின் பஜார், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், மதுரை ரோடு, தெப்பம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பஜார் பகுதி கடைகள், முனி சிபல் ஆபீஸ் ரோடு, நகைக் கடை பஜார் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலைய பகுதி, பென்னிங்டன் காய்கறி மார்க்கெட், சின்னக்கடை வீதி, நேதாஜி ரோடு, நகைக்கடைகள் அதிகம் நிறைந்துள்ள சின்னக்கடை பஜார், 4 ரதவீதிகள், ராமகிருஷ்ணாபு ரம், தேர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1,200-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராள மான கிராமங்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் மூடப் பட்டதால் சிறிய கடை வியா பாரிகள் மற்றும் பொதுமக் கள் பெரிதும் அவதிப்பட்ட னர்.
சிவகாசியில் இன்று வர்த்தக சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள 4 ரதவீதிகளில் பெரிய நகைக்கடைகள், ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து கடை களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெரிதும் சிரமப்பட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க மாநில அரசை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டார வர்த்தகர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், பேரையூர் ரோடு, மதுரை ரோடு, தேனி ரோடு, வத்தலக்குண்டு ரோடு ஆகிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினரும் கடை களை அடைத்து போராட்டம் நடத்தினர்.
சோழவந்தானில் உள்ள 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
மதுரை மாவட்டம் திரு மங்கலம் நகர் பகுதியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரி சங்க கடைய டைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.
நகரில் முக்கிய வியாபார தளங்களான சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, திருமங்கலம் பேருந்து நிலையம் வணிக வளாகம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலும் சிறு கடைகள், வணிக நிறுவனங்கள், உணவுகள் என அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் அடைக்கப்பட்டு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்தும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் கடுமையாக உயர்த்தியதை கண்டித்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்ததை கண்டித்தும், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கி, ஏழை மக்களின் மீது வரிச்சுமையை அதிகரித்த மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோரிக்கைகளை விளக்கி இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் பிரவீன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மயிலாத்தாள், முருகசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரிசி மீதான ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்யக் கோரி தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா் சத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:- மத்திய அரசு அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.மேலும், உணவுப்பொருள்களின் மீதான ஜிஎஸ்டி. வரி உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்றனா்.
- ஒன்றிய அரசு உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை நீக்க கோரி
- சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில் :
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது. ஒன்றிய அரசு உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை நீக்க கோரியும், மாநில செஸ் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்து நீக்க வேண்டியும் வலியுறுத்தி சென்னையில் 22-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட கிளை சங்கங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.