search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • முதலில் ஆடிய மங்கோலிய வீரர்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
    • இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை படைத்தது.

    கோலாலம்பூர்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. தற்போது இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், சிங்கப்பூர், மங்கோலியா அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுப் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சிங்கப்பூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மங்கோலியா வீரர்கள், மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 10 ஓவரில் 10 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை மங்கோலியா சமன் செய்தது.

    சிங்கப்பூர் சார்பில் பரத்வாஜ் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆடிய சிங்கப்பூர் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது.
    • 2007-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-முறையாக கைப்பற்றியது. 2007-ம் ஆண்டு டோனி தலைமையில் முதல் முறை கைப்பற்றியது. அதன் பிறகு 2024-ம் ஆண்டு தான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் இன்று மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர்கள் தங்களுடன் T20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று சாமி சிலை அருகில் வைத்து பூஜை செய்தனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.

    இந்நிலையில், டேவிட் மில்லர் கேட்சை பிடித்ததும் எல்லோரும் சூர்யகுமாரிடம் லைஐ டச் செய்தீர்களா என கேட்டோம் என்றார் அக்சர் படேல்.

    இதுதொடர்பாக அக்சர் படேல் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

    நான் மிட் விக்கெட்டில் இருந்தேன். மில்லர் பந்தை அடிக்கும்போது இது சிக்சருக்குப் போய்விட்டது என நினைத்தேன்.

    ஆனால் சூர்யா கேட்சை பிடித்ததும், எல்லோரும் அவரிடம் கேட்டார்கள் கயிற்றைத் தொட்டீர்களா? என. சூர்யா பாய்க்கு கூட உறுதியாக தெரியவில்லை. முதலில் ஆம், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனக்கூறிய அவர், சில நொடிகளில் எனக்கு உறுதியாக தெரியவில்லை என்றார்.

    ரீப்ளேயைப் பார்த்தபோது 99 சதவீதம் பேர் உலகக் கோப்பையை வென்றோம் என நினைத்தோம்.

    அது நெருக்கடியான நிலையில் பிடிக்கப்பட்ட கேட்ச். அப்போது அவர் தனது சமநிலையை தக்கவைத்த விதம் ஆச்சரியமாக இருந்தது என தெரிவித்தார்.

    • இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.
    • நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    2007 ஆம் ஆண்டுக்கு பின் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்த டி20 உலகக்கோப்பையை தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

    அவ்வகையில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.

    அண்மையில் நடந்த முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கிரிக்கெட் வீரர் பும்ரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

    இந்நிலையில், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • இந்தியா 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.
    • இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 ஆண்டு கழித்து உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

    இறுதிப்போட்டியில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அணி தடுமாறியபோது 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 31 பந்தில் 47 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் 4-வது இடத்தில் களமிறங்கியது குறித்து அக்சர் படேல் சமீபத்திய அளித்த பேட்டியில் கூறியதாவது:

    போட்டியின் ஆரம்பத்திலேயே 3 விக்கெட் விழுந்ததும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தன்னை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பினர்.

    ரிஷப் பண்ட் அவுட்டானபோது என்னுடைய பின்புறத்தில் நின்று கொண்டிருந்த ரோகித் பாய் பேட்டிங் செய்யத் தயாராகுமாறு சொன்னார்.

    அடுத்த சில நிமிடங்களில் என்னிடம் ஓடி வந்த சஹால், பயிற்சியாளர் ராகுல் பாய் பேட்டிங் செய்வதற்கு தயாராகுமாறு சொன்னதாக சொன்னார். அப்போது எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஏனெனில் 2 விக்கெட் விழுந்த பின்பும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் சூரியகுமாரும் அவுட்டானார்.

    எதைப் பற்றியும் யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்போது களத்திற்குச் சென்ற என்னிடம் "எதற்காகவும் பதறாமல் பந்தை பார்த்து அடி" என ஹர்திக் பாண்ட்யா குஜராத்தி மொழியில் சொன்னார். அது என்னுடன் ஒட்டிக்கொண்டது. அதன்பின் நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது என தெரிவித்தார்.

    • அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமானது.
    • உலகக் கோப்பை பயணம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என ஷிவம் துபே கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் என அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட ஷிவம் துபே, ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கிய அவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 16 பந்தில் 27 ரன்களை குவித்தார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என சிவம் துபே கூறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆதரவினாலேயே இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடியதாக தெரிவித்துள்ளார்.

     

    இதுதொடர்பாக, ஷிவம் துபே தனியார் இணைய தளத்தில் பேசியதாவது:

    டி20 உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிக முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகப்படுத்தியது.

    எனக்கு அசைக்க முடியாத, நம்பமுடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது.

    இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவுமென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • இலங்கை தலைநகர் கொழும்புவில் ஐ.சி.சி வருடாந்திர மாநாடு நாளை தொடங்குகிறது.
    • இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    கொழும்பு:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இதற்கிடையே, ஐ.சி.சி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ.சி.சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

    முக்கியமாக, நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஐ.சி.சி. தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவை அடுத்த ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க வலியுறுத்தப்படலாம் என தகவல் வெளியானது.

    • சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் இணைந்து ராட்சத கேக் வெட்டும் படங்களை பகிர்ந்துள்ளார்.
    • நான் பிடித்த அந்த கேட்ச் நேற்றுடன் 8 நாட்களை நிறைவு செய்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது டேவிட் மில்லரின் விக்கெட் தான். டேவிட் மில்லர் அடித்த சிக்சரை சூர்யகுமார் யாதவ் சாமர்த்தியமாக செயல்பட்டு கேட்ச் ஆக மாற்றினார். இது இந்திய வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

    இந்த நிலையில், உலகக் கோப்பையில் தான் பிடித்த கேட்ச் தனது வாழ்க்கையின் "மிக முக்கியமான கேட்ச்" அல்ல என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் ரசிகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது. அவர் தேவிஷா ஷெட்டியை திருமணம் செய்துகொண்டார்.

    சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டியின் எட்டாவது திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்த பதிவில் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் இணைந்து ராட்சத கேக் வெட்டும் படங்களை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவுக்கு, "நான் பிடித்த அந்த கேட்ச் நேற்றுடன் 8 நாட்களை நிறைவு செய்தது. ஆனால் என் வாழ்நாளில் மிக முக்கியமான கேட்ச் 8 ஆண்டுகளுக்கு முன்பே பிடிக்கப்பட்டு விட்டது! 8 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது, எல்லையற்ற ஆண்டுகள் செல்ல வேண்டும்," என்று தலைப்பிட்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் ஆறு மணி நேரத்தில் 700,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. பல ரசிகர்கள் மனதை கவரும் தலைப்பை பதிவு செய்து தம்பதியினரை வாழ்த்தினர்.

    சூர்யகுமார் யாதவ் (33) தேவிஷா (30) என்பவரை ஜூலை 7, 2016 அன்று திருமணம் செய்து கொண்டார். இருவரும் முதன் முதலில் 2010 இல் சந்தித்தனர்.

    • 21.07 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • BTS உறுப்பினர் V-ன் பதிவு 21.01 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் 21.07 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    ஆசியாவில் அதிக லைக்குகள் வாங்கிய இன்ஸ்டாகிராம் பதிவு என்ற BTS உறுப்பினர் V-ன் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    V பதிவிட்டிருந்த தனது செல்லப்பிராணியின் புகைப்படங்கள் 21.01 மில்லியன் லைக்குகள் பெற்றிருந்த நிலையில், விராட் கோலி பதிவிட்ட டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட புகைப்படங்கள் 21.07 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.

    இதற்கு முன்பு நடிகை கியாரா, சித்தார்த்தின் திருமண புகைப்படம் தான் இந்தியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் வாங்கி சாதனை புடைத்திருந்தது. அந்த சாதனையை அண்மையில், விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை புகைப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவித்தார் ஜெய்ஷா.

    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

    உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    இந்திய வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • மும்பையில் அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

    ×