search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலைகள் சேதம்"

    • படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
    • வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் மீன்பிடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த நாகை பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆறுக்காட்டுத்துறை மீனவர்களின் வலையின் மீது விசை படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறை மீனவ்ாகளின் வலையை விசைப்படகு மூலம் சேதப்படுத்திய நாகை மீனவர்களை கண்டித்தும், இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, நேற்று முதல் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் ரூ.5 லட்சம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆறுக்காட்டுதுறை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை, இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
    • அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

    ராமேசுவரம்

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தமிழக மீனவர்களின் விசைபடகுகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ஏராளமான பிளாஸ்டிக் படகுகளில் ரோந்து வந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்றும், திரும்பி செல்லுமாறும் ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர்.

    மேலும் அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். அவர்கள் இன்று காலை ராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை வெட்டி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும், இதனால் ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் படை–யால் சிறைபிடிக்கப் பட்டு வருவது மீனவ மக்களி–டையே பெரும் கொந்த–ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை திரும்ப ஒப்ப–டைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக மீனவர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தினர் வலி–யுறுத்தி உள்ளனர்.

    ×