search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி பதக்கம்"

    • தகுதிநீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார்.
    • வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கொல்கத்தா:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் அவரது உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

    தகுதிநீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



    இதற்கிடையே, வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனக்கு சரியான விதி தெரியாது, ஆனால் அவள் இறுதிப் போட்டிக்கு வந்தபோது, அவள் சரியாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    எனவே நீங்கள் இறுதிப்போட்டிக்குச் செல்லும்போது, அது தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம்.

    தவறாக தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்திற்காவது அவர் தகுதியானவர் என தெரிவித்தார்.

    • நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.
    • எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன்.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 'டிராப்' கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த எஸ்.எம்.யுகன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவர் நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.

    வெள்ளி பதக்கம் வென்ற யுகனுக்கு 12 வயது தான் ஆகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இளம் வயதில் பதக்கம் பெற்று அவர் சாதித்துள்ளார். இதுகுறித்து யுகன் கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கம் வென்றதால் நான் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த எனது பெற்றோருக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்.

    எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன். 'டிராப்' பிரிவில் எனது கவனத்தை செலுத்தினேன். ஒரே நேரத்தில் படிப்பு மற்றும் பயிற் சியை நிர்வகிப்பது எனக்கு சற்று கடுனமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கி றது.

    இவ்வாறு யுகன் கூறி உள்ளார்.

    கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டிகளில் அவர் 125 இலக்குகளில் 108 புள்ளிகளை பெற்றதால் கேலோ இந்தியா விளையாட்டுக்கு முன்னேறினார்.

    • மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது
    • துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஏ.ஐ.சி.டி.இ. ஆலோசகர் டாக்டர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன் கலந்துகாெண்டு பரிசுகளை வழங்கினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பாெறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார்
    • மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

    ஜோலார்பேட்டை:

    33-வது தென்னிந்திய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 9-ந் தேதி முதல் துவங்கி 11-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற்றது.

    ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக அணி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு பெண்கள்.

    மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா பிளஸ் 2 பயிலும் மாணவி பங்கேற்றார்.

    16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 37.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    அதனைதொடர்ந்து பயிற்சி பெற்ற நாட்றம்பள்ளியில் உள்ள எஸ்கேவிஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நேற்று சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் தென்னிந்திய அளவில் ஜூனியர் தேசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    ×