என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இசை கலைஞர்"
- நாதஸ்வர கலைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை நாதஸ்வர கலைஞர் நியமிக்கப்படவில்லை.
- எந்த வித இசை வாத்தியமும் இன்றி சுவாமி எழுந்தருளல் நடைபெறுவது மற்றும் தீபாராதனை நடப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் 418 ஆண்டு களுக்கு பின்னர் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் ஏற்கனவே வேலை பார்த்து வந்த நாதஸ்வர கலைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை நாதஸ்வர கலைஞர் நியமிக்கப்படவில்லை.
இங்கு வேலை பார்த்து வந்த தவில் மேளக்கலைஞர் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற பின்னர் தற்காலிகமாக கும்பாபிஷேகம் வரை வேலை பார்த்து வந்தார்.
அவருக்கும் உரிய சம்பளம் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் இவர் வேலைக்கு வருவது இல்லை. திருவட்டார் கோவிலில் காலை, மதியம் மற்றும் இரவில் சுவாமி ஸ்ரீபலி எழுந்தருளும் போதும், தீபாராதனையின் போதும் நாதஸ்வரம், மேளம், பஞ்ச வாத்தியம் இசைக்கப்பட வேண்டும் என்பது தொன்று தொட்டே இருந்த வழக்கம். ஆனால் தற்போது எந்த வித இசை வாத்தியமும் இன்றி சுவாமி எழுந்தருளல் நடைபெறுவது மற்றும் தீபாராதனை நடப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அதுபோல் கோவிலில் உள்ள வெள்ளி கருட வாகனம் சேதமடைந்ததை அடுத்து சென்னையைச்சேர்ந்த தனியார் அமைப்பு சுமார் ஒன்றே முக்கால் கிலோ வெள்ளிக்கட்டியை இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு காணிக்கையாக அளித்தது. ஆனால் இதுவரை அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததை அடுத்து கருட வாகனம் சரி செய்யும் வேலை தொடங்கப்படவில்லை.
இது குறித்து கோவில் மேலாளர் மோகன் குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,"கோவிலில் நாதஸ்வர, தவில் மேள, பஞ்சவாத்திய கலைஞர்கள் நியமிப்பது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் இசைக்கலை ஞர்கள் நியமிப்பார்கள். அதுபோல் கருடவாகனம் சரி செய்வதற்குரிய அர சின் ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும் கருட வாகனம் சரி செய்யும் பணி தொடங்கும்"என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்