என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் டி20 உலகக் கோப்பை"

    • சர்வதேச 2டி0 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • 20 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தமட்டில் இரு அணிகளும் 5 தடவை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    கெபேஹா:

    10 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) கெபேஹா நகரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்தை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.

    இந்திய அணி முந்தைய லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகளை துவம்சம் செய்தது. இதேபோல் இங்கிலாந்து அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அயர்லாந்தை தோற்கடித்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான இந்த மோதல் இந்தியாவுக்கு நிச்சயம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணியினரும் வரிந்துகட்டுவதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    இதில் 19-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 20 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தமட்டில் இரு அணிகளும் 5 தடவை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் இதில் அடங்கும். இரவு 10.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் மெக் லானிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை (ஏ பிரிவு) சந்திக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • தோற்றால், இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி வரும்.
    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளன.

    கியூபெர்தா:

    மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று புள்ளி பட்டியலில் 4 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (திங்கட்கிழமை) அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    தோற்றால், இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி வரும். ஏற்கனவே 3 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளன. 2018-ம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஆஸ்திரேலியா எல்லா உலகக் கோப்பை போட்டியிலும் அரைஇறுதிக்கு முன்னேறிய ஒரே அணியாக உள்ளது.
    • 20 ஓவர் சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    கேப்டவுன்:

    8-வது மகளிர்20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. 'ஏ' பிரிவில் நியூசிலாந்து (4 புள்ளி) 3-வது இடமும், இலங்கை (4 புள்ளி) 4-வது இடமும், வங்காளதேசம் (0) கடைசி இடமும், 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) 3-வது இடமும், பாகிஸ்தான் (2 புள்ளி) 4-வது இடமும், அயர்லாந்து (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. நேற்று ஓய்வு நாளாகும்.

    இந்த நிலையில் கேப்டவுனில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.

    எல்லா உலகக் கோப்பை போட்டியிலும் அரைஇறுதிக்கு முன்னேறிய ஒரே அணியான ஆஸ்திரேலியாவுக்கு பேட்டிங்கில் அலிசா ஹீலி, கேப்டன் மெக் லானிங், பெத் மூனி, தாலியா மெக்ராத்தும், பந்து வீச்சில் மேகன் ஸ்கட், ஆஷ்லி கார்ட்னெர், ஜார்ஜியா வார்ஹாமும் வலு சேர்க்கிறார்கள்.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் தோற்றதால் தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி 5-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் ரேணுகா சிங், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோரும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். ஆனால் ஹர்மன் பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவது இந்திய அணிக்கு சறுக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 22-ல் ஆஸ்திரேலியாவும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 20 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டத்திலும், இந்தியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றதும் இதில் அடங்கும்.

    • போராட்டங்கள், வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    • ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. எனினும், இந்த திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்காளதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபர சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்காளதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்காளதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.
    • வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்கதேசம் நடத்த இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்கதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்கதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்னை காரணமாக அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐசிசி பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.

    ஆனால், அக்டோபர் மாதம் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதாலும், இந்தியாவில் அடுத்தாண்டு மகளிர் ODI உலக கோப்பை நடக்கவுள்ளதாலும் ஐசிசியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    ஆதலால் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடம் குறித்து விரைவில் ஐசிசி முடிவெடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நிடா தருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் நிடா தர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிடா தர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் விவரம் பின்வருமாறு:

    பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தர், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமின், சையதா அரூப் ஷா, தஸ்மியா ரூபாப் மற்றும் துபா ஹாசன்

    ரிசர்வ் வீராங்கனைகள்: நஜிஹா அலி, ரமீன் ஷமிம் மற்றும் உம்மி ஹனி

    • அக்டோபர் 4ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
    • மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    அடுத்த மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் 9 ஆம் தேதி இலங்கை அணியுடனும் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும் இந்தியா மோதவுள்ளது. அக்டோபர் 20 ஆம்ட தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

    மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும் ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன் எடுத்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.
    • இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும். இலங்கையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா, தீப்திசர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 31 ரன் வித்தியாசத்திலும், 2-து போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவுஇல்லை.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. ஸ்காட்லாந்து 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    • ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
    • ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கணைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 88 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • தென் ஆப்பிரிக்கா கேப்டன் லாரா அதிரடியாக விளையாடி 40 ரன்கள் குவித்தார்.
    • நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் இதுவாகும்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட்- டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். கேப்டன் லாரா 27 பந்தில் 40 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த அன்னேக் போஷ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்னில் வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோராகும். 

    • பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
    • அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா ஏற்கனவே இலங்கை, நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் வேட்கையுடன் தயாராகிறது.

    பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. திடீர் பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனாவின் தந்தை மரணம் அடைந்து விட்டதால் அவர் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பாத்திமாவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் முனீபா அலி அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை ஒரு போதும் வென்றதில்லை. இதுவரை அந்த அணிக்கு எதிராக மோதியுள்ள 15 ஆட்டங்களில் 13-ல் தோற்றுள்ளது. 2 ஆட்டத்தில் முடிவில்லை. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இதற்கிடையே சார்ஜாவில் நேற்றிரவு நடந்த பி பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 104 ரன் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    ×