search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுஜன் சமாஜ் கட்சி"

    • படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு உள்ளிட்ட பத்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • ‘ஏ’ பிளஸ் மற்றும் ‘ஏ’ வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 117 பேர் ரவுடிகள் ஆவர். 'ஏ' பிளஸ் மற்றும் 'ஏ' வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர். மேலும் 32 கொலை, கொலை முயற்சி குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி, பாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். சமீபத்தில் இந்த கட்சியின் கொடி மற்றும் பாடலை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார்.

    அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களை கொண்டுள்ளது. அதன் மத்தியில் இரு போர் யானைகளும், அதன் இடையில் வாகை மலர் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஏற்கனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை எந்த மாநில கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    கட்சிக் கொடியில் இடம்பெற்றிருந்த யானைகளை அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஆனந்தன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், "அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்று பகுஜன் சமாஜ் அங்கீகாரம் பெற்ற கட்சியாகும். எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்."

    "நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம் ஆகும். யானை சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது."

    "தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார்."

    "அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணனுடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    • 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
    • கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.

    கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதனால், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கு உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஒரே படத்தை இரு கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறியுள்ளனர்.

    • ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

    • இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
    • பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜனதாவை சேர்ந்த பிரபல பெண் தாதா அஞ்சலை, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா. வக்கீல் ஹரிகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் இது போன்று தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரபல வக்கீல் பால் கனகராஜிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி உள்ளனர்.

    பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார். பாஜகவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் பால் கனகராஜ் ரவுடிகள் சார்பிலும் ஆஜராகி வாதாடி இருக்கிறார்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில் ஆகியோர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களில் நாகேந்திரன் வேலூர் சிறையில் இருக்கும் நிலையில் சம்பவ செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர்கள் இருவருக்கும் பால்கனகராஜ் வக்கீலாக செயல்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று பால்கனகராஜ் இன்று எழும்பூரில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    கடலூர்:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம், போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும். அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடிதத்தை எழுதியவர் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து செம்பியம் போலீசார், படுரில் இருந்த சதீஷை. பிடித்து நடத்திய விசாரணையில் சதீஷ் அப்பாவி என்பதும், தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரை சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.

    அதில், செங்கல்பட்டை சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தபோது அவரிடம் கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளி தாளாளர் அருண்ராஜ் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக மனு அளித்த போது, அதை ரோஸ் நிர்மலா நிராகரித்துள்ளார். பின்னர், அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வும் பெற்றுவிட்டார். இந்நிலையில், தனது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததால் அவரை பழி வாங்குவதற்காக அருண் ராஜ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    ரோஸ் நிர்மலாவின் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசிக்கும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவருக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக ஒட்டி வந்துள்ளார்.

    மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் குறித்தும் அவரது வீடு, கடை ஆகிய பல்வேறு இடங்களிலும் போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ரோஸ் நிர்மலா அப்போதைய தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்ததை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் அருண்ராஜ் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அருண்ராஜை பிடிக்க கேளம்பாக்கம் போலீசார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு அருண்ராஜை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கி வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.

    கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணாக அவர் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் எப்போதும் உயர்ந்த ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை பராமரித்து வருகிறது. இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டலை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கொலை சதியின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளை ஏற்கனவே போலீசார் 2 முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் சிக்கி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொன்னை பாலு உள்பட மேலும் 5 பேரை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்படி பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவா ஆகிய 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல தகவல்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் காவலில் எடுப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக உள்ள வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்கள் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே போலீசார் 3 பேரையும் தேடுகிறார்கள்.

    பொன்னை பாலு உள்பட 5 பேரை காவலில் எடுக்கும் போது இவர்கள் 3 பேர் பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

    சென்னை:

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருமலையின் உறவினரான பிரதீப் மற்றும் முகிலன் ஆகிய 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

    இதுவரை கைதான நபர்களின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கி வரும் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தான் பிரதீப்பும், முகிலனும் தற்போது பிடிபட்டுள்ளனர். இவர்களை தவிர மேலும் 50 பேரும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் ஒரு வழக்கறிஞர் கைது

    ×