search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் ஜெகன்"

    • 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது.
    • குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் இருந்து வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் கலியாவூர் நீர்த்தேக்கம் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த வருடம் பருவ மழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. கோடைகாலம் ஆரம்பமாகி உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை கொஞ்சம் இருந்து வருகிறது.

    இந்த சூழ்நிலையிலும் தூத்துக்குடி மாநகர 60 வார்டு பகுதி மக்களும் பாதிக்காத வகையில் குடிதண்ணீர் முறைப்படுத்தி சூழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி வல்லநாடு, கலியாவூர் ஆகிய பகுதிகள் மட்டுமன்றி தாமிரபரணி நதிக்கரை பகுதியில் கிணறு அமைக்க ப்பட்டு அதன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யும் முறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற் கொண்டார். அப் போது அவர் கூறுகையில்,

    தாமிரபரணி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறைவாக இருப்ப தால் மழை குறைந்துள்ள தால் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது. எனவே மக்கள் கூடுமானவரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கோடைகாலம் ஆரம்பமாகி இருப்பதால் மக்களின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும். ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுபவர்களை உங்களுக்கு கொடுத்தி ருப்பது பதவி அல்ல மக்களுக்கு பணி செய்யும் பொறுப்பு என்று கூறியது மட்டுமின்றி எல்லோரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை கண்காணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    எனவே அதன் அடிப்படையில் மக்கள் பணியை நாங்கள் தொடர்ந்து செய்வதற்கான முயற்சி களை அதிகாரி களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

    24 மணி நேரமும் தூத்துக்குடி மாநகர மக்கள் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் மக்கள் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அப்போது அவர் கூறினார்.

    • முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.இதனால் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனியாக பிரித்து போடும் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது இடங்களில் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் அப்போது அவர் கூறுகையில்,

    நமது மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார், ஏற்கனவே மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகளை மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்துமாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.கே.நகர் மெயின் ரோட்டில் அதிகமான வாகனங்கள் செல்லும் தென்பகுதி முழுவதும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து கிடந்தன,முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.

    இதனால் முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதனைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் செடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    முதல் கட்டமாக கே.வி.கே. சாமி நகர் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.

    இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில்,மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

    அதன்படி தூத்துக்குடியில் பணிகள் நடந்து வருகிறது. மாநகர பகுதியில் உள்ள முட்செடிகள் அனைத்தையும் அகற்றி முட்செடிகள் இல்லாத நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார், நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் ரங்கசாமி முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார் சுகாதார அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×