என் மலர்
நீங்கள் தேடியது "தீயணைப்பு படையினர்"
- நிலக்கரி ஏற்றிக்கொண்டு செஞ்சிஅருகே செம்மேடு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வந்தது.
- நிலக்கரி யினுள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த னர்.
விழுப்புரம்:
சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு செஞ்சிஅருகே செம்மேடு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வந்தது. இந்த லாரியை செஞ்சி தின்டிவனம் சாலை பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார். அப்போது திரும்பி வந்து பார்த்தபோது லாரியில் புகை வருவது தெரியவந்தது. உடனடியாக செஞ்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று நிலக்கரி யினுள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த னர். உடனடியாக சமயோசித மாக செயல்பட்ட தால் தீ அணைக்கப்பட்டு லாரி எரி யாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமின்றி மீட்கப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி யது.
- விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது.
- தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் சுமார் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. நேற்று மாலை இதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி அந்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர். நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- கிணற்றின் அருகே வந்த போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
- தீயணைப்பு படையினர் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு அருளை உயிருடன் மீட்டனர்
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி போப் நகர் பகுதியில் வசிப்பவர் அருள். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
மது குடிக்கும் பழக்கம் உடைய அருள், நேற்று வழக்கம்போல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே வந்த போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
இது குறித்து தெரியவந்ததும் பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் சிம்சன், தக்கலை போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து அருளை உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த தொழிலாளியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரையும், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியனையும் ஊர் மக்கள் பாராட்டினர்.
- வெள்ளத்தில் சிக்கியவர்களை லைப் பாய், ரப்பர் படகு ஆகியவற்றின் மூலம் மீட்பது
- பொது மக்கள் யாராவது ஆற்றில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது
கன்னியாகுமரி :
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தக்கலையில் நிலைய அலுவலர் தலைமையில் கல்குறிச்சி பச்சைகுளத்தில் மீட்பு ஓத்திகை நடைபெற்றது. இதில் வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை கொண்டு, எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட்டது.
அதன்படி காலி ரப்பர் குடங்கள், காலி கியாஸ் சிலிண்டர்கள், வாழை தண்டுகள், மூங்கில் கம்புகள், தண்ணீர் பாட்டில்கள், தென்னை குடுவைகள் ஆகியவற்றை கொண்டு வெள்ளத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை லைப் பாய், ரப்பர் படகு ஆகியவற்றின் மூலம் மீட்பது, அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பது ஆகியவை குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குழித்துறை தீயணைப்பு துறை சார்பில் இன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வெள்ளப்பெருக்கின் போது, பொது மக்கள் யாராவது ஆற்றில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது, கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது போன்ற ஒத்திகை பயிற்சிகள் தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது
- இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
- 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.

தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.
மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.
அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.
இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.
மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது.
- நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது. இந்த அைணக்கட்டில நேற்று மாலை நண்பர்கள் 5 பேர் குளித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ேதடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு மூழ்கியவர் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என தெரியவந்தது. அவர் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது.