search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் டி20 கிரிக்கெட்"

    • இறுதி ஆட்டத்தி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி.
    • இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதன்முறையாக இடம் பெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். தீப்தி சர்மா 13 ரன்னும், சபாலிவர்மா 11 ரன்னும் அடித்தனர். 19.3 ஓவர் முடிவில் இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

    இதையடுதது 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலிய அணி.
    • ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 61 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர்.

    20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது. இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

    • முதலில் விளையாடிய இந்திய அணி 164 ரன்கள் அடித்தது.
    • இங்கிலாந்து மகளிர் அணி 160 ரன்கள் எடுத்து தோல்வி.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 15 ரன்னுடன் வெளியேறினார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 20 ரன்னும், தீப்தி சர்மா 22 ரன்னும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது.

    அதிபட்சமாக அந்த அணி சார்பில் கேப்டன் நாட் ஸ்கிவர் 41 ரன்களும், டேனி வியாட் 35 ரன்களும், அமிஜோன்ஸ் 31 ரன்னும் அடித்தனர். இதையடுத்து இந்திய மகளிர் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    ×