search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டம்"

    • பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, மாற்று வழியில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • தாம்பரம் சிக்னல் பணிகள் முடிவடையும் வரை 20 முதல் 30 நிமிடங்கள் வரை புறநகர் பகுதியில் தாமதமாக இயக்கப்படும்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பண்டிகை காலக்கட்டங்களின்போது முன்பதிவு தொடங்கியதும் 2 நிமிடங்களில் அனைத்து இருக்கைகளும் ரெயில்களில் நிரம்பிவிடும்.

    தினந்தோறும் பணி நிமித்தமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ரெயில்களில் அதிகமாகவே இருக்கும். மிகவும் பாதுகாப்பான மற்றும் சவுகரியமான பயணமாக ரெயில் பயணம் இருப்பதால் மக்கள் அதனையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.

    இந்நிலையில் சென்னை ரெயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்துதல் பணி உள்ளிட்டவை நாளை முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை தாம்பரம் செல்லும் பல்வேறு ரெயில்கள் பகுதி தூரமாகவும், சில ரெயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, மாற்று வழியில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில் (வண்டி எண்கள்.20665, 20666) நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலானது தாம்பரம்-எழும்பூர் இடையே புறநகர் ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரெயில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக எழும்பூரை சென்றடையும்.

    செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் மாதம் 14,15,16-ந்தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே செல்லும். ஆகஸ்ட் 17-ந்தேதி செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம் என மாற்று வழியில் எழும்பூர் செல்லும்.

    அதேநேரம் இரவு நேரங்களில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களான நெல்லை, பொதிகை, அனந்தபுரி, பாண்டியன், முத்துநகர், சிலம்பு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் சிக்னல் பணிகள் முடிவடையும் வரை 20 முதல் 30 நிமிடங்கள் வரை புறநகர் பகுதியில் தாமதமாக இயக்கப்படும்.

    முதல் கட்டமாக இந்த ரெயில் இயக்க மாற்றங்களானது நாளை(திங்கட்கிழமை) தொடங்கி இந்த மாதம் 31-ந்தேதி வரை பொருந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் இரவு 11 மணிக்கு புறப்படும் வண்டி எண்.20691 தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரெயில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3.50 மணிக்கு புறப்படும் வண்டி எண்.20692 நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரெயில் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை முழுமையாக ரத்தாகிறது.

    இதேபோல் தினமும் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும் செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.20684) ரெயிலானது இன்று தொடங்கி, 24,26,27,29,31-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும். இந்த ரெயிலானது விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.20683) ரெயிலானது வருகிற 24,25,28,30-ந்தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் ஆகஸ்ட் 13-ந்தேதி வரை ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப் படும் தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்.22657)விரைவு ரெயில் வருகிற 24,28,29 மற்றும் 31-ந்தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-தாம்பரம்(வண்டி எண்.22658) ரெயிலானது இன்று, நாளை மற்றும் 25,29,30-ந்தேதிகளில் சென்னை தாம்பரத்திற்கு பதில் எழும்பூரில் சென்று நிற்கும்.

    • தென்மாவட்டங்களின் வளர்ச்சியே எனது வாழ்நாள் லட்சியம் என்று ராம.சீனிவாசன் பேசினார்.
    • பல போராட்டங்களை முன்னெடுத்தன் மூலம் விரைவில் திருமங்கலத்தில் எய்ம்ஸ் கட்டிடம் எழும்ப உள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்ப ரங்குன்றம் மதுரை மாநகர் ஆகிய இடங்களில் பா.ஜ.க. மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில் கருமுத்து கண்ணன், தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஆகியோர் பேசினர். இதில் ராம சீனிவாசன் பேசியதாவது:-

    தமிழகத்தில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை, லட்சியம், கனவு ஆகும்

    அந்த கனவை நோக்கித் தான் நான் வேகமாக அடியெடுத்து வைத்து கொண்டு இருக்கிறேன்.அதில் முதல்படியாக மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தன் மூலம் விரைவில் திருமங்கலத்தில் எய்ம்ஸ் கட்டிடம் எழும்ப உள்ளது. விருதுநகரில் ரூ. 200 கோடியில் ஜவுளி பூங்கா திட்டம் அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்ற முன்வராத மாநில அரசை கண்டித்து அறபோராட்டங்களை செய்ய இருக்கிறேன்.

    அதே போல் கிரானைட் குவாரி ஏழை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தாமரை யாத்திரை மேற்கொண்டதின் பலனாக விரைவில் குவாரிகள் திறக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க இன்றளவும் பல போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

    தென்மாவட்டங்களின் சிறுகுறு தொழில், கைவினை தொழிலாளர்கள், வாழ்வாதாரங்களை காக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்திராமனிடம் போராடி ஜி.எஸ்.டி.யை குறைத்தும், பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கும் பெற்று தந்திருக்கிறேன்.

    திரைப்படங்களில் தென்மாவட்டங்களை அடிதடி, ரவுடிசம், என்று ரத்த களறி பூமியாயாக காட்டுகிறார்கள். அந்த மனநிலையை மாற்ற வேண்டும். தென்பகுதிகளில்தான் சுற்றுலா தளங்கள் ஏராளமாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஆன்மீக தளங்கள் உள்ளன.

    சிவனை வணங்குவதாக இருந்தால் கூட தென்னாடுடைய சிவனே போற்றி என்றுதான் வணங்குறோம். அவ்வாறாக இயற்யுகையும், ஆன்மீகமும் இணைந்த தென்மாநிலங்கள் வளர்ச்சி அடைய என் உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் 1000 பேருக்கு வேட்டி, சேலைகளும், 1000 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. திருமங்கலம் நகர் ரெட்டி நலசங்கம் சார்பில் பேராசிரியர் ராம.சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து மரியாதை செய்யபட்டது. இதில் முரளிராமசாமி, மோனிகா சதீஷ், திருமலை,லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×