என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிச்சைக்காரர்"

    • மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார்.
    • தான் பிச்சை பெற்ற நிவாரண பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், 'ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க' என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரணநிதிக்கு அனுப்பி தர்மபிரபுவாக திகழ்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு சலவை தொழில் செய்து கொண்டே யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.

    தனது 3 பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி முழு நேர பிச்சைக்காரர் ஆனார். மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும் தான் பிச்சை பெற்ற நிவாரண பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் தான் பிச்சை பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை நான் முழுவதும் வைத்துக் கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். மேலும் பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன்.

    தற்போது முதலமைச்சர் நிவாரணநிதிக்கு பணம் வழங்குவற்தகாக வந்துள்ளேன். வாழ்க்கையை நடத்த ஓரளவுக்கு பணம் இருந்தால் போதும். மிச்சப்பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்? மிகவும் சிரமப்பட்ட காலத்தில் குடும்பம் நடத்துவதற்காக யாசகம் பெற்றேன். தற்போது எனக்காகவும், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காகவும் யாசகம் பெற்று அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன் என்றார்.

    பின்னர்தான் கொண்டு வந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி நாமக்கல் கலெக்டர் ஸ்ரோயா சிங்கிடம் வழங்கினார்.

    • சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார்.
    • ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், முத்தியாலம் பாடு மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்தவர் யாதி ரெட்டி.

    இவர் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுத்த ரூ.1 லட்சத்தை சாய்பாபா கோவில் வளர்ச்சிக்கு நிதியாக கோவில் கவுரவ தலைவர் கவுதம் ரெட்டியிடம் வழங்கினார்.

    இது குறித்து கவுதம் ரெட்டி கூறுகையில், யாதி ரெட்டி கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல தவணைகளில் ரூ.8.54 நன்கொடையாக வழங்கி உள்ளார் தற்போது வழங்கியுள்ள ரூ.1 லட்சத்துடன் ரூ.9.54 லட்சம் வழங்கி உள்ளார் என்றார்.

    யாதி ரெட்டி கூறுகையில் கோவில் முன்பாக பிச்சை எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    • கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் போனக்கல்லை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் போனக்கல்லில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், மகன் உள்ளனர்.

    அசோக் பிச்சை எடுத்து சம்பாதிக்கும் பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்காக கொஞ்சம், கொஞ்சமாக ரூ.50 ஆயிரம் வரை சேமித்து வைத்து இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு போனக்கல்லில் நரசிம்ம ராவ் என்பவர் நடத்தி வரும் ஓட்டலில் உணவு சாப்பிட சென்றார். அப்போது நரசிம்ம ராவ் அசோக்கிடம் தனக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. கடனாக கொடுத்தால் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறினார்.

    இதனை நம்பிய அசோக் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை நரசிம்மராவிடம் கொடுத்தார். பணம் கொடுத்ததற்கான ஆதாரமாக பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் தொழிலதிபர் நரசிம்ம ராவிற்கு ரூ.2.75 கோடிக்கு கடன் இருப்பதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை திருப்பி தர முடியாது என தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    பின்னர் கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல் பிச்சைக்காரர் அசோக்கிற்கும், நரசிம்ம ராவ் திவால் நோட்டீஸ் அனுப்பினார்.

    நோட்டீசை கண்ட அசோக் கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது. தொழிலதிபரை நம்பி பணம் கொடுத்ததால் தனது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக கவலை தெரிவித்தார்.

    • பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார்.
    • நான் பேராசைக்காரன் இல்லை. கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்.

    இன்றைய காலக்கட்டத்தில் உழைத்தாலே, தினமும் குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனால் மும்பையை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்தே, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது அவர் தான் உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டு இருக்கிறார்.

    அவரது பெயர் பாரத் ஜெயின் (வயது 54). மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தினமும் 12 மணி நேரம் பிச்சை எடுப்பாராம். அதன் மூலம் தினசரி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 வரை கிடைக்குமாம்.

    ஒரு ரூபாய் பிச்சை போட்டாலும், அதனை இன்முகத்துடன் வாங்கி கொள்வாராம். மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறார்.

    பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார். அந்த வீட்டில்தான் அவரது குடும்பம் வசித்து வருகிறது. இதுதவிர 2 கடைகளையும் வாங்கி இருக்கிறார். அந்த கடைகள் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அவரது 2 பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர், இனியும் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் பாரத் ஜெயின், தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். தற்போது அவரது சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும்.

    இது குறித்து அவர் கூறும் போது, 'நான் பேராசைக்காரன் இல்லை. நான் தாராளமாக வாழ்கிறேன். கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்' என்று கூறுகிறார்.

    இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை பிச்சை எடுக்கும் தொழிலில் நிதி புரள்கிறது. மும்பையை சேர்ந்த சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். லட்சுமி தாஸ் என்பவரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி இருக்கிறது.

    "என்னைப் பார்த்தால் பேசாமல் பிச்சை எடுக்கலாம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று கர்வத்துடன் கூறுகிறார் பணக்கார பிச்சைக்காரர் பாரத் ஜெயின்.

    • ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பசி மற்றும் சுகாதார நெருக்கடி.
    • சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுகின்றன.

    தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று சில குடியிருப்பாளர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

    பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜான் சிஃப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ×