search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வேலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும்.
    • கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல.

    கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

    கர்ப்பமாக இருக்கும்போது உடலை ஆக்டிவாக வைத்திருப்பதும் முக்கியம். உங்கள் வயிற்றில் இருக்கும் சிறிய குழந்தையை நீங்கள் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும். இதனால், கர்ப்பிணிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வீக்கம் மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும். சமைக்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்து, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். 

    கர்ப்பிணி பெண்கள் வீட்டை துடைப்பது, துணி துவைப்பது, தரையை சுத்தம் செய்வது போன்ற வளைந்து கொடுக்கும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல. குழந்தையின் பாதுகாப்பிற்காக, இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம்.

    பெரும்பாலான வீட்டு வேலைகள் கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் செய்யப்படலாம். இருப்பினும், சில வீட்டு வேலைகளை ஆரம்ப கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி பிறக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மீண்டும் மீண்டும் இதே போன்ற பணிகளைச் செய்யும்போது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்.

    • 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.
    • படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது குறித்து மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.பி.எஸ்.) மற்றும் டாடா இன்ஸ்டியூடிட் சோசியல் சைன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின.

    இதில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 10 மடங்கு அதிகமாக வீட்டு வேலைகளை செய்வது தெரிய வந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டு வேலைகளுக்கு 98 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள்.

    அவர்களுடன் ஒப்பிடுகையில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.

    இதன் மூலம் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்திய பெண்கள் ஊதியம் இல்லா வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பில் ஆண்களை விட 10 மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

     

    இருப்பினும் படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெண்கள் ஆண்களை விட 3 மடங்கு அதிக நேரத்தை வீட்டு மற்றும் பராமரிப்பு வேலைகளில் செலவிடுகிறார்கள்.

    ஆனால் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 10 மடங்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று குடும்பம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி வயது குழந்தைகளின் இருப்பு, ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் நேரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் வாழும் பெண்கள் சராசரியாக, பல தலைமுறை குடும்பங்களில் வசிப்பவர்களை விட அதிக ஊதியம் பெறாத வேலைகளை கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டு வேலை செய்யும் தொழிாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.
    • அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கட்டுமானத்தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்பு நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் இதுவரை பதிவுசெய்யாத வீட்டுப்பணியாளர்கள் தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட இணைய–தளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க இயலாத வீட்டு பணியாளர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பள்ளி மாற்று சான்றிதழ் ஆகிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×