என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லைசன்ஸ்"
- லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
- ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் மாடசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விபத்தில்லா மாநகரமாக சேலத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப் பாக கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகரத்தில், அதிகளவில் விபத்துக்கள் நடந்த 75 இடங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். அந்த இடங்களில் இன்னும் 2 நாட்களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்பட உள்ளது. லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு சேலம் மாநகரத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணம் அடைந்தனர். நடப்பு ஆண்டில், நவம்பர் வரை 183 பேர் விபத்தில் இறந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இதுவரை போக்குவரத்து போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசாரின் அறிவுரைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின்போது தெரிவித்தார்.
- இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது.
- 140-க்கும் மேற்பட்டோருக்கு லைசென்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் மத்திய அரசின் ஸ்வாபிமான் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி கொடுக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் மையத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது. 45 நாட்கள் இந்த இலவச பயிற்சி நடைபெற்றது. முடிவில் 140-க்கும் மேற்பட்டோருக்கு இன்று சான்றிதழ், லைசென்ஸ் வழங்கும் விழா தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு மகேந்திரா பைனான்ஸ் டிவிஷன் மேலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற திருச்சி சி.இ.ஓ. சுவாமிநாதன், லயன்ஸ் கிளப் மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுநர் சவரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், லைசன்ஸ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.பி.ஸ்கில்ஸ் புராஜெக்ட் மேலாளர் ஜெய்சிங், டி.பி.ஸ்கில்ஸ் ஸ்ரீதர் , பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் சென்டர் தலைவர் ஆறுமுகம் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்