என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கண்டுபிடிப்பு"

    • 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - தேசிய குழந்தைகள் விருது 2023-ற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    புதிய கண்டுபிடிப்பு , கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரத்தீர செயல் புரிந்த தனி தகுதிப்படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக (பால் புரஷ்கார் )எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இவ்விருதுக்கான தகுதியுடையோர் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது.
    • எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சி குழுவினர் எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம், பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்சி அபடைட்டை செயற்கை முறையில் தயாரித்து உள்ளனர்.

    அதாவது முட்டை ஓடுகளில் இருந்து இந்த கனிமத்தை தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் முட்டை ஓடுகளை விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கும், பல் மற்றும் எலும்பு உள் வைப்புகளுக்கான பூச்சுகளாகவும், எலும்பு திசு பொறியியல் பயன்பாடுகளுக்கான சாரக் கட்டுகளாகவும் பயன்படுத்தலாம். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கு முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எலும்பு விரிசல்களை குணப்படுத்த ஐந்தில் ஒரு பங்கு செலவு குறையும்.

    இந்த முட்டை ஓடுகளை 100 டிகிரி சென்டிகிரேட்டில் மைக்ரோவேவ் கதிர்வீச்சை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எலிகள், முயல்கள், பன்றிகள் ஆகியவற்றில் ஹைட்ராக்சி அபடைட் சோதனை செய்யப்பட்டது.

    ஒரு கிலோ முட்டை ஓட்டில் இருந்து ஒரு கிலோ ஹைட்ராக்சி அபடைட்டை தயாரிக்கலாம். முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது. உலகளவில் முட்டை ஓடுகள் ஆண்டுக்கு 91 மில்லியன் டன்கள் கிடைக்கிறது.

    2023-24ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 142.77 பில்லியனாக இருந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 18 சதவீதமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது முட்டை ஓடுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ராக்சி அபடைட்டை கொண்டு விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்ட 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

    தற்போதுள்ள எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும். தற்போது இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஓட்டுகள் விலை உயர்ந்தவை ஆகும்.

    எனவே முட்டையில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி அதன் மூலம் எலும்பு விரிசல்களை சரிசெய்யும் இந்த முயற்சிக்கு பெரியார் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்த மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக கவர்னர் பேசினார்.
    • பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தாயில்பட்டி

    சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். மணிப்பூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, கல்லூரி முதல்வர் மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 635 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களுடைய கற்றல் மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாக உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கின்றனர். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் ஒரு செயலாகும்.

    கற்றல், கற்பித்தலில் உள்ள புதிய பரிமான வளர்ச்சியால் மாணவர்கள் கடினமான பாடங்களை எளிய முறையில் கற்றுக்கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி என்.ஏ.ஏ.சி. ஏ-பிளஸ் தரச்சான்றிதழ் பெற்று மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறது.

    நமது விஞ்ஞானிகள் கொரோனா நோய் தொற்று காலத்தில் புதிய வகை நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து உலக அளவில் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் மக்களின் உயிர்களை காத்து நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தனர்.

    இன்றைய இளைய தலைமுறையினர், மாணவர்கள் ஆச்சரியப்ப டத்தக்க வகையில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமைகளை கண்டுபிடித்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை வல்லரசாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

    அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமானது. இது இந்தியாவை வல்லராசாக்கும். தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துபவராக விளங்க மாணவர்கள் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். எழுந்திரு, விழித்திரு வெற்றி அடையும் வரை முயற்சி செய் என்று விவேகானந்தர் கூறினார்.

    மாணவர்கள் தங்களது ஆரோக்கியத்தை ேபணிக்காக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒழுக்கம், கடினஉழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றை பற்றி எடுத்துக்கூற வேண்டும். இதன் மூலம் இளைய தலைமுறையினர் வளர்ந்து வரும்போது அவர்களது குடும்பம், சமுதாயம் மகிழ்ச்சிஅடைகிறது. இதனால் நாடும் வளர்ச்சி அடைகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×