என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் டி20 கிரிக்கெட்"

    • ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.
    • நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

    நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது.

    இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.

    இதையடுத்து இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    அதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஜார்ஜியா பிம்மர் 46 ரன்களுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மனுடி நனயக்கரா 35 ரன்னும், சமாரி அத்தபத்து 23 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 20 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ப்ரீ ல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய புரூக் ஹாலிடே 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    • இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அதில் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி விவரம் பின்வருமாறு:-

    லாரா வோல்வார்ட் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமாரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கிவர் பிரண்ட் (இங்கிலாந்து), மெலி கெர் (நியூசிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர், இந்தியா), மரிசேன் கேப் (தென் ஆப்பிரிக்கா), ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் (அயர்லாந்து), தீப்தி சர்மா (இந்தியா), சதியா இக்பால் (பாகிஸ்தான்).

    • இறுதி ஆட்டத்தி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி.
    • இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதன்முறையாக இடம் பெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். தீப்தி சர்மா 13 ரன்னும், சபாலிவர்மா 11 ரன்னும் அடித்தனர். 19.3 ஓவர் முடிவில் இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

    இதையடுதது 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலிய அணி.
    • ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 61 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர்.

    20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது. இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

    • முதலில் விளையாடிய இந்திய அணி 164 ரன்கள் அடித்தது.
    • இங்கிலாந்து மகளிர் அணி 160 ரன்கள் எடுத்து தோல்வி.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 15 ரன்னுடன் வெளியேறினார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 20 ரன்னும், தீப்தி சர்மா 22 ரன்னும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது.

    அதிபட்சமாக அந்த அணி சார்பில் கேப்டன் நாட் ஸ்கிவர் 41 ரன்களும், டேனி வியாட் 35 ரன்களும், அமிஜோன்ஸ் 31 ரன்னும் அடித்தனர். இதையடுத்து இந்திய மகளிர் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    ×