என் மலர்
நீங்கள் தேடியது "செலவு"
- தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக, கபிஸ்தலம் கடைவீதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது. முன்னதாக கொடியினை அர்ஜூனன் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு கலியமூர்த்தி அஞ்சலி செய்தார். அனைவரையும் மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் தில்லைவனம் வேலை அறிக்கை வாசித்தார். வரவு செலவு அறிக்கைகளை மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன் வாசித்தார். பின்பு, ஏ.ஐ.டி.யு.சி யின் மாநில செயலாளர் சந்திரகுமார் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இதில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும் பாதுகாக்க போராடுவோம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சட்ட ஆலோசகர் பாரதி, மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் மணி மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு சாமு. தர்மராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைப்பின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விழாவில் கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீவித்யா, பஞ்சாயத்து துணைத் தலைவர் ஹலன் பேபிசந்திரா பங்கேற்பு
- கணபதிபுரம் தெக்கூர் ஊர் தலைவர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரத்தில் ரூ.10 லட்சம் செலவிலான காங்கிரீட் தளம் அமைக்கும் பணியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழாவில் கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீவித்யா, பஞ்சாயத்து துணைத் தலைவர் ஹலன் பேபிசந்திரா, மேலச்சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் வக்கீல்கள் ஜெயச்சந்திரன், பத்மநாபன், ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ், ஒன்றிய பாஜக பொருளாளர் சுகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மது சூதனப்பெருமாள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரூபின், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி, தமிழ் இலக்கியப் பிரிவு மாவட்ட துணை தலைவர் லிங்கேஸ்வரன், எஸ்பி கண்ணன் கணபதிபுரம் தெக்கூர் ஊர் தலைவர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.