search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"

    • விவசாயிகள் அமைப்பு பூண்டை காய்கறியாக வகைப்படுத்த மண்டி வாரியத்தை வற்புறுத்தியது.
    • வணிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது. சுவாச கோளாறுகளை சரி செய்ய பூண்டிலுள்ள சல்பைடு எண்ணெய் மிகவும் உதவியாக உள்ளது.

    வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும். நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது. கபத்தை இளக்கி தூக்கத்தை தரக்கூடிய பூண்டானது செரிமானத்தை சீர்படுத்தக்கூடியது; உடல் எடை கூட்டக்கூடியது.

    சமையலில் முக்கியத்துவம் கொடுத்து பூண்டு ரசம், குழம்பு, துவையல் என பல்வேறு வடிவங்களில் சாப்பிடுவதன்மூலம் வாயுதொடர்பான நோய்கள் குணமாகும். இதயக்கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பவர்களும் வெள்ளைப்பூண்டை வேக வைத்து சாப்பிடுவதால் நாளடைவில் அவர்களுக்கு நோய்கள் கட்டுக்குள் வரும்.

    சபாஷ் சரியான கேள்விதான். இதைவைத்து ஒரு பட்டிமன்றமே நடத்திவிடலாம். எனினும் இது சற்று சிந்திக்கக்கூடிய விசயம்தான். இந்த விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

    2015-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் அமைப்பு பூண்டை காய்கறியாக வகைப்படுத்த மண்டி வாரியத்தை வற்புறுத்தியது. ஆனால் வேளாண்மைத் துறை வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டம் 1972 -ன் கீழ் பூண்டை ஒரு மசாலாப் பொருளாக மறுவகைப்படுத்தியது.

    இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு கமிஷன் முகவர்கள் சங்கம் 2016-ம் ஆண்டில் வேளாண்துறையின் முடிவை எதிர்த்து மத்தியப் பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் பெஞ்ச்சை அணுகியது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனி நீதிபதி சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார், இந்த முடிவு முக்கியமாக விவசாயிகளை விட கமிஷன் ஏஜெண்டுகளுக்கு நன்மை பயக்கும் என்று வாதிட்ட வணிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜூலை 2017-ல், மனுதாரர்களில் ஒருவரான முகேஷ் சோமானி ஒரு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி டி.வெங்கடராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

    அதன்படி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் 2015 -ம் ஆண்டின் தீர்ப்பை உறுதி செய்து பூண்டு ஒரு காய்கறியாக அறிவித்துள்ளது. அதாவது தற்போது மீண்டும் காய்கறி பட்டியலில் பூண்டு வந்துள்ளது.

    இந்தூர் பெஞ்ச் இறுதியாக இந்த பல ஆண்டுகளாக நீடித்த விவாதத்தை முடித்து, பூண்டை ஒரு காய்கறியாக அறிவித்து, காய்கறி மற்றும் மசாலா சந்தைகளில் விற்க அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே வேளாண் துறை இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்கிறதா அல்லது இதை ஒரு காய்கறியாகக் கருதி இந்த விஷயத்தை கிடப்பில் போடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.

    • மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை.
    • சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர்.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷைய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த புதிய சட்டங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த புதிய சட்டங்களை எல்லாம் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்தநிலையில், இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட் டில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில், எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இந்த 3 சட்டங்களை அவசர கதியில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை. சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர். இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குற்றமாக்கியுள்ளது. குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் ஜனாதிபதி, கவர்னர் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், போலீசாருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

    எனவே, ஏராளமான முரண்பாடுகளுடன் இயற்றப்பட்டுள்ள இந்த 3 சட்டங்களை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிட்டார்.

    இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுத்தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஸ் விவேகானந்தன் ஆகியோர் கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

    மேலும், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சிவில் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது. எனவே, சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தனர்.

    • சிறை தண்டனையால் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.
    • பலவீனமான ஆதாரங்களே உள்ளது.

    சென்னை:

    1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை. பலவீனமான ஆதாரங்களே உள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. எனவே, சிறப்பு கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.

    • கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
    • சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள்.
    • பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.

    நாகர்கோவில் : கன்னியாகுமரிக்கு நவம்ப ர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இந்த சீசனையொட்டி கன்னியா குமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு மொத்தம் 122 சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் 34 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. மீதிஉள்ள 88 கடைகள் 22-ந்தேதி மறு ஏலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையில் கன்னியா குமரி சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள பகுதியிலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, விவேகானந்தா ராக் ரோடு பகுதியிலும் சீசன் கடை ஏலம் எடுத்த வியா பாரிகள், ஐகோர்ட்டு அறிவுரையின்படி கடைகள் போன்று கட்டாமல் நடை பாதையில் திறந்த வெளி யில் சீசன் கடைகளை வைத்துவியாபாரம்செய்ய தொடங்கிஉள்ளனர். இந்த சீசன் கடைகளில் இரவு-பகலாக வியாபாரம் நடந்து வருகிறது.

    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
    • ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும்.

