search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ெரயில்கள்"

    • தென் மாவட்டங்களுக்கு பண்டிகை சீசன் சிறப்பு ெரயில்கள் விடப்படுகிறது.
    • தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகை கள் வருகின்றன. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்களை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்து உள்ளது.

    அதன்படி தாம்பரம்- நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படுகின்றன. 4-ந் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்படு கிறது. அது மதுரைக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும். மதுரை யில் இருந்து புறப்படும் ெரயில் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் 5-ந் தேதி நெல்லையில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் செல்லும். இது மதுரைக்கு இரவு 8.35 மணிக்கு வரும்.

    தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படு கின்றன. இது 6-ந் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்ப ரத்தில் இருந்து புறப்படும். மதுரைக்கு நள்ளிரவு 11.45 மணிக்கு வரும்.

    அதன் பிறகு நாகர்கோவி லுக்கு அடுத்த நாள் அதி காலை 3.35 மணிக்கு செல்லும். மறு மார்க்கத்தில் 7-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்படும் ெரயில், எழும்பூருக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும். இந்த ெரயில் மதுரைக்கு இரவு 8.55 மணிக்கு வரும்.

    12-ந் தேதி நாகர்கோவி லில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ெரயில், தாம்ப ரத்துக்கு அடுத்த நாள் காலை 4.10 மணிக்கு செல்லும். 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் .

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடக்கிறது.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடை பெற்றவுள்ளதையொட்டி மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வலியுறுத்தி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    பிரசித்திப்பெற்ற சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேவார திருப்பதிகம் அருளிய திருஞானசம்பந்தர் அவதரித்த தலம், காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கோயில் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு களிலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகைபுரிய உள்ளதாக தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்கள் சந்திபின்போது தெரிவித்தார்.

    இதனிடையே சீர்காழி ெரயில் நிலையத்தில் பல ெரயில்கள் நின்று செல்வதில்லை என வணிகர்கள், ெரயில் யணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சீர்காழி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரன், செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் மத்திய ரெயில்வே தலைவர், தெற்கு ெரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட மேலாளர், இயக்கவியல் மேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் விரைவு ெரயிலுக்கு சீர்காழி ெரயில் நிலையத்தில் நின்று செல்லவும், மயிலாடுதுறை-விழுப்புரம் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பல லட்சம் பக்தர்கள் பயனடைவர் என அதில் கூறியுள்ளனர்.

    • கர்நாடக மாநிலத்தில் இருந்து, மதுரை வழியாக தூத்துக்குடி, நெல்லைக்கு தீபாவளி சீசன் சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு யஸ்வந்த்பூர் - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்கப்படுகிறது.

    யஸ்வந்த்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06565) அக்டோபர் 18 மற்றும் 25 ஆகிய செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும்.

    நெல்லையில் இருந்து வருகிற 19, 26-ந் தேதி புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூர் செல்லும். பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    மைசூரில் இருந்து வருகிற 21-ந் தேதி மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி செல்லும். தூத்துக்குடியில் இருந்து வருகிற 22-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு மைசூர் செல்லும். யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ெரயில்கள் வருகிற 11-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • நாளை (1-ந் தேதி) தூத்துக்குடியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 2-ந் தேதி மதியம் 12.25 மணிக்கு மைசூர் செல்லும்.

    மதுரை

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி வருகிற 4 மற்றும் 11-ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) யஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன்கிழமை) நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    இதே போல மைசூர்-தூத்துக்குடி இடையே பண்டிகை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. இது இன்று (30-ந்தேதி) மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி செல்லும். மறு மார்க்கத்தில் நாளை (1-ந் தேதி) தூத்துக்குடியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் 2-ந் தேதி மதியம் 12.25 மணிக்கு மைசூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    ×