என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை"

    • டவர் அமைக்க ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன.
    • தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது.

    குள்ளனம்பட்டி:

    இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அவசியமாகிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் மூலம் உலகமே கையடக்கத்தில் வந்துவிடுகின்றன.இந்நிலையில் அதிகப்படியானோர் ஆன்லைன் வகுப்புகளுக்கு இண்டர்நெட் பயன்படுத்துவதால், அலைக்கற்றை வேகம் குறைய வாய்ப்புள்ளது.

    இதனால் அதிகப்படியான செல்போன் டவர்கள் அமைப்பது அவசியம்.இதை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி கைவரிசை காட்டி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடிவதில்லை.எனவே மோசடி கும்பல்கள் உங்களை தொடர்பு கொண்டால் ஏமாற வேண்டாம்.

    அதேபோல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி சந்திரன் கூறியதாவது: செல்போன் டவர் அமைக்க காலி இடம் அல்லது மொட்டை மாடி இருந்தால் ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன. இதற்காக உரிய அனுமதி பெற்றதாக போலி கடிதத்தையும் வைத்திருக்கின்றனர்.

    இதை நம்பும் பலர் டவர் அமைக்க இடம் கொடுப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்.அவ்வாறு ஏமாறும் நபரிடம் 'உங்களது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் செலுத்துவதற்கு, முன்பணம் ரூ.1.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும். இந்த தொகை ரூ.80 லட்சத்துடன் சேர்ந்து வந்துவிடும்' என்றும் கூறுகின்றனர்.

    இதுபோன்ற மோசடி வலையில் விழுபவர்கள் ரூ.1.5 லட்சம் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.உண்மையில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளாமல் ரூ.20 லட்சம் கூட போகாத இடத்துக்கு ரூ.80 லட்சம் அட்வான்ஸ் கிடைக்கிறதே என்று நம்பி சிலர் பணத்தை இழந்துவிடுகின்றனர்.

    தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது. இதனால் புகார் தெரிவித்தாலும் அவர்களை பிடிக்க முடிவதில்லை. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு தெரிவித்தார்.

    • சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • எப்படியெல்லாம் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், குற்றங்களில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாது காத்துக்கொள்வது போன்ற தகவல்களை தெரிவித்தனர்.

    சேலம்:

    சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சேலம் சைபர் கிரைம் கூடுதல் காவல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் மேற்பார்வையில் சேலம் மாநகர சைபர் கிரைம் இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் நேற்று தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் ஆகியோர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சக்திவேல், தேவிபிரியா செந்தில்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது.

    எப்படியெல்லாம் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், குற்றங்களில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாது காத்துக்கொள்வது போன்ற தகவல்களை தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் தங்களது தனிப்பட்ட விபரங்களை பகிர வேண்டாம் எனவும், நண்பர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கி அதன் மூலம் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.

    தங்களுடைய செல்போன் சிம்கார்டுகள் 4 ஜி யில் இருந்து 5 ஜி க்கு மாற்றக்கோரி வரும் அழைப்புகளில் கவனமுடன் இருக்க வேண்டும். வங்கி கிரெடிட் கார்டு களின் கடன் வசதியை அதிகப்படுத்தி தரப்படுவதாக வரும் அழைப்புகளை நம்பி குருஞ்செய்தி எண்களை கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுத்தினர். மேலும் வங்கி கணக்கு சம்மந்தமாக வரும் எஸ்.எம்.எஸ். லிங்குகளில் சென்று தங்களது வங்கி விபரங்கள் பதிவு செய்ய வேண்டாம் வெளிநாட்டில் வேலை, குறைந்த நாட்களில் இரட்டிப்பு லாபம் போன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு தொடர்புகொண்டால் உடனடியாக இழந்த பணத்தை மீட்டுத்தர முடியும் என தெரிவிக்கப்பட்டது.

    ×