என் மலர்
நீங்கள் தேடியது "தவணை தொகை"
- பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு.
- வேளாண் துறைக்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை.
ராமநாதபுரம்:
நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் கூறப்பட்டபோதிலும், இன்னும் அவர்கள் நிமிர முடியாத நிலையிலேயே உள்ளனர். சிறு விவசாயிகள் அயராத உழைத்த போதிலும் அதற்கேற்ற பலன் முழுமையாக கிடைக்கவில்லை.
இதற்கிடையே கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசால் கடந்த 2009-ம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் தொடங்கப்பட்டது.
பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து அதனை சரிசெய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
அதன்படி பயனாளிகள் பட்டியல் சரிசெய்யப்பட்டதாக அரசால் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் 2019-ம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அடிப்படையில் விவசாயியின் பெயரில் இருந்தால் மட்டுமே ஆதாரத் தொகையை பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் அளவீடானது குறைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை ஒன்றரை லட்சம் ஹெக்டர் அளவிற்கு நெல் விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் வெறும் 72,426 விவசாயிகளுக்கு மட்டுமே 19-வது தவணையாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் ஆதாரத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அந்த தொகையும் போய் சேர வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த வாலாங்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலிக்குளம் கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார செயலாளரும், விவசாயியுமான தட்சிணாமூர்த்தி என்பவருக்கு இந்த ஆண்டு 19-வது தவணை ஆதாரத் தொகை வரவு வைக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.
இருந்தபோதிலும் வங்கியை அணுகி கணக்கை சரிபார்த்தபோது மத்திய அரசின் ஆதாரத்தொகை வந்து சேரவில்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் வங்கி வரவு-செலவு கணக்கு புத்தகத்தோடு வேளாண் துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது கடந்த முறை வந்த வங்கி கணக்கிற்கு தான் தவணைத்தொகை வரும் என்று சொல்ல முடியாது. ஆதார் எண்ணை எந்தெந்த வங்கிகளில் இணைத்து வைத்துள்ளீர்களோ அந்த கணக்குகளையும் ஆய்வு செய்யும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து தனது பெயரில் உள்ள மற்றொரு வங்கி கணக்கை ஆய்வு செய்தும் கூட தவணை ஆதாரத் தொகை வந்து சேர வில்லை என்று உறுதி செய்த அவர், இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் முறையான பதில் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் விவசாயி களுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலனை பெறுவதாகவும், இந்த திட்டம் வேளாண் காப்பீட்டு இழப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு வரவேண்டிய பயணத்திற்கு பதில் குறுஞ்செய்தி மட்டுமே வந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 12-வது தவணை தொகை பெறுவதற்கு பிரதமரின் கிசான் திட்டத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
- eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர்
நமது நாட்டில் விவசாயிகள் விவசாயம் செய்யத் தேவையான முக்கியமான இடு பொருட்களை தற்சார்புடன் வாங்குவதற்கு உதவிட பிரதமரின் கவுரவ நிதி உதவித்திட்டம் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணைகள் பணம் வரவு வைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பணப் பரிமாற்றத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் நடப்பு 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு அரசு சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.
அதனடிப்படிடையில் தற்போது eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் பயன் பெறும் அனைத்து விவசாயிகளும் நில உடைமைப்பட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பிரதமரின் கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக அவற்றை வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
12-வது தவணை பணப்பலன் பெற கட்டாயம் இந்த இரு வழி முறைகளையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றும், வருகிற 31-ந் தேிக்குள் இந்த இரு நடை முறைகளையும் விவசாயிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
- மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.
- கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்கல் திட்டத்தில் வேளாண்மை இடு பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவ ணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இதுவரை பதிவு செய்த விவ சாயிகளுக்கு 11 தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. தற் போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே பயனாளிகளின் நில ஆவணங்கள் "தமிழ் நிலம்" இணையதளத்துடன் இணைக்கப்பட்டு சரிபார்ப்பு பணி நடைபெற்று வரு கிறது. எனவே இந்த ஊக்கத்தெகை பெற்று வரும் விவசாயிகள் அனைவரும் தாமாகவே முன்வந்து நில ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகல்) அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் வேளாண் விற்பனை, வேளாண் வணிகம் அலுவலகத்தில் காண்பித்து வருகிற 31-ந் தேதிக்கு முன்னரே சரி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் இத்திட்ட விவசாயிகள் அனைவரும் தங்க ளது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதோடு, பி.எம்.கிசான் வலைதளத்தில் இ-கே-ஒய்.சி. பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.