    சென்னை:

    நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

    இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    கீழ் கோர்ட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெயபிரதா உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை செலுத்த முடியுமா? என்று ஜெயபிரதா தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    ஆனால், ரூ.20 லட்சம் செலுத்துவதாக ஜெயபிரதா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு இ.எஸ்ஐ. தரப்பு வக்கீல் டி.என்.சி.கவுசிக், எதிர்ப்பு தெரிவித்துவாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், "கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயபிரதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கீழ் கோர்ட்டு நிறுத்திவைக்கலாம். இல்லை யென்றால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பித்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் பொது நலமனு ஒன்விறை தாக்கல் செய்திருந்தார்.அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், பூச்சிக்கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்கும், மகப்பேறு சிகிச்சைகளுக்கும் இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத்தான் நம்பி உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மிகவும் பழுதடைந்து காணப்படு கிறது. மேலும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலி யர்கள் கூட மருத்துவ மனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை செய்த போது மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவ மனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மருத்துவ மனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அது தொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தர விட்டனர்.

    அதன்படி குடும்ப நல சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் 1989-ம் ஆண்டிலிருந்து ஆர்.ஸ் மங்கலம் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது சேதமடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

    மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவசர தேவை கருதி பொது சுகாதார பிரிவு கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சுகாதார நிலை யத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, படுக்கை வசதியுடன் கூடிய உள் நோயாளிகள் பிரிவு இ.சி.ஜி. எக்ஸ்ரே மற்றும் பிரசவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
    • வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது

    மதுரை

    அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் ஒர்க் ஷாப் ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை 2-வது மாஜிஸ் திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த–தாவது:-

    நான் எனது கணவருடன் சேர்ந்து இதே பகுதியில் டயர் வியாபாரம் செய்து வருகிறேன். சட்டப்படிப்பும் படித்து வருகிறேன். எனது கணவர் சரவணன் மாற்றுத் திறனாளி. அவரின் சகோ–தரர் மது பாண்டியன் எங்கள் கடையை சட்ட–விரோதமாக அபகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகிறார்.

    அவர் கொடுத்த பொய்யான புகார் குறித்து முறை–யாக விசாரிக்காமல் என்னை போலீசார் கைது செய்தனர். உரிய விசாரணை நடத்தாமல் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின் பற்றாமலும் என்னை கைது செய்ததற்காக போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் என் மீது மற்றொரு பொய்யான புகார் பெற்று வழக்கு பதிவு செய்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

    எனவே திலகர் திடல் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரே–சன், சொர்ண ராஜா ஆகி–யோர் மீது உரிய நடவ–டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி–யிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி கல்யாண மாரிமுத்து விசா–ரித்தார். முடிவில், மனுதா–ரரை கைது செய்ததில் உரிய வழிகாட்டுதல்களை பின் பற்றவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் மீதான புகார் குறித்து திலகர் திடல் உதவி போலீஸ் கமிஷனர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை குறித்து ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தர–விட்டார்.

    • கோவிலுக்கு நன்கொடை அளித்தவருக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்டனூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டும், திருவிழாக்காலங்களிலும் தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதை கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டும்.

    ஒரு நபர் கோவிலுக்கு தனது பங்களிப்பை, நன்கொடையாக வழங்கியிருந்தால் அவர்களுக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • மதுரை ஆதீன மட சொத்துகள் ஐகோர்ட்டு உத்தரவுபடி மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
    • பிரதமர் அனைத்து ஆதீனங்களையும் சந்தித்தார் அவரின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.

    மதுரை

    மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் பழமையான திருஞான சம்பந்த சுவாமி கள் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் அருகில் இருந்த ஆதீனத்திற்கு சொந்தமான 3,200 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி அமைக்கப் பட்டது. அந்த இடத்தை மீட்கும் பணிகளில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி மதுரை ஆதீனத்தின் முன் பகுதியில் சண்முகம் மற்றும் இளவரசன் ஆகியோரிடம் இருந்து 3,200 சதுர அடி இடம் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனி டையே மதுரை ஆதீனத்தின் முன்புறம் 3,200 சதுர அடி இடத்தினை ஆக்கிரமித்த தற்காக 2 வாரத்திற்குள் ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கோர்ட்டு உத்தரவை அவர்கள் நிறைவேற்றா ததால் தங்கும் விடுதிக்கு சீல் ைவக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் மதுரை ஆதீனம் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடம் சட்ட ரீதியாக மீட்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள ஆதீனத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுப்போம்.

    மேலும் ஆதீனத்திற்கு சொந்தமாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள 1,100 ஏக்கர் இடத்தில் விவசாய பல்கலைகழகம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.பிரதமர் அனைத்து ஆதீனங்களையும் சந்தித்தார் அவரின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.

    • விவசாய நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்?
    • விருதுநகர் கலெக்டரிடம் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ், மும்மூர்த்தி, காராளம். இவர்கள் 3 பேருக்கும் அரசகுளம் கிராமத்தில் விவசாய பட்டா நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித அறிவிப்பு நோட்டீசும் வழங்காமல் விவசாய நிலத்தின் மீது மாவட்ட நிர்வாகம் சாலை அமைத்தது. இது தொடர்பாக 3 பேரும் மாவட்ட நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். அதில், எங்களது விவசாய நிலத்தில் மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்ன றிவிப்பும் செய்யாமல் சாலை அமைத்துள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தலா ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது நீதிபதிகள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கையகப் படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் எப்படி சாலை அமைத்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 20 -ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ×