search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக முன்னாள் எம்எல்ஏ"

    • ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

    மேலும், எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சத்யா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, உதவி பொறியாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது.
    • மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    சென்னை:

    சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,

    திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை கூறுகையில்,

    வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர்.

    பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

    மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்.

    கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • முதலமைச்சர் குறித்தும் தான் முன்பு தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • மனுவை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவு.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் கள்ளக்குறிச்சி மந்தவெளியில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 19-ந்தேதி நடந்தது.

    அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிகவும் தரக் குறைவாக அவதூறாக பேசினார். இதுகுறித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து போலீசார் குமரகுரு மீது இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்துதல், அவதூறாக, கீழ்த்தரமாக பேசுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், "மனுதாரர் எம்.எல்.ஏ.வாக 3முறை பதவி வகித்துள்ளார். திராவிடர் தலைவர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது சனாதனம் குறித்தும் நீட் தேர்வு விதி விலக்கு குறித்தும் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து வரும் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் பேசினார். முதலமைச்சர் குறித்தும் விமர்சனம் செய்தார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் பின்னர் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் போலீசார் அவசரகதியில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே அவருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, முதலமைச்சர் குறித்து மனுதாரர் பேசியுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது. அது மிகவும் அவதூறாக, மோசமாக உள்ளது.

    எனவே, முதலமைச்சர் குறித்து தெரிவித்த அவதூறு கருத்துகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தை மனுதாரர் நடத்த வேண்டும். அப்போது முதலமைச்சர் குறித்தும் தான் முன்பு தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மனுவை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டு உள்ளார்.

    • நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
    • சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் , வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 80 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மணிநேரம் இந்த சோதனை நடந்துள்ளது.

    இந்த சோதனையில் நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் சகோதரி வீடு, முன்னாள் நகராட்சி துணைதலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஸ்ரீதேவி எக் சென்டர் உரிமையாளர் மோகன், முன்னாள் நகராட்சி பொறியாளர் கமலநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபிநாத், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பொறியாளர் கணேசன், கொண்டிசெட்டிப்பட்டி பைனான்ஸ் அதிபர் சங்கரன், நல்லிபாளையம் பைனான்ஸ் அதிபர் விஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

    மொத்தம் வழக்குக்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900 மற்றும் 214 ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகிறார்கள், அந்த சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன, அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள். இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார், யார் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தி வருகறார்கள். ஆய்வு முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதனால் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    • கே.பி.பி.பாஸ்கர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவி வகித்து வந்தார்.
    • 2 முறை வெற்றி பெற்ற கே.பி.பி.பாஸ்கர் 3-வது முறையாக கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    நாமக்கல்:

    தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடந்தாக பட்டியல் தயாரித்து கவர்னரிடம் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்தவர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    இதை தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை வலுப்படுத்தினார். இப்பிரிவு போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், வீரமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் இவர்களின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    சோதனை நடவடிக்கையில் அடுத்த கட்டமாக இன்று காலை முதல் நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கே.பி.பி.பாஸ்கர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவி வகித்து வந்தார். 2 முறை வெற்றி பெற்ற அவருக்கு 3-வது முறையாக கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தோல்வியை தழுவினார்.

    கே.பி.பி.பாஸ்கர் தனது மனைவி உமா மற்றும் குடும்பத்தினருடன் நாமக்கல் சந்தைபேட்டை புதூர் கொண்டிச்செட்டிபேட்டை ரோடு சப்-லேன் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது இவர் அ.தி.மு.க. நகர செயலாளராக உள்ளார்.

    இந்த நிலையில் 2011 மற்றும் 2016-ம் ஆண்டு பதவி காலத்தில் பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

    விசாரணையில், பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் கே.பி.பி. பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான வீடு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என அவருக்கு தொடர்புடைய 24 இடங்களில் இன்று காலை ஒரே நேரத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டிச்செட்டி பேட்டை ரோட்டில் கே.பி.பி. பாஸ்கர் வசித்து வரும் பங்களா வீட்டிற்கு நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 5.45 மணி அளவில் சென்றனர். அப்போது வீட்டின் வெளிப்பக்க பிரதான நுழைவு கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் வீட்டை சுற்றிலும் கண்காணிப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.

    அப்போது வீட்டில் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். இதனால் மெயின் கேட்டை திறக்குமாறு போலீசார் கூறினர். சத்தம் கேட்டு பாஸ்கர் எழுந்து வந்து கதவை திறந்தார். அவரிடம், நாங்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து வந்து இருக்கிறோம். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, பாஸ்கர் தனது வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    தொடர்ந்து, போலீசார் வீட்டின் முன்பக்கம் உள்ள மெயின் கேட்டை பூட்டினர். பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இந்த சோதனை முடியும் வரை நீங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் தனித்தனி குழுவாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், வீட்டிற்குள் சோதனை நடத்தி வருகிறார்கள். பூஜை அறை, ஹால், சமையல் அறை, வி.ஐ.பி.களுடன் ஆலோசனை நடத்தும் அறை, வீட்டின் மேல்தளம், படுக்கை அறை போன்றவற்றில் பணம், நகை, மற்றும் சொத்து ஆவணங்கள் உள்பட இதர ஆவணங்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தினார்கள். இதில் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களுடைய மதிப்பு ஆவணங்கள் கேட்டனர்.

    தொடர்ந்து குடிநீர் தொட்டி, மொட்டைமாடி, புத்தகம் வைத்திருக்கும் அலமாரி, பீரோ, மெத்தை, கட்டிலில் உள்ள அறை, பாத்திரங்கள், சமையல் பொருட்கள் ஆகியவற்றையும் திறந்து பார்த்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

    இந்த சோதனையின்போது பாதுகாப்புகாக வீட்டின் முன்பு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இது பற்றி தகவல் கிடைத்த அ.தி.மு.கவினர். அங்கு கூடினர். பாஸ்கர் வீட்டின் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ஏற்கனவே நாமக்கல்லில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சென்னை அருகே பனையூரில் உள்ள பங்களா, பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தபாளையத்தில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்கள், அவரது ஆடிட்டர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதன்தொடர்ச்சியாக முதன் முறையாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×