search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna’s birthday"

    • காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில் தேரடி திடலில் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலா ளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில்குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை மற்றும் மாவட்ட நகர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் நடந்தபோது மழை பெய்தது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அண்ணா பிறந்த நாள் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • தொழில்நுட்ப பிரிவு தவமணிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    திருமங்கலம்,

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் நகரில் உள்ள தெற்கு மாவட்ட அலுவ லகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

    தொடர்ந்து அரசு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், இளமகிழன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டியன், ராமமூர்த்தி, தனபாண்டி யன், நாகராஜன் பாண்டி யன், இளைஞர் அணி விமல், பொதுக்குழு உறுப்பி னர்கள் சிவமுருகன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், தகவல் தொழில்நுட்ப பிரிவு தவமணிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடு துறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் விரைவு மிதிவண்டி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விரைவாக மிதிவண்டி இயக்குதல் போட்டி நடைபெற்றது.

    இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியை சேர்ந்த 80மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 15வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ரோஸ்லின்மேரி முதலிடம் பெற்று ரூ.5ஆயிரமும், 17வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 11-ம் வகுப்பு மாணவி ஷமினாராகவி 2-ம் இடம் பெற்று ரூ.3ஆயிரமும், 12-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ் மூன்றாம் இடம் பெற்ற ரூ.2ஆயிரமும் பரிசுதொகையை பெற்றனர்.

    மேலும் 15பேர் தலா ரூ.250பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

    இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடை நம்பி தலைமையில் நடைபெற்றது.

    உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வ ரிராஜசேகரன் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுதொகையையும் வழங்கினார்.

    இதில் நகர்மன்ற துணை தலைவர் ம.சுப்பராயன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிறைவில் உதவி தலைமைஆசிரியரும், உடற்கல்வி இயக்குனருமான எஸ்.முரளிதரன் நன்றிக்கூறினார்.

    ×