என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயல்பு வாழ்க்கை பாதிப்பு"

    • நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நனைந்தவாறே சென்றனர்.
    • பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தவாறே சென்றனர். மேலும் அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது. மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், கும்பூர், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இருளிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும்.
    • கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானில் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் பனிக் காலம் நிலவும். இந்த சீசனில் கொடைக்கானலுக்கு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் நிலவுவதால் காஷ்மீரில் இருப்பது போன்று பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும். இது போன்ற சீதோஷ்ணத்தை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.

    இதன்படி கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் பனியையும் பொருட்படுத்தாது அனைத்து சுற்றுலா தலங்களிலும் தங்கள் பொழுதை உற்சாகமாக கழித்து வந்தனர்.

    நேற்று இரவு முதல் கொடைக்கானலில் மீண்டும் உறை பனி தொடங்கியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் உறை பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காணப்பட்டது. செடிகள் மீதும் உறை பனி படர்ந்து இருந்ததால் பச்சை நிறம் தெரியாத அளவுக்கு காணப்பட்டது. உறை பனியால் சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளான நிலையில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்து வந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகாலை நேரத்தில் வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கி கிடந்தனர். இன்று காலை நிலவரப்படி கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது. வரும் நாட்களில் இது மேலும் 0 டிகிரியாக குறையலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு குறைந்துள்ள நிலையில் பகல் பொழுதில் வெளியே வர முடியாமல் மதிய நேரத்துக்கு பிறகே வெளியே வருகின்றனர்.

    மேலும் கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவி எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடும் உறை பனி, பனி மூட்டத்தால் பள்ளிக்கு செல்லும மாணவ-மாணவிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    • மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று மதியம் வரை விடிய விடிய பெய்து வருகின்றது.

    கடலூர்:

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று மதியம் வரை விடிய விடிய பெய்து வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை கொட்டி தீர்த்து வரும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

    மேலும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவில் தொடர் மழை காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாமல் முடக்கியது குறிப்பிடத்தக்கதாகும். சாலை யோரத்தில் விற்பனை செய்யப்பட்ட விநாயகர் சிலை பூஜை பொருட்கள் பழ வகைகள் போன்றவைகள் முழுவதும் தொடர் மழை காரணமாக நாசமடைந்ததால் லட்சக்கணக்கான ரூபாய் சாலையோர வியாபாரிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் மிகுந்த கவலையுடன் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆற்றில் தற்போது நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆறு ஓரங்களில் இருந்த கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்‌ இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் தற்போது தேங்கி வருவதால் நெற்பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடு பயிர்கள் நாசமாகும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மனக்கவலையுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காலை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் குடை பிடித்த படியும் மிகுந்த அவதியுடன் சென்றதையும் காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும், இரு சக்கர வாகனங்களில் சென்ற மக்கள் மிகுந்த அவதியுடன் சென்றதையும் காண முடிந்தது. 

    கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழையளவு பின்வருமாறு:-

    . கீழச்செருவாய் - 106.0, பெல்லாந்துறை - 84.2 தொழுதூர் - 47.0, வடக்குத்து - 33.0, லால்பேட்டை - 33.0, காட்டுமன்னார்கோயில் - 32.0, வேப்பூர் - 23.௦ கொத்தவாச்சேரி - 20.0, குறிஞ்சிப்பாடி - 19.0 . ஆட்சியர் அலுவலகம் - 17.8எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 12.5 லக்கூர் - 11.0 13. பண்ருட்டி - 11.0, கடலூர் - 9.6, வானமாதேவி - 9.0, அண்ணாமலைநகர் - 9.0, 17. சிதம்பரம் - 4.4 பரங்கிப்பேட்டை - 2.8, சேத்தியாத்தோப்பு - 2.2 விருத்தாசலம் - 2.2, ஸ்ரீமுஷ்ணம் - 2.1, மீ-மாத்தூர் 

    ×