search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோ-ஆப்டெக்ஸ்"

    • கலெக்டர் ஸ்ரீதர் இன்று தொடங்கி வைத்தார்
    • தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை

    நாகர்கோவில் :

    காலத்திற்கேற்ற வகை யில் புதிய உத்திகளைக் கையாண்டு பல வடிவமை ப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    மேலும் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனைதீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.

    குமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் குமரி விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனை இன்று காலை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

    இந்த ஆண்டு ரூ.6 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார். மேலும் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள், திருப்பு வனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள் பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நாகர்கோ வில் குமரி விற்பனை நிலையம், தக்கலை விற்பனை நிலையம், மார்த்தாண்டம் விற்பனை நிலையம். கன்னியா குமரி விற்பனை நிலையம், மார்த்தாண்டம் வளாக விற்பனை குழு ஆகி யவை மூலம் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ரூ.2.83 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

    தற்போது இந்த ஆண்டிற்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர் களிடமிருந்து பெறப்பட்டு 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி 12 மாதம் முடிவடைந்தவுடன் 30 சதவீதம் தள்ளுபடியுடன் மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    விழாவில் தலைமை அலுவலக முதன்மை பொது மேலாளர் அலோக் பாப்லே, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டலமேலாளர், ராஜேஷ்குமார், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை குமரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்பத்மராஜ் செய்திருந்தார்.

    • கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கம் கைத்தறி ரகங்க ளின் விற்பனையை அதிக ரிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுப டியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் ராமநாத புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்தி ரன் இன்று காலை குத்து விளக்கேற்றி முதல் விற்ப னையை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.21.59 லட்சம் ஆகும். இந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விழா வில் வர்த்தக மேலாளர் கே.சங்கர், மேலாளர் ஆர்.மோகன்குமார், விற்பனையாளர் ஆர்.பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக ஆர்கானிக் புடவை ரகங்கள், காஞ்சீபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்பு வனம் பட்டு, கோவை மென்பட்டு, கண்டாங்கி சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், திண்டுக்கல், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், சுடிதார் ரகங் கள், நைட்டிகள், குர்த்தீஸ்கள் கண்ணை கவரும் வண்ணங் களில் வாடிக்கையாளர்க ளுக்கான கொண்டு வரப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிர்ணயம்
    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவா ளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

    தற்போதைய காலத்திற் கேற்ற வகையில் புதிய யுக்தி களை கையாண்டு பல வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள 4 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் ரூ.2.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு ரூ.4.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல் படுத்தி வருகிறது. இதில் மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களி டம் இருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், முதுநிலை மேலாளர்(தணிக்கை) இசக்கிமுத்து, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ் செய்திருந்தார்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை சிவகங்ககை லெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அவர் குத்துவிளக்கேற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

    கோ-ஆப் டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து 87 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.

    இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்க ளிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.

    உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

    அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகளை வாங்கும்போது உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதேபோல் பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும்போது நெசவாளர்களின் பொருளாதார வளர்ச்சி அதிக நிலையை எட்டும்.

    தற்போது தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்படும் ஆடைகளில் அந்த பணியாளர்கள் பெயர் மற்றும் முன்அனுபவம் குறித்த பதிவுகளும் வெளிவருகின்றன. இதன்மூலம் ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம். ஒவ்வொருவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி தனது பங்களிப்பு நெசவாளர் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் (ரகம் மற்றும் பகிர்மானம்), மேலாளர் முல்லைக்கொடி (பொறுப்பு) மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×