என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"

    • இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
    • இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

    அதில் இந்திய அணி வீரர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். அதை தவிர விராட் கோலி, அஸ்வின், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேமரூன் கிரீன், அலேக்ஸ் கேரி, அஸ்வின், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், முகமது ஷமி.

    இது குறித்து நாசர் உசேன் கூறியதாவது:-

    பேட் கம்மின்ஸ் எளிதான தேர்வாக இருந்தது. ஸ்டார்க் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், ஒவ்வோரு பந்தையும் மாறுபட்டு (variation) வீசுவதாலும் அவரை 10-வது வீரராக தேர்வு செய்தேன்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துணைக் கண்டத்திலோ அல்லது இந்தியாவிலோ நடந்தால், நான் ஜடேஜாவை தேர்வு செய்திருப்பேன். ஆனால் இந்த போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.

    ஆல்-ரவுண்டராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தேர்வு செய்வேன். அவர் 8-வது இடத்தில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது.
    • டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே நாங்கள் டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய வீரர் அக்சர் படேல் கூறியதாவது:-

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும் எளிதள்ள. அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.

    ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம்.

    இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
    • ஆஸ்திரேலியா அணி எட்டு வருடங்களில் இந்திய அணியை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்கடிக்கவில்லை.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    இந்நிலையில் இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.

    1880-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அன்று முதல் 38 டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் 18.42 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து மைதானங்களிலேயே இந்த மைதானத்தில் அவர்களின் மோசமான சாதனையாக இது உள்ளது.

    ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. மறுபுறம், அவர்கள் லார்ட்ஸில் 29 போட்டிகளில் 17 வெற்றிகளுடன், ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 43.59 -ஆக உள்ளது. இது 141 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்தின் 39.72 சதவிகிதத்தையும் அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவின் 33.33 சதவீதத்தையும் விட சிறந்ததாகும்.

    இங்கிலாந்து மைதானங்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் ஹெடிங்லியில் 34.62 சதவீதமும், டிரெண்ட் பிரிட்ஜில் 30.43 சதவீதமும், ஓல்ட் டிராஃபோர்ட் மற்றும் எட்ஜ்பாஸ்டனில் முறையே 29.03 சதவீதம் மற்றும் 26.67 சதவீதமாக உள்ளது.

    இதேபோல இந்திய அணி ஓவல் மைதானத்தில் பெரிய அளவில் சாதித்ததில்லை. இந்த மைதானத்தில் இந்திய அணி இரண்டு வெற்றி, ஏழு டிரா மற்றும் ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2021-ல் இங்கிலாந்துக்கு எதிராக 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு 40 ஆண்டுகால டெஸ்ட் போட்டியில் ஓவல் மைதானத்தில் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    ஆஸ்திரேலியா அணி எட்டு வருடங்களில் இந்திய அணியை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்கடிக்கவில்லை. இந்திய அணியிடம் நான்கு தொடர்ச்சியான தொடர் தோல்விகள் ஆஸ்திரேலிய அணி சந்தித்துள்ளது.

    • ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி துருப்பு சீட்டாக விராட் கோலி மற்றும் புஜாரா இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள்.

    கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும்.

    கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். தான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்.

    என பாண்டிங் கூறினார்.

    • தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும்.
    • நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன்.

    சிட்னி:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 7-ந்தேதி லண்டன் ஓவரில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியை விரைவில் அவுட் ஆக்குவது முக்கியமானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார்கள். எனவே அவர்களை முடிந்த வரை சீக்கிரம் அவுட் ஆக்குவது அந்தந்த அணிகளுக்கு முக்கியத்துவமாக இருக்கும்.

    தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும். நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன். ஆனால் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்.

    கடந்த 3 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவைவிட இந்தியா சிறப்பாக விளையாடி உள்ளது. எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயமாக இருக்காது. இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.
    • வானிலைக்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது.

    டெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார்இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பார்க்கும்போது கடந்த முறை இறுதிப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்வது முக்கியது. கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.

    ஆகையால், அதற்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது. அதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, அடுத்த வீரர்களில் கேஎஸ் பரத்தா அல்லது இஷான் கிஷனா என்பதில் எதிர் அணி 2 சுழப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நான் கேஎஸ் பரத்தை சேர்ப்பேன்.

    ஆனால், எதிர் அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினால் நான் இஷான் கிஷனை தேர்வு செய்வேன். அடுத்து ஜடேஜா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், உமேஷ் ஆகியோர் என் தேர்வு செய்யும் வீரர்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    • இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
    • ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் நியமிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

    தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில் ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோரும், ஹிந்தி வர்ணனைக்கு ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ் மொழி வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம்.
    • அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லாபுசேன் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதில் மும்முரமாக இருந்தபோதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தயாராகி வந்தார். கடந்த சில மாதங்களாக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பான பார்மில் உள்ளார்.

    இந்நிலையில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள் எனவும், கவுண்டி கிரிக்கெட் உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசேன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இயற்கையாகவே, ஆஸ்திரேலியாவுக்காக நம்பர் 3 பேட்டிங் செய்யும் எவருக்கும் பொறுப்பு இருக்கும். 2019-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போதும் எனக்கு இந்த பொறுப்பு இருந்தது. ரன்கள் எடுப்பது எனது வேலை. நான் ரன்கள் எடுக்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என் வேலையைச் செய்ய வேறொருவரைக் தேர்வு செய்து விடும். இந்த நிலை எப்போதுமே மாறாது.

    என்னால் முடிந்த அளவு அதிக ஆட்டங்களில் ரன்களை குவிப்பதற்கும் பங்களிப்பதற்கும் பல வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

    இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் முகமது சமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம். அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கவுண்டி கிரிக்கெட்டில் 28 வயதான அவர் எட்டு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் மொத்தம் 504 ரன்கள் எடுத்தார்.

    • சுப்மான் கில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்ப்பு
    • ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா முடிந்த கையோடு இந்திய அணியில இடம் பிடித்துள்ள வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியனுக்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த முறை இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த முறை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் சமீபகாலமாக அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அசத்தினார்.

    ஆனால், அவர் இந்த விசயத்தில் ஆட்டம் கண்டுவிடுவார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரேக் சேப்பல் கூறியதாவது:-

    நான் சுப்மான் கில்லை ஆஸ்திரேலியாவில் வைத்து பார்த்து இருக்கிறேன். இந்தியாவில் உலக கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்க காரணம், அவர்கள் ஏராளமான ஆட்டங்களில் விளையாடி முன்னேற்றம் அடைகிறார்கள். அவர்கள் அதிக அளவில் வெளிநாட்டு தொடரில் விளையாடுவதை உறுதி செய்கிறார்கள். ஆகவே, சுப்மான் கில் வெளிநாட்டில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அவர் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசினால், இங்கிலாந்து சூழ்நிலையில் எந்தவொரு பேட்ஸ்மேனும் திணறுவதுபோல் அவரும் திணறுவார். மிட்செல் ஸ்டார்க் போன்று கூடுதல் வேகம் மூலம் சுப்மான் கில்லை திணறடிக்க முடியும். கூடுதல் வேகம் சிறந்த பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யும். அதேபோல் எக்ஸ்ட்ரா பவுன்சரும் சிறந்த வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும்.

    ஹேசில்வுட் உடற்தகுதி பெற்று விளையாடினால், அது சுப்மான் கில்லுக்கு தொந்தரவு கொடுப்பார். ஹேசில்வுட் விளையாடவில்லை என்றால், போலந்து விளையாட வாய்ப்புள்ளது. அவரும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அவர் சரியான லைனில் பந்து வீசுகிறார். இங்கிலாந்து சூழ்நிலையில் அவரது பந்து வீச்சு சிறந்த லெந்த் ஆகவும் இருக்கும்.

    சுப்மான் கில் தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்து மீது கவனம் செலுத்துவார். பந்து சற்று பவுன்சரானால், க்ரீஸ் உள் நின்று விளையாடுவார். நான் பார்த்த இந்த சிறிய விசயத்தை ஆஸ்திரேலியாவை அறிந்திருக்க வேண்டும் என்றார்.

    • ஆல் ரவுண்டர் பணியில் கேமரூன் க்ரீன் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு
    • ஆஸ்திரேலியாவின் முதல் இலக்கு விராட் கோலியாகத்தான் இருப்பார்

    கிரிக்கெட்டில் உலகில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பற்றிதான் பேசப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது. ஸ்லெட்ஜிங், மோதல், முறைத்தல் போன்றவைகளை பார்க்கலாம்.

    மைதானத்தில் எலியும் பூனையாக மோதிக்கொண்டாலும் வெளியில் நண்பர்களாக ஒருவரை ஒருவர் பாராட்டுவது நடைபெற்றுதான் வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் ஆஸ்திரேலியா அணியில் உள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்பது உறுதி.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து கேமரூன் க்ரீன் கூறுகையில் ''விராட் கோலி, மிகப்பெரிய தருணம், அதாவது மிகப்பெரிய போட்டியில் முன்னணி வீரராக உயர்ந்து நிற்க எப்போதுமே முயற்சி மேற்கொள்வார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உண்மையிலேயே மிகப்பெரிய தருணம். ஆகவே, நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    களத்தில் இறங்கும் போது டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஏதும் இல்லை. பதற்றமான நிலையுடன் அதிக டென்சன் உண்டாகும். அதை கையாளத் தெரிந்த சிறந்த வீரர் சிறந்த வீரராக திகழ்வார்.

    ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி, சுப்மான் கில் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டனில் நடைபெற உள்ளது.
    • இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது. பந்துவீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • பரத் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என யோசித்தேன்
    • ஜடேஜா, அஸ்வின் இரண்டு பேருக்கும் இடம்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் களம் இறங்குகிறது.

    இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற துடிப்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் வீரர்கள் யாராக இருப்பார் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

    இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட சாதமாக இருக்காது. வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்பதால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணி ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    இந்த கவாஸ்கர் தன்னுடைய ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளார். அந்த அணி வருமாறு:-

    1. ரோகித் சர்மா, 2. சுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. கே.எஸ். பரத், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. முகமது சமி, 10. முகமது சிராஜ், 11. ஷர்துல் தாகூர்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவது:-

    பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ரோகித் சர்மா, சுப்மான் கில் தொடக்க வீரர்கள், புஜரா 3-வது, விராட் கோலி 4-வது. ரகானே ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவார்.

    6-வது இடத்திற்கு விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத்தா? அல்லது இஷான் கிஷனா? என யோசித்து பார்த்தேன். எல்லோரும் பரத்தை பற்றி பேசுகிறார்கள். ஏனென்றால் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆகவே, 6-வது இடத்திற்கு அவர் சரி எனத் தோன்றுகிறது. சுழற்பந்து வீச்சில் இரண்டு ஜடேஜா, அஸ்வின் ஆகிய இருவருக்குமே இடம் கொடுத்துள்ளார்.

    ×