search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து ஊழியர்"

    • 2 அழகிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
    • சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே முளகுமூடு நிங்காரவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்ப தாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வீட்டில் அரைகுறை ஆடையுடன் 2 பெண்களும் ஒரு ஆணும் இருந்தனர். போலீசார் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிடிபட்டவர் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த ரவீந்திரன் (வயது 61) என்பது தெரியவந்தது.

    போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் நிங்காரவிளை பகுதியில் தன்னுடைய சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    மீட்கப்பட்ட 2 பெண்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ரவீந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட ரவீந்திரன் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    விபச்சார கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ரவீந்திரன் வீட்டை சொந்த தேவைக்கு என்று எடுத்துள்ளார். இங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார்.

    அடிக்கடி இந்த வீட்டிற்கு ஆட்கள் வந்து சென்றதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வாலிபர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    • 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை
    • காயமடைந்தவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இலவுவிளை பேழங்காட்டுவிளையை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த எழில் என்பவருக்கு நிதி நிறுவனம் மூலம் இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் எழில் முறையாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஏன் பணம் செலுத்தவில்லை என ஸ்டாலின் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எழில் விறகு கட்டையால் ஸ்டாலினை தாக்க பாய்ந்துள்ளார். அப்போது ஸ்டாலின் தந்தை ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் செல்வராஜ் (70) தடுக்க முயற்சித்துள்ளார்.ஆனால் எழில் ஆத்திரத்தில் செல்வராைஜ சரமாரியாக தாக்கி தலை மற்றும் கையில் காயம் ஏற்படுத்தி உள்ளார்.மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

    காயமடைந்த செல்வ ராஜை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்துள்ள னர். செல்வராஜ் மனைவி ரோஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல செல்வ ராஜின் மூத்த மகன் சுனில் குமார் தந்தை செல்வராஜை தாக்கியது குறித்து ஏழிலின் வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டு கையிலிருந்த இரும்பு கம்பியால் வீட்டிலிருந்த டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் ஜன்னலை அடித்து உடைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
    • 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது.

    தாராபுரம் :

    போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்த போராட்ட விளக்க வாயிற்கூட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் மண்டல துணைத்தலைவர் டி.ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில்,14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    போக்குவரத்து கழகத்தின் வரவு-செலவு பற்றாக்குறையை அரசே ஏற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளியை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

    ×