search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுப்பொருட்கள்"

    • கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகும்.
    • அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.

    சென்னை:

    பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் 4-ல் ஒருவருக்கு உடல்பருமன், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை போன்ற பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகும்.

     

    அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உடல்நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்.ஏ.பி.ஐ.) கேட்டுக்கொண்டுள்ளது.

    அதனை அடிப்படையாக வைத்து உயர்கல்வி நிறுவனங்களில் (கல்லூரி கேண்டீன்களில்) ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்கக்கூடாது என்ற விதிமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    மேலும் பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்ட உதவி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.

    • வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர்.
    • குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.

    குழந்தைகளுக்கு பிடித்தமான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம் அடங்கிய பாக்கெட்டை வாங்கினார்.

    அப்போது அந்த பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

    வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் வேறு பாக்கெட் மாற்றி எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தினமும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும்.

    உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே வாய்வழி ஆரோக்கியத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும். பற்களையும், ஈறுகளையும் சீராக பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும். ஒருசில உணவு பழக்கத்தை தவறாமல் பின்பற்றுவது வாய் வழி ஆரோக்கியத்தை பேணவும், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

    * தினமும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. உதாரணமாக ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும்.

    * கொழுப்பு நிறைந்த மீன்களும் ஈறுகளுக்கு வலு சேர்க்கும். சால்மன், டுனா, கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன்கள், ஈறுகளை நோயில் இருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

    * பற்களை வலுவாக்குவதில் பால் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. அவை பற்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. மேலும் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய்வழி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். தயிர், மோர், வெண்ணெய், நெய், பால், பாலாடைக்கட்டி என ஏதாவதொரு வகையில் பால் பொருட்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.

    * நட்ஸ் வகைகளை சாப்பிடுவதும் வாய் வழி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தாதுப்பொருட்களை கொண்டுள்ளன. வாய் பகுதியில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகமானால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிளேக் படர தொடங்கும். அதனை அகற்றாவிட்டல் மஞ்சள் பற்கள், பல் சிதைவு, ஈறு

    சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும். பற்களில் இருந்து பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற நட்ஸ்கள் உதவும். உதாரணமாக பாதாமில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளடங்கி இருக்கிறது. இவை இரண்டும் வலுவான பற்களுக்கு அவசியம்.

    * தேநீரில் உள்ள புளோரைடு பற்களை வலுப்படுத்தவும், துவாரங்களைத் தடுக்கவும் உதவும். மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் ஈறு நோயைத் தடுக்க உதவி புரியும். குறிப்பாக கிரீன் டீயில் புளோரைடு மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. எனவே கிரீன் டீ பருகி வரலாம்.

    * சர்க்கரை கலக்காத சுவிங்கத்தை சுவைப்பதும் வாய் வழி ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். ஏனெனில் சூயிங்கம் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். உணவுத் துகள்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்ற உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    * தண்ணீர் நிறைய பருகுவதும் அவசியமானது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உமிழ்நீர் அவசியம். இது உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பற்சிதைவில் இருந்து பாதுகாக்கும் தாதுக்களும் நீரில் உள்ளன.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி ரேஷ்மா என்ற நஸ்ரின்(வயது 30). இவர் தனது 8 வயது மகன் சர்வேஷ், 7 வயது மகன் மித்ரன் மற்றும் தாயார் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார்.அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அறிமுகமில்லாத பெண்கள் வெயிலுக்கு குடிக்குமாறு ஜூஸ் கொடுத்துள்ளனர்.

    நஸ்ரின் ஜூசை குடிக்காமல் தனது 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். பஸ் பல்லடம் அருகே வந்த போது ஜூஸ்சை குடித்த சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்தார். அவர்கள் பல்லடம் பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் பல்லடம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். இதற்குள் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் வந்தது. அதிலிருந்து சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ்சில் பயணிக்கும் போது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களையோ, குளிர்பானங்களையோ வாங்கி குடித்தால் என்ன மாதிரியான நிலைமை ஏற்படும் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு பெண்கள் கொடுத்த ஜூஸ்சை குடித்து குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி மாவட்டம் துறையூரில் நாளை ஏற்றுமதி நிறுவனத்தின் புதிய உணவு பொருட்கள் அறிமுக விழா நடைபெற உள்ளது
    • பனானா பால் மிக்ஸ், பாதாம் பால் மிக்ஸ்,கேரட் பால் மிக்ஸ், பீட்ரூட் பால் மிக்ஸ், மசாலா பால் மிக்ஸ் போன்ற புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படுகிறது

    திருச்சி:

    எஸ்.எம். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் புதிய உணவுப் பொருட்கள் அறிமுக விழா நாளை (8-ந்தேதி, திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு துறையூர் ரோட்டரி சங்கத்தில் நடக்கிறது. இதில் பனானா பால் மிக்ஸ், பாதாம் பால் மிக்ஸ்,கேரட் பால் மிக்ஸ், பீட்ரூட் பால் மிக்ஸ், மசாலா பால் மிக்ஸ் போன்ற புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதனை திருச்சி மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் டாக்டர் கே.சீனிவாசன் வெளியிடுகிறார்.

    அந்த புதிய பொருட்களை துறையூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, முன்னாள் தலைவர் வி.ஸ்ரீதர், செயலாளர் என்.தில்லைநாயகம், பொருளாளர் ஏ.துரைராஜ்,

    துணை ஆளுநர் கே.மணிகண்டன், துறையூர் கோல்டன் ரோட்டரி சங்கத்தின் மண்டல செயலாளர் (நிர்வாகம்) எஸ்.அசோக் பெரியசாமி ஆகியோர் அதனை பெற்றுக் கொள்கிறார்கள்.

    இதில் துறையூர் ஷாலம் பவுண்டேஷன் கே.கே.மாரிமுத்து, எம்.தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    முடிவில் திருச்சி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி எம்.மஞ்சு நன்றி கூறுகிறார்.

    ×