என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜஸ்பிரித் பும்ரா"

    • இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தவறவிட்டார். இதற்கிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆபரேஷன் நடைபெற்றது. இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. ஜூன் மாதம் 7-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவது கடினம் தான். இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பும்ரா மற்றும் முதுகு காயத்தால் அவதிப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு நியூசிலாந்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பும்ராவுக்கு தற்போது வலி எதுவுமில்லை. டாக்டரின் ஆலோசனைபடி ஆபரேஷன் முடிந்த 6 வாரத்துக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு பழைய உடல் தகுதியை எட்டுவதற்கான பயிற்சி திட்டத்தை பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 'முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

    இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.கே. வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சி.எஸ்.கே. அணியின் ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

    அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் விவரம் வருமாறு:

    ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

    • இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை.
    • பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

    இதனிடையே இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 23-ம் தேதி) துவங்குகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதே போன்று கே.எல். ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது அவரின் உடல்நிலையை பொருத்தே முடிவு செய்யப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். முன்னதாக முகமது சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விடுவிக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

    • உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை.
    • ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முக்கிய காரணமாக அமைந்தார்.

    கிட்டத்தட்ட 10 மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன் இந்திய அணிக்கு திரும்பினார். அதுவரை பும்ராவால் மீண்டும் பழைய மாதிரி பவுலிங் செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் பும்ரா தனது பவுலிங் மூலமாக ஒட்டுமொத்த உலகிற்கும் பதிலடி கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் கிளென் மெக்ராத், லசித் மலிங்காவின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை. ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட்டை ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆதிக்கம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் மிரட்டுகிறார்.

    பேட்ஸ்மேன்கள் பும்ராவை டாமினேட் செய்வதை பார்ப்பதே அரிதினும் அரிதான ஒன்று. எதிரணி வீரர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று பும்ரா அறிந்திருக்கிறார். தற்போதைய சூழலில் பும்ரா தான் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.

    மாடர்ன் டே கிரிக்கெட்டில் பும்ராவை நிச்சயம் சேர்க்கலாம். நாம் அனைவரும் கிளென் மெக்ராத், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்துள்ளோம். அவர்களின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது.

    என்று ரவி சாஸ்திரி கூறினார். 

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா என 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

    இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் விருது வென்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    இந்தப் பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானின் குர்பாசும் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஜூன் மாதத்துக்கன சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா வென்றுள்ளார்.

    • பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சை நகலெடுப்பதில் சிறுவனின் துல்லியம் அக்ரம் உட்பட பலரை கவர்ந்துள்ளது.
    • வீடியோ வைரலானதை அடுத்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் மகிழ்ச்சியடைந்தார்.

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை 30 வயதான ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். பும்ரா 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஜூன் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதையும் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை போன்ற உடல்மொழியுடன் பந்துவீசும் பாகிஸ்தான் சிறுவனின் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பார்த்த வாசிம் அக்ரம் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

     பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சை நகலெடுப்பதில் சிறுவனின் துல்லியம் அக்ரம் உட்பட பலரை கவர்ந்துள்ளது. பாகிஸ்தானின் இளம் வீரர் ஒருவர் ஜஸ்பிரித் பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு ஸ்டைலை அப்படியே செய்து அசத்தும் வீடியோ வைரலானதை அடுத்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் மகிழ்ச்சியடைந்தார்.

    உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா உலகளவில் பல ஆர்வமுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

    இந்த வீடியோ குறித்து பாகிஸ்தானின் ஜாம்பவான் அக்ரம் தனது எக்ஸ் தளத்தில், "வா ஜீ வா. தலைசிறந்த பும்ரா போன்றே, அந்த கட்டுப்பாட்டு மற்றும் செயலைம் பாருங்கள். இது தான் இன்று நான் பார்த்ததில் சிறந்த வீடியோ," என்று தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
    • வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இந்த இரு தொடர்களிலும் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, பும்ரா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார்.

    இதற்கிடையே, வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் டெஸ்டும், செப்டம்பர் 27-ம் தேதி 2வது டெஸ்ட்டும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

    பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இருந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது.

    இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். உள்ளூர் போட்டியான துலீப் டிராபியில் விளையாட இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக பும்ரா உருவெடுத்துள்ளார்.
    • அவரிடம், உங்களுக்கு மிகவும் சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை:

    இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் அவர், இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

    குறிப்பாக, டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும், இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.

