என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்"

    • தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது.
    • டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, "கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுமா" என்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது. டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.

    எனவே சரியான இடத்தில் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த துறையில் கேட்டால் கிடைக்கும். என்னுடைய துறையில் அந்த உரிமைகள் இல்லை" என்று பதில் அளித்தார்.

    • 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
    • இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது.

    மதுரை:

    மத்திய அரசி்ன் மும்மொழி கொள்கையை கண்டித்து மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

    மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் உங்களுக்கு நிதியை கொடுப்போம் என மத்திய அரசு கூறுகிறது. உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் மாணவர்கள் இந்தியில்கூட தேர்வை எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு மொழிக்கொள்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை. கொரோனா காலத்துக்கு பின்பு, இல்லம் தேடிக்கல்வி முயற்சியை வேறு எந்த மாநிலம் எடுக்காத நிலையில் நம் மாணவர்களுக்கு, குழந்தைகளின் முன்னேற்றத்தை கருதி முயற்சி எடுத்தோம்.

    இருக்குற 2 மொழிக்கொள்கையை சிறப்பிக்க முயற்சிகள் எடுக்கும்போது, அதை விட்டுட்டு மூன்றுக்கு செல்வது சரியா?

    தமிழ்நாட்டில் பல பத்தாயிரம் பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள். கல்வி பெற்று வருகிறார்கள். இதில் கூடுதல் மொழியை கட்டாயப்படுத்தி திணித்தால், எத்தனை ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நமக்கு தேவை. எத்தனை பத்தாயிரம் மணி நேரங்கள் இல்லை; லட்சம் மணி நேரங்கள் அவங்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டியதுவரும். இதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எத்தனை கூடுதல் கட்டிடங்கள், வகுப்பறைகள். தேவைப்படும். இதற்கெல்லாம் யார் செலவு செய்வார்கள்?

    கொள்கை என்று நீங்கள் எழுதி கொடுக்கிறீர்கள். செயல்படுத்த வேண்டியது நாங்கள். இன்றைக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

    இதில் அமைச்சர் பசங்க எங்க படிக்கிறாங்க... அமைச்சர் பேரங்க எங்க படிக்கிறாங்க.... என்கிறார்கள். அமைச்சர்கள் 34 பேரோட பசங்க எங்க படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. 8 கோடி மக்களுக்கு என்ன கல்வித்திட்டம் என்பதுதான் முக்கியம். எந்த வாதத்தையும் தனிநபருக்காக திசை திருப்ப முயற்சிப்பது சரியல்ல. அவ்வாறு செய்தால் வாதத்தை திசை திருப்புகிறார்கள் என்று நாம் எண்ண வேண்டும். ஆனாலும் நான் ஒரு உண்மையை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு கட்சித் தலைவர் (அண்ணாமலை), எதோ ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பசங்க எத்தனை மொழி படித்தார்கள்? என சொல்லட்டும் எனக்கேட்டுள்ளார்.

    நான் தெளிவாக விளக்கம் சொல்கிறேன். எனக்கு 2 புதல்வர்கள். என் அப்பா பெயரை 2 பேருக்கும் பிரித்து வைத்துள்ளேன். ஒருவர் பழனி, இன்னொருவர் வேல்.

    எல்.கே.ஜி. முதல் பள்ளிப்படிப்பை முடிக்கிற வரை இருமொழி கொள்கை படிதான் இருவரும் படித்தார்கள். யாருக்கெல்லாம் விளக்கம் தேவையோ எடுத்துக்கொள்ளட்டும்.

    இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது. அதற்கு மேல் திருச்சியில் ஒரு அலுவலகத்தை வைத்து எங்கெங்கெல்லாம் எப்ப எல்லாம் முடியுமோ மத்திய அரசாங்க நிதியை வைத்து இந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் தடை செய்யவில்லை. தமிழகத்துக்கு இருமொழி கொள்கைதான் சரி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
    • பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நேற்று நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.

    தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.

    அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,

    முதல் மொழி: ஆங்கிலம்

    இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்

    இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?

    வெளங்கிடும்.

    தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?

    பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார்.
    • வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

    மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.

    * மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    * பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.

    * 1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டம் இயற்றப்பட்டது.

    * 1968-ல் இருந்து மும்மொழி கொள்கை பேசப்பட்டு வந்தாலும் இதுவரை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை.

    * கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?

    * வெற்றிகரமான ஒரு கல்வி முறையை நீக்கிவிட்டு தோல்வி அடைந்த கல்வி முறையை அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா?

    * தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம்.

    * கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அதிக அளவில் உள்ளது.

    * வட மாநிலங்களில் இருமொழி கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழி தேவைப்படாது.

    * வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

    * இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார்.
    • மின்சாரம் தடைபட்டதால் ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார்.

    அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

    இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    • 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்

    சென்னை:

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

    அதனால், தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.

    தி.மு.க வெற்றி பெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறினார்.

    • சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.
    • எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன.

    மதுரை:

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் தங்களது மூதாதையரைவிட அதிகமாக சம்பாதித்துள்ளனர். அது பிரச்சினையாகி வருகிறது.

    அதனை எப்படி கையாளுவது? எப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது? ரூ.10 கோடி, ரூ.20 கோடி என்று அவர்கள் சிறுக சிறுக குவித்தது தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும் என்று உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த ஆடியோவில் ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழி பெயர்ப்பும் இடம் பெற்றிருந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.

    எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது.

    அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. எஞ்சிய உரையாடலில் குரல் தெளிவாக இல்லை. வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.
    • நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம்.

    சென்னை:

    தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி 26 விநாடிகள் கொண்ட ஒரு ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் இணைந்து ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர்.

    இந்த தொகையை அவர்களது முன்னோர்கள் கூட சம்பாதிக்கவில்லை. இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் இருவரும் எப்படி கையாளப் போகிறார்கள்? என்று உள்ளது.

    இந்த ஆடியோ வெளியானதை அடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

    இந்த நிலையில் ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

    சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.

    எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது.

    அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

    எஞ்சிய உரையாடலில் குரல் தெளிவாக இல்லை. வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் விரிவான விளக்கத்தை படங்களுடன் விளக்கி உள்ளார்.

    அமைச்சரின் இந்த விளக்கத்தை பா.ஜனதா ஏற்கவில்லை. இதுதொடர் பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத்தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக்கோரி, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குழு ஒன்று கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறது.

    பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலிநாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன்.

    என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்கவேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். 2 ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.

    காலகாலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் தி.மு.க.வினர் அல்ல. அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    பா.ஜனதா துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் பால்கனகராஜ், ஆனந்த பிரியா, நாச்சியப்பன், சதீஷ் ஆகிய ஐவர் குழுவினர் இன்று மாலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து உண்மையை கண்டுபிடிக்க வலியுறுத்தி மனு அளிக்கிறார்கள்.

    அமைச்சரின் ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
    • 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ புனையப்பட்டதா? இல்லையா? என்பதை அவரே எப்படி கூற முடியும்? நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ரூ.30 ஆயிரம் கோடி தொடர்பான அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம்.

    12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. மனித வாழ்க்கை சுவிட்ச் போட்டால் ஓடும் எந்திரம் போன்றது அல்ல. 12 மணி நேர வேலைக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்பது தான் ஸ்டாலினின் பண்பாடு. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார்.

    அதில் முதல் ஆடியோவில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது.

    அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    இந்த நிலையில் அண்ணாமலை அளித்த பேட்டியில், "ஆடியோ விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றால் ஒரிஜினல் ஆடியோவும் என்னிடம் உள்ளது. அந்த ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று காலையில் இந்த சந்திப்பு நடந்தது. சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிக்கொண்டிருந்தார்.

    ஆடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். அதன் பிறகு இன்று மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.

    தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (2-ந் தேதி) நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார்.
    • அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    சென்னை

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் முதல் ஆடியோவில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது. அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    ஆடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

    இந்நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடிதர விருப்பமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆடியோ விவகாரம் தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் 2 முறை விளக்கம் அளித்துள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • வேலை செய்வதில் சலிப்புடன் இருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஏன் இப்படி கூண்டுக்கிளியாக கஷ்டப்படணும்.
    • ராஜினாமா செய்யும் பட்சத்தில் மதுரையில் இடைத்தேர்தல் வரும்.

    அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கல்வியாற்றலிலும், நிர்வாக திறமையிலும் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    ஆனால் அவரது நேரம் சரியில்லை. அவரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்பட்டது. ஆனால் அந்த துறையில் அவர் எதிர்பார்த்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் வேலை செய்வதில் சலிப்புடன் இருக்கும் அவர் ஏன் இப்படி கூண்டுக்கிளியாக கஷ்டப்படணும். மீண்டும் அமெரிக்கா சென்று சுதந்திர பறவையாக இருக்கலாமே என்று யோசிக்கிறாராம். கிளி பறந்தாலும் பறந்து விடும் என்கிறார்கள்.

    ராஜினாமா செய்யும் பட்சத்தில் மதுரையில் இடைத்தேர்தல் வரும். உங்களால் ஒரு இடைத்தேர்தல் வந்தால் அரசியலை தாண்டி மக்கள் மத்தியிலும் கெட்ட பெயர் வருமே என்று அவரது நலம் விரும்பிகள் கூறியதால் தான் யோசித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

    ×