என் மலர்
நீங்கள் தேடியது "காடுகள்"
- காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது.
- அரசின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், பிரான்ஸ் நாட்டின் மொன்பொலியெப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜூலியன்ஜின் மலார்டு ஆடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் சமர்பித்தனர்.
பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டியில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறார்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்க இயலாது. அரசின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது என்றார்.
- வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
- 7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது.
கூடலூர்:
தமிழகத்தில் 5-வது புலிகள் காப்பகமாக கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் 21-வது புலிகள் காப்பகமாகும். இங்கு மேகமலை பகுதியில் உள்ள கண்டமனூர், எரசக்கநாயக்கனூர், சாப்டூர் ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள் பட்டா காடுகளாகவும், அதில் தனியார் ஏலக்காய், காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாதது, தொழிலாளர் பிரச்சனை, வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
ஹைவேவிஸ் வனப்பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் அடர் வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை வனத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேசி விலைக்கு வாங்கியுள்ளனர்.
7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது. இந்தியாவிலேயே வர்த்தகம் இல்லாத பயன்பாட்டுக்காக வனப்பகுதியில் புலிகள் காப்பகத்துக்கு என மாநில அரசு தனியாரிடம் நிலம் விலைக்கு வாங்குவது இதுவே முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் அதிக அக்கறை செலுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டு தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை அதிகரித்துள்ளனர்.
- மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
- தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.
சென்னை:
2022-23-ம் ஆண்டு சட்டமன்றத்தில் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களை சார்ந்து இருப்பதை குறைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.இந்த பூஞ்சோலைகள் உள்ளூர் மக்களுக்கு தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் இதன் மூலம் காடுகளின் மீதான உயிரின தாக்கமும் குறைகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.25 கோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிர்வாக ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கியது.
ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 639 சதுர அடி பரப்பில் உருவாக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் நுழைவுவாயில், நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த பூஞ்சோலைக்குள் தடிமரம், எரிபொருள், தீவனம், காய்-கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை நடவு செய்யப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக மாநில அரசினால் 83 மரகத பூஞ்சோலைகள் அமைக்க 2 கட்டமாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இதுவரை 29 மாவட்டங்களில் 75 பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
தற்போது மேலும் 5 மாவட்டங்களில் ரூ.4 கோடியே 25 லட்சம் செலவில் திண்டுக்கலில் 5 பூஞ்சோலைகள், பெரம்பலூரில் 4 பூஞ்சோலைகள், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 3 பூஞ்சோலைகள், திருவண்ணாமலையில் 2 பூஞ்சோலைகள் என மொத்தம் 17 பூஞ்சோலைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.
- சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.
- இம்மாத இறுதியில் ஒரு லட்சமாவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்க ளில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.
இம்மாத இறுதியில் ஒரு லட்சம் ஆவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்தும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தினை தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி யில் தொடங்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மியாவாக்கி அடிப்படையில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்படுகிறது. இதில் ஆயிரம் சதுர அடியில் 200 முதல் 250 மர கன்றுகள் நடலாம். தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 ஊராட்சிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இன்னும் 4 மாத காலத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், செயலாளர் முனைவர் ராம் மனோகர், இணைச் செயலாளர் பொறியாளர். முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் சௌமியா ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற செயலாளர் சக்தி, இயக்க உறுப்பினர்கள் முனைவர் சுகுமாரன், செல்வராணி, தன்னார்வலர்கள் லத்தீப், ரவிக்குமார், கார்த்தி, பிரபாகரன், குருபிரசாத், அருந்ததி, இளவரசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.