search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பிறந்தநாள்"

    • அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றார்.

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு' என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.
    • தமிழ்நாடாக தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப்சாமுவேல், பரந்தாமன், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து உருவப்படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.

    இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம்.எல்.ஏ. பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    அண்ணா அறிவாலய கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த 75-ம் ஆண்டு தி.மு.க. பவளவிழா இலட்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


    இதேபோல் அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 75-வது ஆண்டு தி.மு.க. பவள விழா இலட்சினையை திறந்து வைத்து கொடியேற்றினார். இதில் இளைஞரணி மாநில நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    75 ஆண்டுகளாக தி.மு.க. இந்த சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!

    தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் "அண்ணா… அண்ணா…" என்றே பேசினார், எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்.

    ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.
    • திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.

    சென்னை:

    தி.மு.க, துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம்.

    சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.

    திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.

    இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். 


    'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின்… pic.twitter.com/f4cRNDLphk

    • வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.
    • அண்ணா அறிவாலயம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணா சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப் சாமுவேல், பரந்தாமன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.

    இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெரு மக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி., சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
    • திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடந்தது.இதில் நடந்த பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரங்கிரி முதல் பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரூபன் 2-வது பரிசும், திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி வினித்தா 3-வது பரிசும், அய்யன்காளி பாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா மற்றும் குமார்நகர் மாநகராட்சி பள்ளி மாணவி பானுப்பிரியா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வு பெற்றனர். கல்லூரி மாணவர்கள் பிரிவில் தாராபுரம் அரசு கல்லூரி மாணவர் பிரவீன் முதல் பரிசும், மாணவி தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.

    பின்னர் நடந்த பெரியார் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மவுனிகா முதல் பரிசும், வேலம்பாளையம் ஜெய்சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிஷப்பிரியா 2-வது பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு 3-வது பரிசும், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது அஜிம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வானார்கள்.

    கல்லூரி மாணவர்கள் பிரிவில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி காயத்திரி முதல் பரிசும், தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கவுதமன் 2-வது பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்டியில் பங்கு பெறும் மாணவ-மாணவியர்கள் தன் சொந்த சைக்கிள் மற்றும் தலைக்கவசத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
    • போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா சைக்கிள் பந்தயம் 14-ந்தேதி காலை 6 மணியளவில் சென்னை தீவுத்திடலில் தொடங்கி, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், நேப்பியர் பாலம், காயிதே-இ-மில்லத் பாலம் இடது புறம் அண்ணாசாலை வழியாகச் சென்று மீண்டும் தீவுத்திடலில் தொடங்கிய இடத்திலேயே முடிக்கப்படும்.

    இந்த போட்டியில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெறலாம். மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசும், தகுதிச்சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும்.

     போட்டியில் பங்கு பெறும் மாணவ-மாணவியர்கள் தன் சொந்த சைக்கிள் மற்றும் தலைக்கவசத்துடன் கலந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் அனைவரும் வயது சான்றிதழுடன் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவை கொண்டு 13-ந் தேதி வரை சென்னை-3, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.

    போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும், 14-ந்தேதி காலை 5.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முன் ஆஜராக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044-26644794, 7401703480 மற்றும் 7338980191 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
    • செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.

    தாராபுரம்:

    திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் அமமுக., துணைச் செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான சி. சண்முகவேலு தலைமை தாங்கினார்.

    திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பி. நல்லசாமி, அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் எம். ஆர்.ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட அமமுக., செயலாளர் கே.பி. நல்லசாமி பேசுகையில்;- அதிமுக., முன்னாள் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.  

    • காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில் தேரடி திடலில் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலா ளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில்குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை மற்றும் மாவட்ட நகர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் நடந்தபோது மழை பெய்தது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு மானாமதுரை-திருப்புவனத்தில் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    திருப்புவனத்தில் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் தலைமையில் தி.மு.க.வினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், மீனவரணி மாவட்ட நிர்வாகி அண் ணாமலை கலந்து கொண்டனர்.

    இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் தலைமையில் தி.மு.க.வினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர். இதில் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நகர் மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம்,ஒன்றியச் செயலர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, அண்ணா சிலைக்கு மாலை ஊராட்சி ஒன்றியத் தலை வர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துச் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, குணசேகரன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், கருணாகரன், ஹரிஹரசுதன், பட்டுலிங்கம், எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி ஈஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி மற்றும் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
    • மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 115-வது பிறந்தநாளையொட்டி மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின. மதுரையில் முகாமிட்ட வைகோ மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், மதுரை மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

    இந்த மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    அதன்படி மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலை 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச்சூழல் சவால்கள், அண்ணா ஏற்படுத்திய அறிவுச்சுடர்,

    திராவிட இயக்கத்தில் பெண்கள், மொழி உரிமைப் போராட்டம், நதிநீர் உரிமை போரில் வைகோ, பாராளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கே நமது இலக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செல்வராகவன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனோகரன், பி.கே. சுரேஷ், துணைப்பொது செயலாளர்கள் ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா, ராஜேந்திரன், ஆட்சிக்குழு கிருஷ்ணன் மற்றும் வந்தியதேவன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், ஆசைத்தம்பி, காரை செல்வராஜ், புலவர் அரங்க நெடுமாறன், மல்லிகா தயாளன், வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாஸ்கர் சேதுபதி, பால சசிகுமார் என்.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் செந்திலதிபன், துரை வைகோ, மல்லை சத்யா, கணேச மூர்த்தி, சதன் திருமலை குமார், சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாநாடு நிறைவு உரையாற்றுகிறார்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
    • மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

    இதையடுத்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

    ×