என் மலர்
நீங்கள் தேடியது "ராஜேந்திரபாலாஜி"
- ராஜேந்திரபாலாஜியின் தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சிவகாசி
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம் ஆச்சாரி உடல்நல குறைவால் கடந்த 17-ந் தேதி காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியின் இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து ஆறுதல் தெரிவித்தார். கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, காமராஜ், ராஜலட்சுமி, இன்பத்தமிழன், மருதுசேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மான்ராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கடையநல்லூர் எம்.எல்.ஏ. குட்டியப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.க சந்திரபிரபா, எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவசாமி.
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 33 பேரிடம் ரூ.3 கோடி பணம் வசூல் செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட கோரி பணத்தை இழந்தவர்களில் ஒருவரான ரவீந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. எனினும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது.
- 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூர் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் நலிவடைந்து வருகிறது. பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க போராட வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் உடனே நிவாரண நிதி வீடு தேடி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது. இது தான் தி.மு.க. அரசின் சாதனை. சிவகாசியில் சுற்றுச்சாலை திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நிதி ஒதுக்கினார். ஆனால் அந்த திட்டம் 2 நாளைக்கு முன்னர் தான் பூமிபூஜை போடப்பட்டு தொடங்கப்படுகிறது.
2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள். எம்.பி. தேர்தலில் இந்த தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று இருக்க வேண்டும். தில்லுமுல்லு செய்து அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த பகுதியில் உள்ள தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் 18-ம் படி கருப்பசாமியாக வழித்துணை வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா, மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ், மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்த நிர்வாகிகள் முண்டியத்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக்கொண்டு வந்த நிர்வாகியை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
- நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
* கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன?
* தடை இருந்தால வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்.
* பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
* போகிற போக்கில் மிதித்து தள்ளி விடுவேன்.
* எனக்குள் ஓடுவது அ.தி.மு.க. ரத்தம். உன் உடலில் ஓடுவது என்ன ரத்தம்?
* வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன்.
* நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
* நான் இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை போட்டால் நான் வேடிக்கை பார்ப்பதா?
* தன்னை குறுநில மன்னன் என விருதுநகரில் வந்த கூற முடியுமா? என்று கூறினார்.
- ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
- தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிப்பு.
வேலைக்கு லஞ்சம்- சிபிஐ வழக்கு விசாரணையை எதிர்த்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஜேந்திர பாலாஜியை விசாரிக்கும் இசைவாணையை தமிழ்நாடு ஆளுநர் வழங்கினாரா ? இல்லையா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது, இருப்பினும் உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநரின் இசைவாணைக்கு காத்திருக்கிறோம் எனவும் தமிழக அரசு தெரிவத்துள்ளது.
அப்போது, வழக்கு தொடர ஆளுநர் இசைவாணை இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் தமிழக அரின் கடிதம் தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் செயலர் என்ன கூற விரும்புகிறார் எனத் தெரிய வேண்டும் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தர தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளேன்.
ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதிகோரிய தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.
- விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து, நேருவால் பாராளுமன்றத்திலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.
தி.மு.க.வை எதிர்க்கும் திறமையோ, வீழ்த்துகிற திறமையோ அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம். அதன் வரலாறு, அவர்கள் தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும். பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை கூடத்தான் வேண்டும். குறைந்து வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க. மீது இருக்கிற வெறுப்பால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றியோ, யாரோடு கூட்டணி என்பது பற்றி எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவார். மாஃபா பாண்டியராஜன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் அ.தி.மு.க.வினர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார்.
சிவகாசி
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி குலதெய்வ கோவிலான மூலிப்பட்டி தவசலிங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார். சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடினார். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கேக்கை வெட்டி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நாளைய பாரதம் அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார். தொடர்ந்து மருத்துவ முகாம், லட்சம் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது கூறியதாவது:-
ஆதரவற்றோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கு நாம் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். பொது வாக கொடுக்கின்ற கட்சி என்று சொன்னால் அது அ.தி.மு.க.தான்.
ஏழைகளுக்கு கொடுப்பதில் சந்தோசப் படக்கூடிய கட்சி அ.தி.மு.க.. அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள். அ.தி.மு.க.தொண்டர்கள் எப்போதுமே ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறந்தநாள் விழாவின் போது ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.வினர் தங்களால் முடிந்த அளவு ஏதாவது ஒரு உதவி செய்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லி புத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட துணை செயலாளர் அழகுராணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜ அபினேசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், நாளைய பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பாலபாலாஜி, மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்குமார், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், நடிகர் பிரபாத்.
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், சித்துராஜபுரம் பாலாஜி, விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாணடியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் கலைச்செல்வி, ராஜபாளையம் மகளிரணி ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.