என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தமிழகம்"

    • புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட இணை செயலாளர் மலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அற்புதராஜ், ஆர்.கே.முனி யசாமி, முத்துக்கூரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முனியசாமி அனைவரையும் வர வேற்றார். பூரண மது விலக்கை வலியுறுத்தியும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை கண்டித்தும், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்ட பலி யான சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகி வசந்தி, ஒன்றிய செயலா ளர்கள் முனியசாமி, சேகர், சுரேஷ், பேரின்பராஜ், விலாசி, பெரியசாமி மற்றும் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். இணை செய லாளர் மலைச்செல்வம் மற்றும் துணைச் செயலா ளர்கள் முத்துக்கூரி, மகேஷ் குமார், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பேரன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஜூன் 15-ந் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடை பெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தலா 5 வாகனங்கள் வீதம் நிர்வாகிகள் தொண்டர்கள், திரண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஒடிசா மாநி லத்தில் நடந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முனியசாமி (ராமநாதபுரம்), சேகர் (திருப்புல்லாணி), சுடர் (மண்டபம்), லாசர் (கடலாடி ஒன்றிய செயலாளர்), பெரியசாமி (முதுகுளத்தூர்), ராஜா (நயினார்கோவில்), பரமக்குடி நகர் செயலாளர் சிங்கராஜன் உள்பட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்

    • இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
    • மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-

    டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம், என்ற பிரச்சார புத்தகத்தை வெளியிட்டு, தமிழகத்தில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.

    டாஸ்மாக் வேண்டாம் என தி.மு.க. பல்வேறு போராட்டங்கள் நடத்தியது 2016-ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியை வந்தவுடன் டாஸ் மாக் மதுவிலக்கை அமல் படுத்தவில்லை. டாஸ்மாக் கால் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது.

    தமிழ கத்தில் தி.மு.க.வினர் நடத்த கூடிய அனைத்து மதுபான ஆலைகளையும் மூட வேண் டும். ஆட்சிக்கு வந்து பல மாதங்களாகியும் டாஸ்மாக்கை மூடவில்லை.

    டாஸ்மாக்கில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளதால் இன்று செந்தில் பாலாஜி சிறை யில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அடுத்த அமைச்சரும் காலை ஏழு மணி முதல் மதுபான கடை திறப்போம் என்றும், மது குடிப்பவர்களை யாரும் குடிகாரர் என்று கூறக் கூடாது என்று கூறி வரு கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மதுவால் இளைஞர்கள் சீரழிக் கப்பட்டு வருகின்றனர்.டாஸ்மாக்கில் மது குடித்தால் குடல் புண் நோய் தான் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் 200-க்கும் மேற் பட்ட வியாதிகள் வரும் என்று டாக்டராகிய நான் பரிசோதித்து கூறுகிறேன்.

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி புதிய தமிழக கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, பாட்டில் உடைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.

    ஆகையால் தமிழகத்தில் மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
    • தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும்  தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

    இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஸ்ணசாமியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    வலுவான கொள்கை கோட்பாடுகள், அவற்றை அடைவதற்கான போராட்ட அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

    தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர  வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் துவங்கப்பட் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள்.! தமிழ்நாட்டில் டரு 75 வருடத்தில் வந்த அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்டபொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

    புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நான் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல் ஆட்சியிலும் அதிகாரந்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பைக் அதானி குடும்பம் கெடுத்துள்ளது.
    • அமெரிக்க அரசின் அதானி பிடிவாரண்டிற்கு தடை கேட்கக் கூடாது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் அதானி (வயது 62). இவர் இந்தியாவின் 2-வது பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 17-வது இடத்திலும் உள்ளார்.

    துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சார வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஆந்திரா, ஜம்மு- காஷ்மீர் சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுக்கும் அதானி குடும்பத்தின் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதானிக் குடும்பத்தின் மீதான 2200 கோடி ஊழல் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்பிற்கு பெரும் பங்கம் விளைவித்துள்ளது. அதானி குறித்து குற்றச்சாட்டை ஹிண்டன் பர்க் கடந்த வருடம் கூறிய பொழுது அது CIA சதி என்று கடந்து போய் விட்டோம். ஆனால், இந்த முறை அமெரிக்க அரசு அதானியின் முறைகேட்டைச் சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, பல ஆதாரங்களுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதானி குடும்பத்தின் சூரிய ஒளி மின் நிறுவனத்திலிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னரே அம்மாநிலங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. அதானி கம்பெனியின் சோலார் மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்ததால் பல மாநில அரசுகள் வாங்க மறுத்துவிட்டன. எனவே பின்னர் மத்திய, மாநில அரசு அதிகாரிகளை ஊழல் படுத்தி அதிக விலைக்கு அதானி குடும்பம் தனது சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைத்துள்ளனர்.

    மேலும், இதன் மூலம் அதானி கம்பெனியின் வர்த்தகத்தை மிக உயர்த்தி காட்டி அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை ஈர்த்து உள்ளனர். அமெரிக்க நாட்டின் சட்டப்படி, இது மிகப்பெரிய குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகளுக்கும் சாதாரண மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எவரும் ஒதுங்கிப் போய் விட முடியாது. அண்மைக்காலமாக அடிக்கடி மின் கட்டண உயர்வும், அதனால் தொழில் நிறுவனங்கள் அபரிவிதமான மின்சாரக் கட்டண உயர்வால் பல தொழில்கள் நொடிந்து போய் விட்டன. அதிகாரிகள் ஊழல் எனும் வியாதிக்கு ஆட்பட்டு, அதிக விலைக்கு மின்சாரக் கொள்முதல் செய்வதால் தான் அந்த கூடுதல் விலை சாதாரண மக்களின் தலையில் சுமத்தப்படுகிறது. எனவே அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டை எளிதில் கடந்து போக முடியாது.

    இதேபோன்று மத்திய அரசின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்களைக் குத்தகை எடுப்பதிலும் அரசியல் தலைமைகளையும், அதிகாரிகளையும் ஊழல் படுத்தாமல் கையகப்படுத்தி இருக்க முடியாது. மேலும், மிகக் குறுகிய காலத்தில் அதானி உலக அளவில் தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டியிருக்க முடியாது. இப்போது சர்வதேச அளவில் முதல் பணக்காரர் என்ற நிலை மாறி, சர்வதேச அளவில் மிகப் பெரிய ஊழல்வாதி - குற்றவாளி என்ற நிலைக்கு அதானி தள்ளப்பட்டு இருக்கிறார். அதானி குழுமம் மீது மத்திய அரசு முறையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதானியை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யக் கூடாது. இது 140 கோடி மக்களின் உலக அளவில் நன்மதிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; அவர்களின் நலன் சார்ந்த விஷயமுமாகும்.

    மேலும், தமிழ்நாட்டில் கடந்த 10 வருடங்களாக அதானிக் குடும்பத்திடமிருந்து கூடுதல் விலைக்கே சூரிய ஒளி மின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் திருச்சுழி / கமுதி பகுதியில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை தமிழ்நாட்டில் மிக அதிக விலைக்கு பெற்றுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். ஏழை, எளிய மக்களின் மீதான மின்சுமை அதிகரிக்கக் காரணமான அதானி குடும்பத்தின் அனைத்து ஊழல் நடவடிக்கைகளையும் முழுமையாக விசாரிக்க. உயர்மட்ட விசாரணைக்கு அமைக்க வேண்டும். அமெரிக்க அரசின் அதானி பிடிவாரண்டிற்கு தடை கேட்கக் கூடாது. கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தியாவின் அடையாளங்கள் அல்ல.! மாறாக அவமானச் சின்னங்களாக மாறி வருவது தடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாள் கள ஆய்வு பயணத்தை நேற்று தொடங்கினார்.

    இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.

    அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.

    தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.

    இதனிடையே, நெல்லை வரும் முதலமைச்சர் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின.

    அதன்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க இன்று காலை வந்துள்ளனர். அப்போது முதலமைச்சரும் நேரம் ஒதுக்கி உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் முதலமைச்சர் அரசு விழாவுக்குப்புறப்படும் போது வெளியே வேனில் இருந்துகொண்டே மனுக்களை வாங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், இருட்டுக்கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை.! என்று கூறியுள்ளார். 



    • தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செய லாளர் வி.கே.ஐயர், மாநில துணைப்பொதுச்செய லாளர்கள், சுப்பிரமணியன், தேனி பாலசுந்தரராஜ், நெல்லை சிவக்குமார், கிருபைராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

    மாவட்ட துணை செய லாளர் மருதன்வாழ்வு ரவி, மாவட்ட துணை செயலாளர் ஆழ்வை பொன் அமிர்தம், குருவை சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் மாபெரும் இயக்கமாக நமது புதிய தமிழகம் கட்சி இருந்து வருகிறது.

    வருகிற 11-ந் தேதி தமிழகத்தில் சாதி ஒழிப்பு, சமநீதிக்காக போராடி உயிர் நீத்த சமநீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-வது வீர வணக்க புகழஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்தாண்டிற்கான வீரவணக்க புகழஞ்சலி, வீரவணக்க பேரணி நமது புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    வீரவணக்க புகழஞ்சலி நிகழ்விற்கு நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50 வாகனம் என குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணி திரண்டு சென்று பங்கேற்றிடவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளாத்திக்குளம் பெருமாள்(தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முக நாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கருங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    • நாளை நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதிய தமிழகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக புதிய தமிழகம் கட்சி உள்ளது.

    நாளை (சனிக்கிழமை) நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் அடிப்படை ஊதியத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

    வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, இந்தாண்டிற்கான வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் திரளாக சென்று பங்கேற்றிட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தந்து சிறப்பித்திட வேண்டும்.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள புதிய தமிழகம் தொண்டர்கள், கட்சியினர் அனைவரும் குடும்பத்துடன் அணி திரண்டு வந்து பங்கேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×