search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து ஏற்பட்டது.

    கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அருகே இருந்த அறைகளுக்கும் கரும்புகை பரவியதால் அங்கிருந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

    மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    • செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
    • கல்லூரிகளில் இது போன்ற குறைகளை நீக்க முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் சட்டமன்றத்தில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில்.

    2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது.

    கூட்ட தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்வி பின்வருமாறு,

    பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்ட, நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மாணவர்கள் பெரும் இன்னலை சந்திக்கிறார்கள்.

    சுற்றுச்சுவர், நடைபாதை, ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு கட்டிடம் மட்டும் இருக்கிறது, வகுப்பறை நடக்கிறது.

    எனவே அரசு உடனடியாக இதை பரிசீலித்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    அதுபோல அங்கு நிர்வாக செலவுகளுக்கு பல்கலைக்கழகத்தை சார்ந்திருப்பதா அரசை சார்ந்திருப்பதா என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்தது.

    நிர்வாக செலவுகளுக்கு போதிய நிதி இல்லாமலும் அவர்கள் திண்டாடக்கூடிய சூழலை காண முடிகிறது.

    அதையும் அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய தீர்வை தருமா என்று அமைச்சர் அவர்களை அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு கலைக் கல்லூரிகளில் இது போன்ற குறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்று முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    எனவே ஆய்வகம், விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    • பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • வகுப்பறை மட்டும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது அவரிடம், இதுவரை பழுதடைந்த 8 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆய்வக கட்டடம் இல்லா மல் மாணவர்கள் சிரம ப்படுவதாகவும் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அப்போது, வகுப்பறை மட்டும் ஆய்வக கட்ட டம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார். அத்துடன், அங்கு நடை பெற்று வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், விலக்கு பெறும் வரையில், அத்தேர்வை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று மாணவ ர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியா சுதீன், ரிபாயுதீன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்டிபிசிஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.
    • வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

    மன்னார்குடி:

    சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறையின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்து வமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர்
    பால சுப்ரமணியன்கலந்து கொண்டனர்.

    இவ்வாய்வ கத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

    இதுவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.

    தற்போது கூடுதலாக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவ மனையிலும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்படுகிறது.

    இதன்மூலம் மன்னார்கு டியை சுற்றியுள்ள பகுதிக ளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.செல்வகுமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ கீர்த்தனா மணி, மன்னார்குடி நகரமன்ற தலைவர்.சோழராஜன், துணை தலைவர் கைலாசம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.விஜயகுமார்,மருத்துவமனை நிலைய அலுவலர் மரு.கோவிந்தராஜ், ஆர்டிபிசிஆர் ஆய்வக அலுவலர் மரு.பாரதிகண்ணமா, தேசிய நல்வாழ்வு குழும அலுவலர் மரு.வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×