search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"

    • கலவரத்தில் ஈடுபட்ட பலர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் மைசூர் பகுதிகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
    • அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என ஆந்திர மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந் தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    இதனை தொடர்ந்து 3 நாட்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் மோதலால் கலவரம் ஏற்பட்டது.

    பல்நாடு, திருப்பதி, அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த கலவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

    கார்கள், இருசக்கர வாகனங்கள் தீவைக்கப்பட்டன. மேலும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் நானி என்பவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் கலவரம் சம்பந்தமாக இதுவரை 800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பல்நாடு மாவட்டத்தில் தேர்தல் கலவரம் சம்பந்தமாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடி பத்திரியில் நடந்த கலவரத்தில் 234 பேரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு தேசம் வேட்பாளரை தாக்கியதாக 13 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதுவரை தேர்தல் கலவரம் சம்பந்தமாக மாநிலம் முழுவதும் 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை கண்டறிந்து கைது செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    கலவரத்தில் ஈடுபட்ட பலர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் மைசூர் பகுதிகளுக்கு தப்பி சென்று விட்டனர். அங்கு ஆந்திர மாநில போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் கலவரம் சம்பந்தமாக கண்காணிப்பு கேமரா மூலம் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது.

    அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என ஆந்திர மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
    • அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.

    இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.

    இதனால் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட தொகுதியில் என்னென்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி விசாரித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் தேர்தல் முடிவு வந்ததும் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார் என்று தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மத்தியில் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்த வேலைகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்து வார். இந்த பணிகள் ஜூன் 10-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது.

    அப்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் டி.ஆர்.பாலுவுக்கு ரெயில்வே இலாகாவும், கனிமொழி, ஆ.ராசா போன்றோருக்கு முக்கிய இலாகா கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ஒருவேளை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் ஜூன் முதல் வாரமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

    தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் மற்றும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கிடைத்துள்ள விசயங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அதன்படி அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. 4 பேர் நீக்கப்பட்டு 4 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    அது மட்டுமின்றி உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் தி.மு.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஜூன் 2-வது வாரம் இருக்கும் என்று தி.மு.க.வினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகள் பலர் பொறுப்புகளை எதிர் பார்ப்பதால் கட்சி ரீதியில் மாவட்டங்களை அதிகப்படுத்தி, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற முடியும் என கருதுகின்றனர்.

    எனவே அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    • தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது.
    • வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த சகோதரர்கள் இருவரும் தலைமரைவாகி விட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது. கலவரத்தை அடக்க 25 கம்பெனி துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய எம்எல்ஏ பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார்.

    தேர்தல் நாள் அன்று நடந்த கலவரத்திற்கு பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டியும், அவரது சகோதரர் வெங்கட்ராம ரெட்டியும் தான் காரணம் என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டினர். வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த சகோதரர்கள் இருவரும் தலைமரைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    • தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி நேற்று பத்மாவதி பல்கலைக்கழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை பார்வையிட சென்றார்.

    அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர். பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்கினர். இரும்பு கம்பியால் நானியை தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடைய பாதுகாவலர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதால் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நானி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி சந்திரகிரி ஆகிய இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு நிலைமை மோசம் அடைந்தது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தாடிப்பட்டியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர். அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி இரு தரப்பினரையும் போலீசார் கலைத்தனர்.

    இதே போல நேற்று தாடிபத்திரி தொகுதியில் இரு கட்சியினர் இடையே கடுமையான மோதல் வெடித்தது.

    இந்த தகவல் அறிந்த இருதரப்பு ஆதரவாளர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்தும் தாடிபத்ரி நகரப் பகுதியில் குவிந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

    இந்த 3 இடங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில் அமைதியாக தேர்தல் நடத்துவதில் போலீசார் தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    • கள்ள ஓட்டு போட வந்ததை வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

    இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். கல் வீச்சு அடிதடி மோதல் என தேர்தல் காரசாரமாக முடிந்தது. திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் வாக்குச்சாவடியில் 2 வாலிபர்கள் வாக்காளர்கள் போல் வரிசையில் நின்றிருந்தனர்.

    அவர்களை பார்த்து சந்தேகமடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர்கள், இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, நடுரோட்டில் மண்டியிட வைத்தனர். கைகளை மேலே உயர்த்தச் சொல்லி தடியால் அடித்து வெளுத்தனர். அடி தாங்க முடியாமல், கள்ள ஓட்டு போட வந்ததை வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.

    பிறகு, அவர்களை இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். வாலிபர்களை துணை ராணுவத்தினர் அடித்து வெளுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர்.
    • ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

    ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெறும்.

    இதே போல 25 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.


    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது அம்மாவையும் சகோதரியையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.

    2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது.

    கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நடத்தினார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார்.
    • கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று சட்டப்பேரவை, பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

    பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    பாபட்லா மாவட்டம், கரம் சேடுவில் உள்ள அம்பேத் நகரை சேர்ந்தவர் கர்னெபுடி சிங்கையா. இவரது மனைவி கர்னெபுடி சித்தேம்மா (வயது 60). கர்னெபுடி சிங்கையா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென கர்னெபுடி சிங்கையா உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார். தனது கணவர் இறந்து விட்டதால் கர்னெபுடி சித்தேம்மா துக்கத்தில் இருந்தார்.

    கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார். கணவர் பிணத்தை வீட்டில் வைத்துவிட்டு கர்னெபுடி சித்தேம்மா வாக்கு சாவடிக்கு சென்றார். கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    காலையில் வாக்கு பதிவு தொடங்கியதும் தாடிப்பத்திரி என்ற இடத்தில் இரு கட்சி கடுமையாக மோதி கொண்டனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    குண்டூர் அருகே உள்ள நரசராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது வாக்குப்பதிவு முடிந்து எந்திரங்கள் அனைத்தும் எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு பிறகும் தொண்டர்கள் ஆவேசமாக காணப்பட்டனர்.

    நரசராவ்பேட்டை நகரப் பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்களுக்குள் கலவரம் வெடித்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபி ரெட்டி சீனிவாஸ் எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது பின்னோக்கி செல்வது போல சென்ற தொண்டர்கள் மீண்டும் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு ஓடி வந்து கற்களை வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்நாடு பகுதியில் இரவிலும் தெலுங்கு தேசம் ஒய்எஸ்ஆர் கட்சியை காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

    நடுரோட்டில் கார் பற்றி எரிந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதே போல ஆந்திராவில் பல்வேறு இடங்களில் இரவிலும் மோதல் நீடித்தது. மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • எம்.எல்.ஏ. சிவக்குமார் தாக்கப்பட்டதை கண்ட ஆதரவாளர்கள் கூட்டாக சேர்ந்து வாக்களிக்க வந்தவரை தாக்கினர்.
    • பாதுகாப்புக்கு வந்த போலீசார் மோதல் சம்பவத்தை தடுத்து, பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவக்குமார் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்ய முயன்றதாக தெரகிறது. அப்போது, வரிசையில் சென்று வாக்களிக்க செல்வதை சுட்டிக்காட்டிய வாக்காளரை எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைய, பதிலடியாக எம்.எல்.ஏ.வை திருப்பி அடித்துள்ளார் வாக்காளர்.

    எம்.எல்.ஏ. சிவக்குமார் தாக்கப்பட்டதை கண்ட ஆதரவாளர்கள் கூட்டாக சேர்ந்து வாக்களிக்க வந்தவரை தாக்கினர். தேர்தல் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மோதல் சம்பவத்தை தடுத்து, பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் வாக்களர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    • போலீஸ் பாதுகாப்புடன் நடிகர்கள் இருவரும் வரிசையில் இன்று ஓட்டு போட்டனர்.
    • முக்கிய பிரபலங்கள் இன்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து போட்டு போட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஐதராபாத் ஜூப்ளிஹில்சில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    அவர்களை கண்டதும் வாக்குச்சாவடியில் நின்றிருந்த ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

    போலீஸ் பாதுகாப்புடன் நடிகர்கள் இருவரும் வரிசையில் இன்று ஓட்டு போட்டனர். அப்போது அல்லு அர்ஜுன் கூறியதாவது:-


    அடுத்த 5 ஆண்டுகளுக்கு இன்று ஒரு முக்கியமான நாள் என்பதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தயவு செய்து உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள். இது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும்.

    ஏராளமானோர் வாக்களிக்க வருவதால் அதிக அளவில் வாக்காளர்கள் குவிந்துள்ளனர். நான் அரசியல் ரீதியாக எந்த கட்சியுடன் இணைந்திருக்கவில்லை. நான் அனைத்து கட்சிகளுக்கும் நடுநிலையாக இருக்கிறேன் என்றார்.

    தெலுங்கானா பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். மேலும் பாஜக வேட்பாளர் மாதவிலதா அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல முக்கிய பிரபலங்கள் இன்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து போட்டு போட்டனர்.

    • 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது.
    • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தலம் மூலம் ஆந்திராவில் நடைபெறும் தேர்தலையொட்டி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதில் ஆந்திர பிரதேச மக்கள் குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    இந்த சாதனை நமது ஜனநாயக உணர்வை மேலும் மேம்படுத்தட்டும் என கூறியுள்ளார்.

    • ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    • மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரெண்டல கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால்,  ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திராவில் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    ×