search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.10 ஆயிரம் அபராதம்"

    • பவானி உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார்.
    • 2 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு வட்டாரத்திற்க்கு உட்பட்ட சித்தோடு பகுதியில் கலெக்டர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை ஆகியோர் பரிந்துரைபடி தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என மளிகை கடைகள் மற்றும் சிறிய அளவிலான பெட்டிக்கடை ஆகியவற்றில் பவானி உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 2 கடைகளில் ஹான்ஸ் 10 பாக்கெட், பான் மசாலா 15 பாக்கெட் விற்பனை செய்ய வைத்து இருந்ததா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேண்டு கோள் விடுத்துள்ளார். 

    • வனப்பகுதியில் அனுமதியின்றி சுற்றி திரிந்த வாலிபர் பிடித்து விசாரணை செய்தனர்.
    • ரூ.10 ஆயிரம் அபராத விதிக்கப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட விளாங்கோம்பை வனப்பகு தியில் வன காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது வனப்ப குதியில் அனுமதியின்றி சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கே.என்.பாளையம் அம்மன் நகர் முதல் வீதியை சேர்ந்த மாதேஷ் (25) என்பது தெரிய வந்தது.

    இதனை யடுத்து அனுமதி யின்றி அத்துமீறி வனப்பகு திக்குள் சுற்றி திரிந்த குற்றத்திற்காக மாதேஷ் என்பவரை டி.என்.பாளை யம் வனச்சரக அலுவலக த்திற்கு அழைத்து வந்து வனச்சரகர் கணேஷ் பாண்டியன் விசாரணை செய்தார்.

    இதனையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாதுகா க்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த மாதேஷ்க்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் உத்தரவின்படி ரூ.10 ஆயிரம் அபராத விதிக்கப்பட்டது.

    மேலும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    • பட்டாசு கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெங்கடாசலபதி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் அறிவு ரையின்படி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் எனது தலைமையில் பட்டாசு கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, சட்டமுறை எடையளவு 2009 மற்றும் பொட்டலப் பொருள் விதிகள் 2011-ன்படி விற்பனை செய்யும் பட்டாசுகளில் உரிய அறிவிப்புகள் இல்லாதது குறித்தும், அதிகப்பட்ச சில்லரை விற்பனை விட கூடுதலாக விற்பனை செய்தல் குறித்தும், தரப்படுத்தப்படாத அலகில் அறிவிப்பு விலைப்பட்டியல் குறித்தும், கிருஷ்ணகிரி, தருமபுரி , அரூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் உள்ள 33 பட்டாசு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில், 2 கடைகளில் விதிகள் மீறப்பட்டது தெரிந்தது. அக்கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பலகைகளை அகற்ற முடியாமல் மாநகராட்சி தடுமாறி வருகின்றனர்.
    • மீண்டும் இரவோடு, இரவாக விளம்பர பலகைகளை வைத்து விடுகின்றனர்.

    கோவை -

    சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு அறிவுறத்தல்களை மீறி கோவை நகர் பகுதிகளில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் அடிக்கடி வைக்கப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இதனை பார்த்து அகற்றினாலும், மீண்டும் இரவோடு, இரவாக விளம்பர பலகைகளை வைத்து விடுகின்றனர்.

    இதுபேன்ற விளம்பர பலகைளை அகற்றி னாலும், மீண்டும் வைக்காமல் இருக்க இரும்பு கம்பிகளையும் வெட்டி அகற்ற நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டிருந்தார்.ஆனால் மாநகராட்சி யால் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனம் கோவையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் தங்களது விளம்பர பலகைகளை வைத்து வருகிறது.

    இந்த பலகைகளை அகற்ற முடியாமல் மாநகராட்சி தடுமாறி வருகின்றனர்.

    இந்த நிலையில் டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு அருகேயே என்.எச்.ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜின் மாடியில் இருபுறங்க ளிலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், கோர்ட்டு அறிவுறு த்தல்களை மீறி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த தகவல் மாநகராட்சி கமிஷனர்(பொ)ஷர்மிளா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவர் விளம்பர பலகைகளை அகற்றவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

    மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையில் சென்ற அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு செய்து, அந்த லாட்ஜூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். விளம்பர பலகை மற்றும் இரும்பு கம்பிகளை அகற்றாவிட்டால், லாட்ஜூக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

    ×