    இதனால் தான் அவரை, பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் பவுலர் என விராட் கோலி பாராட்டினார். அத்துடன் வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான்கள் பும்ராவை பாராட்டி உள்ளனர்.

    இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு சென்னையில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, உங்களுக்கு சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சிறப்பாக பந்து வீசினால் தம்மை எந்த பேட்ஸ்மேன்களாலும் தடுத்து நிறுத்தமுடியாது என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

    இதற்கு நல்ல பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் உண்மையில் யாரும் எனக்கு மேல் இருப்பதை நான் விரும்பவில்லை.

    கண்டிப்பாக அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை சரியாக செய்தால் இந்த உலகில் யாரும் என்னை தடுத்து நிறுத்த டியாது என்று எனது தலைக்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

    எனவே நான் எதிரணியை பார்க்காமல் என்னைப் பார்க்கவேண்டும். என்னுடைய அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இருந்தால், எனக்கு நானே சிறந்த வாய்ப்புகளைக் கொடுத்தால் மற்ற அனைத்தையும் அதுவே பார்த்துக் கொள்ளும். அதனால் பேட்ஸ்மேன் என்னை விட சிறந்தவர் என்பதுபோல் நினைக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.

    • முதல் இரு போட்டிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2வது போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசென் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    டி வில்லியர்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பின்புறம் விளையாடுவதில் தனித்துவமானவர்கள்.

    இவர்கள் இருவரும் விளையாடும் விதத்தில் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்.

    இருவரும் பந்தை பின்புறமாக நேராக அடிக்கக் கூடியவர்கள். சூர்யகுமார் பைன் லெக்கில் அடிக்கும் சுப்லா ஷாட் எனக்கு வேண்டும்.

    நான் இப்படியான ஷாட்டை விளையாடியது இல்லை. கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஹசிம் அம்லா.

    தற்போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை சதத்தை அடிக்கக்கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் இருப்பார்.

    டி20 கிரிக்கெட்டில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
    • ஐசிசி பும்ராவின் ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.

    46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.

    534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இதனையடுத்து, பும்ராவின் பவுலிங் ஆக்சன் பந்தை எறிவது போல் இருப்பதாலேயே அவரை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்றும் ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ஐசிசி அவருடைய ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.

    இந்நிலையில், ரசிகர்களின் இத்தகைய விமர்சனத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் சேப்பல் எழுதியுள்ள தனது கட்டுரையில், "பும்ரா தலைமையில் இந்தியாவின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 104க்கு ஆல் அவுட்டானது. சில நேரங்களில் பும்ரா கிட்டத்தட்ட விளையாட முடியாதவராக இருந்தார்.

    பும்ராவின் ஆக்சன் பற்றி கேள்வி எழுப்பும் நான்சென்ஸ் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். அவருடைய ஆக்சன் தனித்துவமானது. அதே சமயம் அது சந்தேகத்துக்கு இடமின்றி சரியாக உள்ளது அப்படிப்பட்ட ஒருவரை விமர்சிப்பது ஒரு சாம்பியனையும் நம்முடைய விளையாட்டையும் இழிவு படுத்துகிறது" என்று எழுதியுள்ளார்.

    • பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை.
    • நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 1 - 0* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ந் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபின் வியப்பான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வால் 161 ரன்களை சிறப்பாக குவித்தார். ஆனால் தற்சமயத்தில் உலகின் சிறந்த வீரராக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை. உண்மையில் அவரை பார்க்கும் போது நகைச்சுவையானர் போல தெரிகிறது. ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை. என்று கூறினார்.

    இந்தியாவின் வெற்றி குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியதாவது:-

    பெர்த் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இப்படி சுத்தியால் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பெர்த் பொதுவாக விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடமாகும். இம்முறை அப்போட்டி வாகா மைதானத்தில் நடைபெறவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஆப்டஸ் மைதானத்தைப் பற்றியும் எனக்கு தெரியும்.

    வரலாற்றில் அங்கே ஆஸ்திரேலியா இப்படி நிறைய தோல்விகளை சந்திக்க மாட்டார்கள். அதையும் தாண்டி வென்ற இந்திய மிகவும் தைரியத்துடன் செயல்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். எனக் கூறினார். 

    ×