என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிழக்கு கடற்கரை சாலை"

    • வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் நோக்கி வாகனங்கள் செல்ல முழுவதும் தடுக்க வேண்டியுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அக்கரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.சாலை வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம், கோவளம் வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும். கோவளத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து சோழிங்கநல்லூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அக்கரை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருவான்மியூர் செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் தாம்பரம் மாநகர போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

    அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.

    • வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    சென்னையில் மெரினா மற்றும் கிழக்குகடற்கரை சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பைக்ரேஸ் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பைக் ரேஸ் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    பாதுகாப்பு உடை அணிந்து இருந்த அவர்களை உதவி கமிஷனர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

    பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினர். இதனால் கோவளம் அடுத்த குன்னுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.
    • தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரம்:

    தாம்பரம் அருகே உள்ள நடுவீரபட்டு பகுதியை சேர்ந்தவர் நரேஷ்பாபு. ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

    இதையடுத்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லீலாவதி அரங்கத்தில் ஆடம்பரமாக திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    நரேஷ் மற்றும் அவரது அண்ணனுக்கும் அவர்களிடம் கூட்டாளியாக இருந்து தற்போது எதிரியாக உள்ள எதிர்தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.

    இதில் எதிர்தரப்பை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக திருமண நாள் அன்று நரேஷ்பாபுவை கொலை செய்ய எதிர்தரப்பினர் அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் திருமண வரவேற்பின் போது ரவுடிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மோதலை தடுக்கும் வகையில் நரேஷ்பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மண்டபத்திலும், அங்குள்ள அறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.

    இதேபோல் தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுப்புகள் அமைத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

    இரவு 7 மணி அளவில் மணமக்கள் சொகுசு ஜாகுவார் காரில் பாதுகாப்புடன் வந்து இறங்கினர். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலால் அவசர அவசரமாக வரவேற்பு, ஆடம்பர விருந்துகள் இரவு 10மணிக்குள் முடிக்கப்பட்டது.

    திருமண வரவேற்பில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    ×